Pages

Pages

Thursday, April 19, 2012

அர்த்த சக்ராசனம்

மனம் : முதுகெலும்பு

மூச்சின் கவனம் : உடலை வளைக்கும் போது உள்மூச்சு. ஆசனத்தின் போது இயல்பான மூச்சு. தளரும்போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன. முதுகுத்தண்டின் வளைந்து கொடுக்கும் தன்மை நீடிக்கின்றது. இது பாதஹஸ்தாசனத்தை பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அந்த ஆசனத்தின் பலன்களை இதுகூட்டுகின்றது. சுவாச உறுப்புகள் ஓய்வடைகின்றன.


குணமாகும் நோய்கள் : ஆஸ்துமா கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன. தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப்பிடிப்பு நீங்குகிறது.
ஆன்மீக பலன்கள் : உடலின் சமநிலை, தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கின்றது.
எச்சரிக்கை : இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதைத் தவிர்க்கவும். அவர்கள் விழாதவாறு கால்களை சற்று அகற்றி வைத்துக்கொண்டு செய்யலாம். முதுகெலும்பு தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.


No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments