Pages

Subscribe:

Friday, September 28, 2012

மிட்டாய் கதை - முத்து

முத்து 

ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது - 'ஐயோ, என்னால் வலி தாங்கமுடியவில்லையே.'

'ஏன்? என்னாச்சு?' என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.

எனக்குள் எதோ ஒரு கனமான உருண்டை பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி.

இதைக் கேட்டதும், இரண்டாவது சிப்பிக்குப் பயங்கர சந்தோஷம். பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆஹா! கடவுளுக்கு நன்றி, எனக்கு அப்படி எந்த வலியையும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்!'

இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது - உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம், வலியை தாங்க விரும்பாத நீ, எப்போதும் எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்கவேண்டியது தான். ஆனால், இப்போது உன் நண்பனைச் சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அவனுக்குப் பெருமை தேடித்தரும்.
*********


Image by FlamingText.com

மிட்டாய் கதை - வெள்ளைக் காகிதம்

நான் படித்த சில புத்தகங்களில் இருந்து எடுக்க பட்ட கதைகள்..

கலீல் கிப்ரான் எழுதிய இந்த 'மிட்டாய் கதை' புத்தகத்தை திரு.சொக்கன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

பால் வெள்ளைக் காகிதம்

காலைப் பனிபோல் தூய்மையாக இருந்த ஒரு வெள்ளைக் காகிதம் 'நான் ரொம்ப சுத்தமான வளாக்கும்' என்று அலட்டிக்கொண்டது - நான் பிறக்கும்பொழுதே தூய்மையாகப் பிறந்தேன்; காலம் முழுவதும், நான் இவ்வாறே இருப்பேன்; என்னை எரித்துச் சாம்பலாகினாலும் பரவாயில்லை. நான் பொறுத்துக்கொள்வேன். அனால் கருமையில் இருள்கைகள் என்னை தொட அனுமதிக்கமாட்டேன்.

              தூய்மையற்றவர்கள் யாரும் என் பக்கத்தில்கூட வரமுடியாது.

இந்தப் பேச்சைக் கேட்ட மைப் புட்டி , குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. அந்தக் காகிதத்தின் பக்கத்திலேயே செல்வதில்லை என்று முடிவுகட்டிக்கொண்டது.

பல வண்ண பென்சில்களும் இதைக் கேட்டன. அவையும், அந்தக் காகிதத்தை நெருங்கவில்லை.

ஆகவே, அந்த பால் வெள்ளைக் காகிதம், அதன் ஆசைப்படி, என்றென்றும் தூய்மையோடும் கற்போடும் வாழ்ந்தது.

வெறுமையாகவும்.
************

Image by FlamingText.com

Search This Blog