Pages

Subscribe:
Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts
Showing posts with label தெரிந்துகொள்வோம். Show all posts

Tuesday, April 2, 2019

திருப்பதியில் இருப்பது முருகனா?

                                                                          Please Subscribe : V2 Channel

திருப்பதியில் தங்கம் வைரம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட அந்த சிலை பெருமாள் சிலையா அல்லது முருகன் சிலையா தெரியுமா?

அருணகிரிநாதர் 
எந்தவொரு ஆழ்வாரும் திருப்பதியின் பெருமை பற்றி பாடியதில்லை. அருணகிரிநாதர் திருப்பதியில் இருப்பது முருகன் என்பதை அறிந்து வேந்த குமரா குகசேந்தமயூர வடவேங்கட மாமலையில் உறையோனே என்று பாடியுள்ளார்.

பெயர்க்காரணம் 
வெங்கடேஸ்வரபெருமான் என்று வைணவப்பெயரில் ஈஸ்வரன் என்ற சைவப் பெயர் எப்படி வந்தது வேலை உடைய ஈஸ்வரன் என்பதே வெங்கடேஸ்வரன் என்று பொருள் தரும்.
குறிஞ்சி 
குன்று மலை இருக்கும் இடமெல்லாம் குறிஞ்சிக் கடவுள் முருகனே தெய்வம். அப்படி இருக்க திருப்பதி மலைமீது இருக்கும் சாமி முருகனாக இருப்பதில் ஆச்சர்யம் தேவையில்லை தானே.

திருவேங்கடம்  
திருவேங்கடம் = திரு + வேல் + இடம் திருவேலிடம் என்ற சொல்லே காலப்போக்கில் திருவேங்கடமாக மருவியிருக்கும்.

கோயில் அமைப்பு 
கோயில் அமைப்பு ஆகம முறைப்படி ஒரு முருகன் கோயில் எப்படி கட்டியிருக்கவேண்டுமோ அப்படித்தான் கட்டியுள்ளனர். விஷ்ணு கோயிலைப் போல் அல்ல.
கருடாழ்வார்  
கருடாழ்வார் பெரும்பாலான வைணவக் கோயில்களில் இருக்கும் கருடாழ்வார் இவ்வளவு புகழ் வாய்ந்த திருப்பதி கோயிலில் ஏன் இல்லை.

மறைக்கப்பட்ட தமிழ் கோயில் சுவர் முழுக்க சுண்ணாம்பால் மறைக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களை நீங்கள் பார்க்கமுடியும். அதற்கான காரணம் தெரியுமா?ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்ததமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?
கரங்கள் 
கரங்கள்   
ஏழுமலையானின் கரங்களை பாருங்கள். அப்படியே முருகன் சிலையில் இருக்கும் கரங்களின் வடிவத்தையே பெற்றுள்ளது.

சான்று  
கிருபானந்த வாரியார் கூட இதுகுறித்து தனது கந்தபுராண சொற்பொழிவுகளில் அடிக்கடி தன் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

கொடிமரம்  
கொடிமரம் இல்லாத விஷ்ணு, பெருமாள் கோயில் எங்கேயாவது பார்த்ததுண்டா நீங்கள்?

தெப்பகுளம் பெருமாள் கோயில் என்றாலே தெப்பக்குளம் இல்லாமல் இருக்குமா?

போலி கரங்கள் சங்கும் சக்கரமும் தனியாக ஒட்டப்பட்டுள்ளதாகவும், இரு கரங்கள் போலியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் பலர் கூற கேட்டிருக்கிறோம். கோயிலுக்கு செல்லும்போது கூர்ந்து கவனியுங்கள்.

Please subscribe : V2 Channel

Image by FlamingText.com

Friday, August 3, 2018

கணவனை கொன்ற ராமனை ராவணன் மனைவி மண்டோதரி சந்தித்தது ஏன் தெரியுமா?

ராவணன் சீதையின் மீது ஆசைப்பட்டதும் ராமனுக்கும் ராவணனுக்கும் போர் நடந்தது, ராமன் போர்க்களத்தில் ராவணனை அழித்த பிறகு, ராவணனின் மனைவி ராமனிடம் வந்து பேசிய கதை பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னுடைய கணவனை கொன்று வெறி தீர்த்துக் கொண்ட ராமனிடம் அப்படி என்னதான் பேசினாள் மண்டோதரி.

ராவணனை அழித்த பிறகு, போர்க்களத்தில் ராமன் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண், அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை ராமன் நிழலின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார். உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்.

நீ யாரம்மா?" என்று ராமன் இந்த பெண்மணியிடம் கேட்க, அதற்கு "நான் ராவணனின் மனைவி மண்டோதரி. என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இறுமாந்திருந்தேன். ஆனால் அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால், அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன். மேலும். க்ஷத்திரிய குல தர்மப்படி, கணவனை இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நீ வரவில்லை. ஆச்சரியப்பட்டேன்.
 
 
இங்கே நீங்கள் (ஒரு பெண்ணின்) என்னுடைய நிழல் உங்கள் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும்போதே, உங்களுடைய சிறந்த குணத்தைப் பற்றி நான் தெரிந்து கொண்டேன். அதிலுள்ள உங்களுடைய குணத்தைப் பற்றி நான் என்ன சொல்வேன்? இதற்கு முன்பாக, ஏற்கனவே என்னுடைய கணவரிடம் கூட பலமுறை நான் சொல்லியிருக்கிறேன். ரகு வம்சத்தில் பிறந்திருக்கின்ற ராமன் மனிதப் பிறவி அல்ல. அவர் இந்த உலகத்தைக் காக்கின்ற பரம்பொருளாகத் தான் இருப்பார். இந்த உலகைக் காக்க விஸ்வரூபம் எடுத்து வந்தவர் தான் அவர். ஏனெனில் அவர் தன்னுடைய உடலின் ஒவ்வொரு அங்கங்களிலும் இந்த பிரபஞ்சத்தையே தாங்கி நின்று கொண்டிருக்கிறார் என்று நான் கூறியிருக்கிறேன்.

இந்த பிரபஞ்சத்தில் இருக்கிற பாதாள உலகம் தான் அவனுடைய பாதங்கள். பிரம்மலோகம் தான் ராமனுடைய தலை. இந்த உலகுக்கே வெளிச்சம் தரக்கூடிய சூரியன் தான் ராமனுடைய கண்கள். இந்த ஆகாயத்து மேகங்கள் தான் அவருடைய தலைமுடி. இவற்றையெல்லாம் விட, ராமன் கண்ணிமைகளை மூடி திறப்பது தான் நமக்கு இரவு பகலாக மாறி மாறி வருகிறது. எட்டு திசைகளும் தான் அவருடைய செவிகள். இவை எல்லாவற்றையும் விட, ராமனுடைய பெயர் தான் இந்த உலகில் நாம் செய்த எல்லா பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அவன் நான்கு வேதங்களின் சாரமாக விளங்கக்கூடியவன். ராமன் தெய்வ வடிவம் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதனால் அவரிடம் பகை கொள்ளாமல் வஞ்சகத்தை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்' என்று மன்றாடிக் கேட்டேன். அதை அவர் செவி கொடுத்துக் கேட்கவில்லை.

இவ்வளவு நான் எடுத்துக் கூறியும் என்னுடைய கணவர்அதை கேட்க மறுத்துவிட்டார். உங்களுடைய வெற்றிக்கு காரணம், என் கணவரிடம் இல்லாத ஒரு நல்ல குணம் உங்களிடத்தில் இருந்தது தான். அதுதான் உங்களுடைய ஏக பத்தினி விரதத்தன்மை. அதனால் தான் யாராலும் வெல்ல முடியாத வரம் பெற்ற என்னுடைய கணவரை நீ வென்றாய்," என்று கூறினாள்.

மண்டோதரி பேசுவதை மிக அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ராமன், லேசாக சிறு புன்னகையை மட்டுமே அவளிடம் உதிர்த்து விட்டு, தன்னுடைய ஒரிஜினல் சுய வடிவமான நாராயண வடிவத்தில் மண்டோதரிக்குத் திசனம் கொடுத்தார்.

ஹனுமனின் ஐயம்.
ராமாயணக் காப்பியத்தில் மிகச்சிறந்த பாக்கியசாலியாக மண்டோதரி கருதப்பட்டாள். ஏன் தெரியுமா?... ஹனுமன் சீதையைத் தேடி இலங்கையில், ராவணனின் அந்தப்புரத்துக்கு சென்ற பொழுது, அங்கு ஹனுமனின் கண்களில் மிக ஒழுங்கான,அழுத்தம் திருத்தமாய், நேர்த்தியாய் உடை அணிந்த பெண்ணாக மண்டோதரி காட்சி அளித்தாள். அதைக்கண்ட ஹனுமான முன் பின் சீதையை நேரில் பார்த்ததில்லை என்பதால்,இவள் தான் சீதையாக இருக்குமோ என்று கூட சந்தேகப்பட்டார். அந்த அளவுக்கு அழுத்தம் திருத்தமாக உடை அணிந்திருந்தாள். அந்த அளவுக்கு ஒழுக்கம் நிறைந்தவளாக காட்சி தந்ததோடு அவ்வாறே விளங்கவும் செய்தாள். அந்த காரியத்துக்காகத் தான் கொடியவனான ராவணனுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அவருக்கு நாராயண தரிசனம் கிடைக்கப் பெற்றது.

Friday, May 13, 2016

SUGAR NOT GOOD FOR HEALTH

இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி:
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும்.
ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Image by FlamingText.com

Monday, March 14, 2016

சந்தன மரம் வளர்க்கலாம்

                                                                           Please Subscribe : V2 Channel

உங்கள் நிலத்திலும் சந்தன மரம் வளர்க்கலாம் சட்டம் அனுமதிக்கிறது...




   தெய்வங்கள் அனைத்துக்கும் சந்தன அபிசேகம் செய்யப்படுகிறது. மனிதனுக்கு நெற்றியிலும்,நெஞ்சிலும், உடல் முழுக்கவும் பூசிக்கொள்ள பயன்படுகிறது. சோப்பு,மாலை என்று பல விதங்களில் பயன்படுகிறது.

இப்படி பயன்தரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்கவும் முடியாது. தப்பித்தவறி தானே வளர்ந்திருந்தால் கூட அதை வெட்டவும் முடியாது. காரணம், பட்டா நிலத்தில் சந்தன மரம் அதுவாக வளர்ந்திருந்தால் கூட அது அரசுக்கு தான் சொந்தம் என்று தான் சட்டம் இருந்தது. சந்தன மரத்தை வெட்டி விற்றால் கோடீசுவராக மாறி விடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் இப்போதும் கூட காடுகளில் இருக்கும் சந்தன மரங்கள் தேக்கு கருங்காலி மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவது தனிக்கதை. இது இருக்கட்டும். இப்போது சந்தன மரங்களை நாமே வீட்டில் இருக்கும் காலி இடத்தில் வளர்க்க முடியும். தற்போது சட்டம் இதை அனுமதிக்கிறது. இது பற்றிய ஒரு பார்வை...

மலைப்பகுதிகள் பார்க்க ரம்மியமானவை. காரணம் மனிதனின் காலடிகள் அடர்ந்த காடுகளுக்குள் அவ்வளவாக படுவதில்லை.அதனால் அவை அவற்றின் கற்பை இழக்காமல் கன்னி காத்து வருகின்றன. மனிதனின் கண்ணுக்கு தெரியவராமல் பல வித மரங்கள் பெருங்காடுகளில் வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. அவற்றில் தேக்கு,கடம்பு,மஞ்சள் கடம்பு,தோதகத்தி,சந்தனம் போன்றவை முக்கிய மரங்களாகும். இந்த மரங்கள் எல்லாம் இயற்கை தந்த வரம். இவை வானிலிருந்து மழையை ஈர்த்து மனிதனுக்கு சிற்றோடையாக, ஆறாக தருகின்றன. காற்றை தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. மலைவாழ் ஆதிவாசிகள் தேன்சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.

ஆனால் நகரத்தில் உள்ள சில பேராசை பிடித்த மனிதர்களால் இப்படிப்பட்ட காடுகளிலிருந்து அதிகம் வெட்டி கடத்தப்படுவது சந்தன மரங்கள் தான். காரணம் சந்தனத்திற்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி. சந்தன மரம் பரவலாக வளர்க்கப்பட்டு விட்டால் இந்த கிராக்கி குறைந்து காடுகளில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவது குறைந்து விடும்,சுற்றுப்புறசூழலை பாதுகாக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு 2008 நவம்பர் முதல் ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதன்படி சந்தன மரங்களை வளர்க்க விருப்பமுள்ள உழவர்கள் அல்லது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.

சந்தன மரங்களை வளர்க்க விரும்புபவர்கள் தங்கள் நிலங்களில் சந்தன மரக்கன்றுகளை வாங்கி நடலாம்.

நட்ட பிறகு நடப்பட்ட நிலத்தின் பட்டா எண், எத்தனை கன்றுகள் அந்த நிலத்தில் நடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை வருவாய்த்துறை அடங்கலில் பதிவு செய்து அதற்கான சான்றிதழை வருவாய்த்துறையிடமிருந்து வாங்கி மாவட்ட வன அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் மரங்களை நன்றாக வளர்ந்து வெட்டும் நிலைக்கு வரும் போது மாவட்ட வன அலுவரிடம் வெட்ட போகிறோம் என்பதை தெரிவித்து ஒப்புதல் வாங்க ஒரு விண்ணப்பத்தை தர வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வன அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு அந்தமரங்களை வெட்ட அவர்களே ஏற்பாடு செய்வார்கள்.

இப்படி வெட்டப்படும் மரங்களை அரசாங்க மரக்கிடங்குக்கு கொண்டு வந்து வைரம் பாய்ந்த பகுதியை மட்டும் பிரித்து எடுப்பார்கள். பிறகு அந்த கட்டைகளை தரத்தின் அடிப்படையில் 19 வகையாக பிரித்து விற்பனை செய்வார்கள்.

விற்பனைத் தொகையில் 80 சதவீதம் மரத்தை நட்டு வளர்த்த நிலத்தின் சொந்தக்காரருக்கு சேரும். மீதமுள்ள 20 சதவீதம் தொகையில் வெட்டுக்கூலி,சுத்தம் செய்த கூலி,தரம்பிரித்த கூலி,பாதுகாத்தது மற்றும் ஏலம் நடத்திய வகையில் ஆன செலவுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இந்த பணம் அரசாங்கத்திற்கு சேரும்.

மரத்தை வெட்டி எடுத்த 90 நாட்களில் நிலத்தின் உரிமையாளருக்கு பணம் கிடைத்து விடும்.

எனவே கல்லுக்காடு,கரட்டுக்காடு,வறட்சியான நிலம் என எல்லா இடத்திலும் சந்தன மரம் வளருமுங்கோ...

என்ன சந்தன மரம் வளர்க்க கிளம்பலாமா....
நன்றி:இணையம் poocharam.net
------------------------------------------------------------------------------

1.இந்தியாவில் சந்தனம் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது?


சந்தன மரம் இந்தியாவில் அதிகமாக தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படுகிறது.

2.தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தில் சந்தன மரம் அதிகம் காணப்படுகிறது?
திருவண்ணாமலை,சேலம்,தர்மபுரி,நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிக அளவிலும் மற்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் சந்தன மரம் காணப்படுகிறது.

3.தமிழ்நாட்டில் எந்த வகையான சந்தனமரம் வளர்கிறது?

தமிழ்நாட்டில் எல்லாவகையான சந்தனமரமும் வளர்கிறது.

4.விவசாயிகள் எந்த நிலத்தில் சந்தனம் பயிரிடலாம்?

மானாவாரி நிலங்களிலும்,வடிகால் வசதியுள்ள விவசாய நிலங்களிலும் பயிரிடலாம். சந்தன மரத்தின் குடும்ப வகையை சார்ந்த வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் சந்தன மரமும் வளரும்.

5.சந்தன கன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறதா?
மத்திய அரசு மானியம் 75% அளிக்கிறது. குழி எடுக்கும் செலவு,நடவு செலவு,உரச்செலவு, நாற்று வாங்கும் செலவு என மொத்த செலவில் 75% ஆகும்.

6.சந்தன மரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா?
சந்தன மரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை வரி செலுத்த வேண்டியுள்ளதால் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வனத்துறையினர் விவசாயிகளுக்கு ( மாதம் மாதம் நடக்கும் டெண்டர் மூலமாக) விற்பனை செய்து தருகிறார்கள். அதனால் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் விற்பனை செய்து தரப்படும்.

7.சந்தன மரத்தை மாவட்ட வனத்துறையினர் விற்பனை செய்து தருவார்களா?
சந்தன மரங்களை கட்டிங் செய்து ரகம் பிரித்து அதன் கழிவுகளை நீக்கியும், மரத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு விலை நிர்ணய சம்மதத்தோடு மாவட்ட வனத்துறையின விற்று தருவார்கள்.

8.சந்தன ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளதா? எந்த மாநிலத்தில் உள்ளது.?

ஆயில் தொழிற்சாலை உள்ளது. அது தமிழ்நாடு,கேரளா,பாண்டிசேரி,குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது.

9.சந்தன் மரத்தில் என்னென்ன பொருட்கள் உருவாக்கப்படுகிறது?
சந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.

சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.

10.சந்தன் ஆயில் எது எதோடு சேர்க்கப்படுகிறது?

சந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம் எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.

சந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது.

11. சந்தன இந்தியாவில் அழியும் தருணத்தில் உள்ளதா?
சந்தன உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி சந்தன மரத்தின் தேவையானது ஆண்டிற்கு 5000 முதல் 6000 மெட்ரிக் டன்கள், அதில் 2.3 பங்கு இந்திய சந்தனத்திற்கு தான்.

இந்தியாவை பொருத்த வரையில் மரத்தின் உற்பத்தியானது ஆண்டுதோறும் குறைந்து கொண்டுதான் வருகிறது. தற்போது அழியும் தருவாயில் உள்ளது. இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை விளக்குகிறது.

Image resized to 95% of its original size [522 x 208]
Image

தற்போது அதிகரித்து வரும் சந்தன மரத் தேவையால் இதன் மதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை தெளிவாக விளக்குகிறது.
Image resized to 94% of its original size [527 x 349]
Image

இப்பற்றாக்குறைய போக்கவும் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படவும் அரசாங்கமானது தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி காடுகளில் மட்டும் உற்பத்தியான சந்தன மரத்தின் உற்பத்தியை அதிகரிக்க விவசாய நிலங்களிலும் விளைவிக்கலாம் என அரசு ஆணை வழங்கியுள்ளது.

12. சந்தன மரத்தினை இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் விவசாயம் செய்யலாமா?

அனைத்து மாநிலங்களிலும் சந்தன மரம் வளர்க்கலாம். விற்பனை வரி மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

13.சந்தன மரத்தை வளர்க்க அரசு ஆணை உள்ளதா?.

விவசாய நிலத்தில் சந்தன மரத்தினை வளர்க்க 2002 அரசு ஆணையும் 2008 அரசு ஆணையும் உள்ளது.

14.இந்தியாவில் சந்தன கட்டை ஒரு கிலோ அரசு விலை எவ்வளவு?
சந்தன மரத்தின் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.7500 வரை விற்பனை ஆகிறது.

15.ஒரு லிட்டர் சந்தன ஆயில் என்ன விலை?
சந்தன ஆயில் தற்போது 1 லிட்டர் ரூ.70000 முதல் 190000 வரை விலை போகிறது.

16. சந்தன மரம் வளர்க்க் துணை செடி வளர்க்க வேண்டுமா?

சந்தன மரமானது 3 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை நைட்ரஜனை உற்பத்தி செய்து கொள்ளும் தன்மை அதற்கு இல்லை. அதனால் வேர் முடிச்சுகளில் ஹைட்ரஜனை சேகரித்து வைக்கும் தன்மை கொண்ட துணை செடியினை அருகில் வளர்த்தால் தான் சந்தன மரம் வளரும்.

17. சந்தன மரம் ஒட்டுண்ணி அல்லது சாருண்ணி வகையினை சாந்துள்ளதா?

சந்தனம் மரம் ஒட்டுண்ணியோ அல்லது சாறுண்ணி வகையையோ சார்ந்தது இல்லை.

18.சந்தன மரத்தோடு துணைமரம் வளர்ப்பது எதற்காக?

சந்தன மரம் வளர்க்க ஆரம்ப காலத்தில் நிழல் தேவைப்படுகிறது. அதனால் சந்தன மரத்திற்கு இடைவெளியில் குமிழ்மரம் அல்லது மலைவேம்பு மரம் வளர்க்கலாம். சந்தன மரத்தின் குறைந்த முதிர்வு காலம் 12/14 ஆண்டுகள் ஆகும். அதனால் இடை வருமானம் ஈட்டவும் துணைமரம் உதவியாக உள்ளது. அதாவது குமிழ் கட்டிங் 6 ½ / 7 ஆண்டுகள், மலைவேம்பு 7 / 9 ஆண்டுகள்.

19. சந்தன விதை எவ்வாறு தேர்வு செய்கிறீகள்?

சந்தன விதை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான செயலாகும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆன மரத்தில் தான் தரமான விதை கிடைக்கும்.

20. எந்த வகையான மரத்திலிருந்து (இரகம்) விதை தேர்வு செய்ய வேண்டும்?
அதிக ஆயில் தன்மையும் அதிக வாசனையும் உடைய மரத்தில் இருந்து விதை தேர்வு செய்தால தான் விளைச்சலும் இலாபமும் உறுதி செய்யப்படும்.

21.சந்தன விதை எத்தனை நாட்களில் முளைக்கும்?

சந்தன விதை 32/45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை முளைக்கும் தன்மை கொண்டது.

22.விவசாயிகள் எத்தனை மாதம் வளர்ந்த சந்தன் கன்றுகளை நடவு செய்யலாம்?
1 வருடம் ஆன,அதற்கு மேலும் உள்ள சந்தன கன்றுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

23. ஒரு வருடம் ஆன சந்தன கன்றுகள் எந்த நிலையிலும் வளரக்கூடியதா?
ஒரு வருடமும் அதற்கு மேலும் வளர்ந்த சந்தனக் கன்றுகள் தான் பல்வேறு வகையான சீதோஷண நிலையினை தாங்கி வளரும் தன்மை கொண்டது.குறைந்த பராமரிப்பே போதுமானது.

24.இயற்கை வேளாண் முறையில் சந்தனம் கன்றுகளை வளர்ந்து தருவீர்களா?

தரமான சந்தன கன்று என்பது இயற்கை வேளாண் முறைப்படி வளரந்த சந்தன கன்றுகள் தான். இயற்கை வேளாண் முறைப்படியும் ஆர்கானின் முறைப்படியும் தான் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

25.சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகள் சங்கம் உள்ளதா?
உள்ளது அதன் பெயர் “தென்னிந்திய நறுமண / சந்தன மூலிகை மரம் / பயிர் வளர்ப்போர் விவசாயிகள் சங்கம். அரசு பதிவு எண்: 34.VPM.2011

26.வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு சந்தன மரக் கன்றுகளை அனுப்பி வைப்பீர்களா?

வெளிநாட்டிற்கு தரமான சந்தன கன்றுகளை அனுப்பி வைக்கிறோம். தரமான விதைகளையும் அனுப்பி வைக்கிறோம்.

27.நீங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தும் சந்தன விதைகள் விலைக்கு கிடைக்குமா?

விதைகள் விற்பனைக்கு உண்டு.

28.சந்தன மரம் மூலிகை மரம்தானா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சித்தரகளால் கண்டறியப்பட்ட சந்தன மரமானது சித்த வைத்தியத்திற்கு மூலிகையாகப் பயன்படுகிறது.

சந்தனம் அதன் நறுமணம் குணம் இன்றி மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்காக களிம்புகள், தீக்காயங்கள் மற்றும் அழுகளை தடுக்கும் மருந்துகள் ஆகியவற்றை தயாரித்தலில் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

29.எந்த வைத்திய முறைல் சந்தனத்தை பயன்படுத்துகிறார்கள்?
உடல் உஷ்ணத்தை தணிக்க, உஷ்ணத்தால் உண்டாகும் நோயை குணப்படுத்த சித்த வைத்திய முறையில் பல மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

30.சந்தன மரத்தில் சித்திர வேலைப்பாடுகள் நடக்கும் முக்கிய இடங்கள் எங்குள்ளது?
அங்கோலா,பெங்களூர்,கொன்னவார்,கும்தா,மைசூர்,சாகர்,சோரப்,கிர்ஸி,தால்குப்பா,திருப்பதி,சூரத், தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் ஆகும்.

31.இந்தியாவில் அதிகம் சந்தன சோப்பு தயாரிக்கும் கம்பெனியின் பெயர் சொல்ல முடியுமா?
மைசூர் சாண்டல் சோப்பு

32.சந்தன சோப்பு உடம்புக்கு குளிச்சியை தருமா?
நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது.

33.சந்தன கன்று வளரும் தருணத்தில் வேர்க்கரையான் தாக்கும் வாய்ப்பு உள்ளதா?
ஒரு சில ஏரியாக்களில் வேர் கரையான் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

அதனால் நடவு செய்யும்போதே குழிக்கு 200 கிராம் நயமான வேப்பம் புண்ணாக்கு கலந்து நடவு செய்தால் முழுமையாக வேர்க்கரையானை கட்டுப்படுத்தலாம்.

34.மண் பரிசோதனை செய்த நிலத்தில் சந்தன பயிர் செய்வது சிறந்த முறையா?
மண்ணில் கார அமில தன்மையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்ப் போல் நிலத்தை சீர் செய்து நடவு செய்தால மரம் நன்றாக வளரும்.

35.சந்தன மரம் எத்தனை ஆண்டுகளில் பயன் தரும்?

தரமான தாய் மரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நாற்றுக்களை பயன்படுத்தி கவாத்து முறையில் சந்தன மரத்தினை வளர்த்தால் 10 / 12 ஆண்டுகளில் முதிர்வு தன்மைக்கு வந்துவிடும். தேவைப்பட்டால் அதிக ஆண்டுகள் வளர்க்கலாம்.

36.சந்தன மரம் உள்ள இடங்களில் அதிகம் மழை பெய்யுமா?
பொதுவாகவே சந்தன மரங்களுக்கு காற்றை குளிர்விக்கும் தன்மை அதிகம் உள்ளது. அதனால் சந்தனமரம் அதிகம் உள்ள ஏரியாவில் கண்டிப்பாக மழை அதிகமாக பெய்யும்.

37.சந்தன மரம் உலக சந்தையில் அதிக வரவேற்பு அடைந்துள்ளதா?
சந்தன ஆயிலுக்கு நிகரான ஒரு ஆயில் இதுவரை எதுவும் இல்லாததாலும்,சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுவதாலும் உலக சந்தையில் சந்தனத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

38.எந்த நாட்டிற்கு சந்தன மரம் அதிகம் தேவைப்படுகிறது?

உலகத்தில் ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம்,ஆஸ்திரேலியா கண்டம் மேலும் முக்கியமாக இஸ்லாமியர்கள் வாழும் நாட்டிற்கு அதிகமாக தேவைப்படுகிறது.

39.சந்தன கன்று நடவு செய்த நிலத்தில் ஊடுபயிர் செய்யலாமா?
சந்தம மர நடவு செய்த தோட்ட்த்தில் ஒரே காலகட்டத்தில் 5 அடுக்கு வருமானம் பெறலாம்.

i) சந்தனத்துடன் குமிழ் மரத்தினையும்

ii) குமிழ் மரத்தில்

iii) மிளகு காப்பியையும்,மேலும்

iv) வாழையையும்

v) மூலிகை பயிரான எளிதில் வருமானம் தரக்கூடிய மணத்தக்காளி,முருங்கைக்கீரை,அரைக்கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி,சிறுகீரை செடி வகையான் மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,துளசி,வல்லாரை ஆகியவைகளை மரத்தோட்டத்தில் ஊடுபயிராக வளர்த்து பயன் பெறலாம்.

40.நீங்கள் சந்தன கன்று எந்த முறையில் உற்பத்தி செய்கிறீர்கள்?

ஏதோ ஒரு சந்தன மரத்தில் இருந்து விதை தேர்வு செய்து கன்று உற்பத்தி செய்தால் மரத்தொட தரத்திற்கும் அதன் முதிர்வு தன்மைக்கும் உத்திரவாதம் அற்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால் விதை தேர்வு செய்யும் தாய் மரமானது தரம் பிரிக்கப்பட்ட கிராப் வகையைச் சார்ந்த்தாகும்.அதனால் வாசனையும் தரமும் உறுதி செய்யப்படுகிறது.



