Pages

Pages

Wednesday, November 7, 2012

கேரட் சாதம்

கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இதனை அதிகம் சாப்பிட்டால், கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
கேரட் - 1 கப் (துருவியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 1
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:
முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, அதில் துருவிய கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர், கேரட் ஓரளவு வெந்ததும், அதில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கேரட் வேகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
பிறகு அதனை சாத்துடன் சேர்த்து, கிளறி பரிமாறவும்.
இப்போது சுவையான கேரட் சாதம் ரெடி!!!


Image by FlamingText.com

No comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments