Pages

Subscribe:

Thursday, September 26, 2013

அம்மாக்களுக்கு ஒரு கைடு

முதல்முறை தாயாகும்போது ஏற்படும் எதிர்பார்ப்பு சந்தோஷம், அக்கறை, பரவசமெல்லாம் இரண்டாவது பிரசவத்தின் போது அதே அளவில் இருபதில்லை. உங்களுக்கு தாய்மை புதிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், பிறக்கபோகும் குழந்தைக்கு இந்த உலகம் புதிது, சுவாசம் புதிது, ஸ்பரிசம் புதிது, அம்மா புதிது, எனவே முதல் குழந்தையை வரவேற்ற மனநிலையுடன் இரண்டாவது குழந்தையையும் வரவேற்கத் தயாராகுங்கள்.
இரண்டாவது குழந்தையை கருவில் சுமக்கும் மாதங்களிலேயே அந்த புது உறவை உங்கள் முதல் குழந்தைக்கு பக்குவமாக அறிமுகப்படுதிவிடுங்கள். அம்மா வயித்துல உனக்காக உன்கூட சேர்ந்து விளையாட ஒரு தம்பி/தங்கச்சி பாப்பா வளருது... என்று சொல்லி வாருங்கள்.

பாப்பா பிறந்ததுக்கு அப்பறம் கொஞ்ச நாளைக்கு அம்மா ரொம்ப டயர்டா இருப்பேன். அப்போ குளிக்க வைக்க, சாப்பாடு ஊட்ட,ஸ்கூல்-ல விட, ஹோமே வொர்க் செய்ய வைக்க எல்லாம் அப்பா, அம்மாச்சி, தாத்தாதான் உன்னை கவனிச்சுக்குவாங்க. என்று முன்கூட்டியே முதல் குழந்தியிடம் வேண்டுகோளாக விண்ணப்பம் போட்டுவிடுங்கள்.

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் குறைந்தபட்சம் மூன்று வருட இடைவெளி இருந்தால் தாய்க்கு வளர்ப்பு சிரமமும், செய்கு புரிதல் செரமமும் குறைவால இருக்கும்.

குழந்தை பிறந்த பிறகு, புதுவரவை முதல் குழந்தையின் எதிரில் நீங்களோ, மற்றவர்களோ அதிகமாக கொஞ்சுவதை தவிருங்கள். கூடவே நீயும் என்னைக்கும் எனக்கு ஸ்பெஷல் என்று உங்கள் முதல் குழந்தைக்கான அன்பை தொடந்து அதனிடம் உறுதிசெய்யுங்கள்.

பவுடர் டப்பா, வாக்கர் என்று பிறந்த குழந்தைக்கு மாதல் ஒரு புதிய பொருள் வாங்கிக்கொண்டே தான் இருக்க நேரிடும். அதில் எல்லாம் முதல் குழந்தை ஏங்கிப்போய்விடாமல் இருக்க, இந்த குழந்தைக்கு புதிதாக ஒரு பொருள் வாங்கும்போது கேம்ஸ், பென்சில் பாக்ஸ், என்று ஏதாவது வாங்கிகொடுங்கள். மேலும் குட்டிப் பாப்பாவுக்கு பொருட்களை வாங்கும் பொது அதன் சாய்ஸ் முதல் குழந்தையிடம் விட்டுவிடுங்கள். தம்பிக்கு என்ன வாங்கலாம் என்று கேளுங்கள்.

நிறைய முடி, பெரிய கண்கள், கொழுகொழு தேகம் என்று இரண்டாவது குழந்தையை கொண்டாடும் போது எக்காரணம் கொண்டும் அதை முதல் குழந்தையுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். ஒப்பீடுகளெல்லாம் முதல் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மையையும், தன உடன்பிறப்பின் மீதான தீராத பகையையும் (சிப்ஸிங் ரைவல்ரி) ஏற்படுத்தலாம். ஜாக்கிரதை.


ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகள் சகோதரர்களாக வளர்வதும், பங்காளியாக வளர்வதும் வளர்ப்பு முறையில் தான் இருக்கிறது. பின்னாளில் உங்கள் குழந்தைகளுக்கு இடையேயான நெருக்கம் எள் அளவும் குன்றாமல் பாசமலர்கலாக இருக்க இப்போதே அதற்கான விதையிடப்பட வேண்டும். குழந்தைகள் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாற்ற சொல்லிகொடுங்கள்.



(*** பின் குறிப்பு : இதுக்கு தான் சொல்றாங்க ஒரு குழந்தை போதும்-னு.)

Image by FlamingText.com

Search This Blog