41.சந்தன மரத்தினை விவசாயிகளே தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய முடியுமா?

சந்தன மரத்தின் விற்பனை என்பது உலக வர்த்தகம் ஆகும்.அதனால் தான் அரசே அந்த முழுப் பொறுப்பை ஏற்று விவசாயிகளுக்கு உதவி செய்கிறது. சந்தன மரம் விற்பனையில் அதிகப் படியாக வருவாய் வருவதால் அரசு மூலமாக பெறும் போது வெள்ளைப் பணமாக கிடைக்கும். அதனால் விவசாயிகளுக்கும் பாதுகாப்பாக அமைந்து விடுகிறது.

42.சந்தன மரத்தை கவாத்து முறையில் வளர்த்தால் வைரம் அதிகமாக ஏறுமா?

கண்டிப்பாக அதிகமாக ஏறும்.மேலும் குறைந்த காலத்திலேயே மரம் முதிர்வு தன்மை அடைந்துவிடும்.

43.சந்தனம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதா?
சந்தனம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்ட மரமாகும்.

44.சந்தன மரம் உள்ள இடம் குளிர்ச்சியாக இருக்குமா?
காற்றை குளிர்விக்கும் தன்மை சந்தன மரத்திற்கு அதிகமாக இருப்பதால் சந்தன மரம் உள்ள இடத்தில் குளிர் அதிகமாக இருக்கும்.

45.சந்தன மரம் உவளர்ப்போ அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டுமா?

பட்டா நிலத்தில் சந்தன மரத்தினை நடவு செய்ய வேண்டும்.நடவு செய்த 6 மாதம் கழித்து கிராம நிர்வாக அலுவலரிடம் பயிர் அடங்கலில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு ஒன்றே போதுமானதாகும்.

46.சந்தன மரம் எத்தனை வகைப்படும்?
இந்தியாவில் விளையும் சந்தன மரத்தின் வகைகள்:
1.ருட் ஐ கிளாஸ்

2.ரூட் II கிளாஸ்

3.ரூட் III கிளாஸ்

4.ஜட்ஜ் போக்கல் I கிளாஸ்

5.ஜட்ஜ் போக்கல் II கிளாஸ்

6.சோட்லா

7.ஜீரியா

8.ஜெயின் பெக்கர்

9.அயன் போக்கல்

10.அயன் சில்டா

11.ஜர் சில்டா

12.அபிரியா

13.சாட்ப் சால்டா

14.மில்விடு சில்டா

15.பசோலா பக்கினி

16.ஸார்டு ரெஸ்ட்

17.ஸார்டு ருட்ஸ்

18.ஜார்புல் அட்



அயல்நாடுகளில் விளையும் வகைகள்:
1.Vilayed Both

2.China Both

3.Panjam

4.Katpattla(கட்பட்டலா)

5.Pakarjhh (பகர்தாத்)

47.எந்த வகையான கன்று விவசாயிகளுக்கு உகந்தது?
எல்லா சீதோஷண நிலையையும் தாங்கி வளரக்கூடிய சந்தனகன்றுதான் விவசாய நிலத்திற்கு ஏற்றதாகும்.

சந்தன மரத்தின் மதிப்பானது மண்ணிற்கு அடியில் மதிப்பு அதிகம்,அதனால் பூமிக்கு அடியில் நன்கு விளையக்கூடியதும்,மண்ணிற்கு மேலும் நல்ல வளர்ச்சி அடையும் ஜட்ஜ் போகல் ஐ கிளாஸ் இரகம் தான் விவசாய நிலத்திற்கு ஏற்றதாக உள்ளது.

48.சந்தன கன்றுகள் எத்தனை ஆண்டுகாலம் உயிர் வாழும்?
சந்தன மரத்தின் சராசரி ஆயுள் காலம் 40 / 45 ஆண்டுகள் ஆகும்

49.சந்தன இலையில் சந்தன வாசனை வருமா?
சந்தன இலையில் சந்தன வாசனை வராது.

50.சந்தன மரத்தில் எத்தனை ஆண்டு கழைத்து வைரம்(சேவு) ஏற ஆரம்பம் ஆகும்?

சந்தன மரத்தில் 4 ஆண்டு கழித்து சேவு ஏற ஆரம்பம் ஆகும்.

51.சந்தன மரத்தில் எந்த பாகத்தில் ஆயில் எடுக்க பயன்படுகிறது?
சந்தன மரத்தின் வைரக் கட்டை மற்றும் வேர்ப்பகுதியில் இருந்து ஆயில் எடுக்கப்படுகிறது.

52.சந்தன மரத்தை ஒரு விவசாயி விற்பனை செய்ய உரிமை இருக்கிறதா?
சந்தன மரத்தை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு முழு உரிமை உண்டு.

