Pages

Pages

Friday, September 28, 2012

மிட்டாய் கதை - வெள்ளைக் காகிதம்

நான் படித்த சில புத்தகங்களில் இருந்து எடுக்க பட்ட கதைகள்..

கலீல் கிப்ரான் எழுதிய இந்த 'மிட்டாய் கதை' புத்தகத்தை திரு.சொக்கன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

பால் வெள்ளைக் காகிதம்

காலைப் பனிபோல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமான வளாக்கும்' என்று அலட்டிக்கொண்டது - நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன்; காலம் முழுவதும், நான் இவ்வாறே இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாகினாலும் பரவாயில்லை. நான் பொறுத்துக்கொள்வேன். அனால் கருமையில் இருள்கைகள் என்னை தொட அனுமதிக்கமாட்டேன்.

              தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப் புட்டி , குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக்கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.
************

Image by FlamingText.com

No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments