Pages

Subscribe:

Friday, September 28, 2012

மிட்டாய் கதை - வெள்ளைக் காகிதம்

நான் படித்த சில புத்தகங்களில் இருந்து எடுக்க பட்ட கதைகள்..

கலீல் கிப்ரான் எழுதிய இந்த 'மிட்டாய் கதை' புத்தகத்தை திரு.சொக்கன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

பால் வெள்ளைக் காகிதம்

காலைப் பனிபோல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமான வளாக்கும்' என்று அலட்டிக்கொண்டது - நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன்; காலம் முழுவதும், நான் இவ்வாறே இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாகினாலும் பரவாயில்லை. நான் பொறுத்துக்கொள்வேன். அனால் கருமையில் இருள்கைகள் என்னை தொட அனுமதிக்கமாட்டேன்.

              தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப் புட்டி , குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக்கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.
************

Image by FlamingText.com

தியானம் ஐந்து படிகள் -1

          தியானம் ஐந்து படிகள் கொண்டது. ஒவ்வொரு படிக்கான விளக்கத்தை ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கலாம்.

ஆழமாக சுவாசித்தல்:

உங்களுடைய உணர்வு முழுவதும் சுவாசமாக மாற வேண்டும்.
முதல் ஏழு நிமிடங்களில் நீங்கள் வஜ்ராசன நிலையில் அமர்ந்து, கண்களை மூடியும், உங்கள் கைகளை இடுப்பின்மேல் வைத்தும் சீரற்ற முறையில் சுவாசிக்க வேண்டும்.

சுவாசத்திலேயே குவியச்செய்யுங்கள்.

உங்களுடைய இருப்பே சுவாசமாக மாற வேண்டும்.
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் பெற சக்தி உடலில் மூலாதார சக்கரத்திலிருந்து சஹஸ்ராரத்தை நோக்கிப் பாய வேண்டும். நமது உடலில் சக்தியானது சகஸ்ரார சக்கரத்தில் இருந்து மூலாதாரச் சக்கரத்தை நோக்கி கிழ் நோக்கியப் பாய்கிறது. வஜ்ராசன நிலையில்  அமரும்போது நமது சக்தி மேல்நோக்கி நகர்வதற்கு உதவுகிறது.

எந்த ஒரு ஆன்மீகப் பயிற்சியையும் ஒருவர் துவங்குவதற்கு சுவாசமே சிறந்த இடமாகும். பல்வேறுபட்ட தியான நுட்பங்களில் வெவ்வேறு வகையான முறைகள் உள்ளன. சிலர் சாட்சியாகவும், சிலர் மந்திரங்களையும், வார்த்தைகளையும் திரும்பச் சொல்லி தியானத்தில் ஈடுபடுவர். அனால் எனக்கு இம்முறைகளில் 'சுவாசமே' சிறந்த நிலையான ஆன்மீகப் பயிற்சிக்கு உதவி இருக்கிறது என்று சில ஞானிகள் சொல்கின்றனர்.

நமது உடலில் இரண்டு விதமான அமைப்புகள் உள்ளன. ஒன்று நம்மால் கட்டுப்படுத்தி செயல்படும் அமைப்பு. (Voluntary Actions) முடியாத செயல் அமைப்பு.(invaluntary Actions)

நம்முடைய கைகளையும் கால்களையும் அசைப்பது நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய செயல்களாகும்.

உதாரணதிற்கு  தேவைப்படும் பொழுது உங்களால் கைகளையும், கால்களையும் அசைக்க முடியும். அனால் உங்களால் உங்கள் மூளையின் இயக்கத்தையோ, இதயத்தின் துடிப்பையோ கட்டுபடுத்த முடியாது. இது நம்மால் கட்டுபடுத்த முடியாத செயலுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

ஆனால் சுவாசம் என்ற அமைப்பு தானாகவும், நம்மால் கட்டுபடுத்தக்கூடியாதாகவும் இருக்கிறது. நீங்கள் விழிப்புணர்வு நிலையில் இல்லாமல் இருந்தால்கூட சுவாசம் உங்களில் நடந்து கொண்டேயிருக்கும்.

நீங்கள் வேறு எதன் மீதாவது ஈடுபாடு கொண்டிருந்து கவனத்தைத் திருப்பனாலும் உங்களால் மூச்சி விடுவதை நிறுத்த முடியாது. அப்படி சுவாசத்தை நிறுத்தினால் அது மிகப்பெரிய விளைவுகளை உண்டாக்கும்.

ஒரு உண்மை என்னவென்றால், உங்கள் உடலில் உள்ள சில உறுப்புகளின் இயக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாததற்குக் காரணம் இந்த காப்பாற்றும் தன்மை தான். 'வாழவேண்டும்' என்ற ஆசை இருப்பதினால் தான் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் சுவாசமே நீங்கள் வாழ வேண்டும் என்ற ஆசையினால்தான் நடந்து கொண்டிருக்கிறது.

நீங்கள் கவலைப்படும்போது உங்களின் சுவாசத்தில் மாற்றம் ஏற்படுகிறது. அதுவே நீங்கள் கோபத்தில் இருக்கும் பொது உங்களின் சுவாசம் மாறுபாடாக இருகின்றது.

உங்களின் சுவாசம் உணர்சிகளோடு நேரடியாக தொடர்புடையது. உங்களின் மனநிலை மாறிக் கொண்டிருக்கும் போதே உங்களின் சுவாசமும் மாறிக் கொண்டிருகிறது.

மனமும், சுவாசமும் மிக நெருக்கமான தொடர்புடையது. நீங்கள் சுவாசிப்பதை நிறுத்தி விட்டால், நீங்கள் யோசிப்பதற்கு சிரமப்படுவதை உணரமுடியும்.

உங்களுடைய ஆசைகளும், சுவாசமும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆழ்ந்து பார்த்தீர்களானால் உங்களுடைய ஆசை அதிகமாக இருக்கும்போது சுவாசம் வேகமாகவும், கனமாகவும் இருக்கும். உங்களுடைய ஆசைகள் குறைவாக இருக்கும்போது நீங்கள் மிகவும் ஓய்வாகவும், அமைதியாகவும் இருப்பீர்கள்.

சுவாசமானது ஆழமாகவும், காற்றை அதிக அளவு உள்ளிழுக்கும் படியும் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆழமான சீரற்ற சுவசமுறை உங்கள் தசைகளில் உள்ள இறுக்கத்தையும், சமஸ்காரங்களையும் விடுபடுத்த ஆரம்பித்துவிடும்.

குழந்தைகளின் சுவாசம் ஆழமாகவும், ஆனந்தமாகவும் இருப்பதாய் நீங்கள் பார்க்க முடியும். அவர்கள் குறைந்த அளவு காற்றை மேம்போக்காக சுவாசிக்க மாட்டார்கள்.

அனால் அவர்கள் வளர வளர சமுதாயம் கொடுத்த கட்டுப்படுகளினாலும், அவர்களும்மு ஏற்பட்ட வழிகள், சந்தோசங்கள், குற்ற உணர்சிகள், நம்பிக்கைகள், மன உளைச்சல்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றினாலும் அவர்களின் சுவாசத்தின் தரம் முழுவதுமாக மாறிவிடுகிறது.
*********

இரண்டாம் நிலை  இங்கே பார்க்கவும் 


Image by FlamingText.com

Search This Blog