53.சந்தன மரத்தை விலை நிர்ணயம் செய்வது யார்?
பப்ளிக் டெண்டர் மூலமாக விலை நிர்ணயம் நடைபெறூம்,ஆனால் விவாசாயியின் முழு சம்மதத்துடன் தான் விற்பனை செய்ய முடியும்.விலை கட்டுப்படி இல்லை என்றால் 6 மாதமோ அல்லது 1 வருடம் கழித்தோ விற்பனை செய்ய விவசாயிக்கு முழு உரிமை உண்டு.

54.சந்தன மர விற்பனை(பப்ளிக் டெண்டர்) எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

பப்ளிக் டெண்டர் மாதா மாதம் நடைபெறுகிறது.

55.சந்தன மரத்தை விற்பனை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?
மாவட்ட வன அலுவலருக்கு முழு அதிகாரம் உள்ளது.

56.எந்த வகை சந்தன மரத்தில் பர்னிச்சர் செய்ய முடியும்?
பர்னிச்சர் செய்ய 15 வருடங்களுக்கு மேல் வயதுடைய மரத்தில் இருந்துதான் தயாரிக்க முடியும்.

57. 1 ஏக்கரில் எத்தனை சந்தன மரங்கள் நடவு செய்யலாம்?
8x8 அடி இடைவெளியில் 680 மரங்களையும்,

9x9 அடி இடைவெளியில் 537 மரங்களையும் நடவு செய்யலாம்.

58. ஒரு ஏக்கரில் சந்தனம் குறைந்த முதிர்வில் எவ்வளவு வருவாய் கிடைக்கும்?
ஒரு மரத்தில் குறைந்த அளவு 30 கிலோ சந்தன கட்டை கிடைத்தாலும் 550x30=16500 கிலோ. ஒரு கிலோ சந்தன கட்டை சராசரியாக ரூ.5000 விற்பனை ஆனால் கூட 16500x5000=ரூ.8,25,00,000./- அதில் பாதி அளவு கிடைத்தால் கூட ஏக்கருக்கு 4 கோடி ரூபாய் வருவாய் கண்டிப்பாக ஈட்டலாம்.

59.சந்தன கன்றுகளை எந்த நோய் தாக்கும்?
1.இலையுண்ணி பூச்சிகள்

2.இலையுண்ணும் வண்டுகள்

3.வெட்டுக்கிளிகள்

4.சாறு உரிஞ்சும் பூச்சிகள்

5.துளைப்பான்கள்

6.வேர்க்கரையான்கள்

60.சந்தனத்திற்கு அடியுரமாக எதை இடவேண்டும்?
நன்கு மக்கிய சாண எரு வேப்பம் புண்ணாக்கு,மண்புழு உரம் வரை கரையான் தொல்லையில் இருந்து மரத்தை பாதுகாக்கலாம்.

61.எனக்கு நிலம் இல்லை, ஆனால் நான் சந்தன விவசாயம் செய்ய முடியுமா?
சந்தனைத்தை நில உரிமையாளரும் வளர்க்கலாம். அல்லது குத்தகைதார்ரும் வளர்க்கலாம். அதாவது குத்தகை ஒப்பந்தம் செய்து சந்தன மரத்தினை வளர்க்கலாம். அவ்வாறு வளர்த்தால் குத்தகைதார்ருக்கே சந்தன மரம் சொந்தமாகும்.

62.சந்தன மரத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

5 வருடங்களுக்கு மேல் ஆன சந்தன மரத்திற்கு காப்பீடு செய்யலாம்.

63.மத்திய அரசு நலவாரியம் 2000 ஆம் ஆண்டு அமைத்தது.அதில் சந்தனம் இடம் பெற்றுள்ளதா?
மத்திய அரசு நலவாரியம் 2000 ஆம் ஆண்டில் சந்தன மரம் இடம் பெற்றுள்ளது.

64.தமிழ்நாட்டில் எந்த எந்த ஆண்டு சந்தனம் மரம் வளர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது?
அரசு ஆணையானது 2002 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

65.வனத்துறையினருக்கு விவசாயிகள் எவ்வளவு வரியும்,சந்தனம் விற்றுக் கொடுக்கும் செலவும் கட்ட வேண்டும்?

சந்தன மரத்தினை விற்பனை செய்யும்போது அதன் முழு மதிப்பீட்டில் 10% தொகையும்,கட்டிங் எடுத்து விற்பனை செய்யும் செலவிற்காக 10% கட்ட வேண்டும்.

66.சந்தனத்தை சாகுபடி செய்யும் போது அரசு எந்த முறைப்படி பணத்தை பட்டுவாடா செய்யும்?
மரத்தின் உரிமையாளருக்கு மொத்த விலையில் 20 வீதம் 30 நாட்களுக்குள்ளும்,மீதித்தொகை 90 நாட்களுக்குள்ளும் தரப்பட வேண்டும்.

67.விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை வனத்துறையினருக்கு உள்ளதா?

சந்தன மரங்கள் பெரிதாகி அதன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஒரு சில ஏரியாக்களில் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் விண்ணப்பம் கொடுத்து பாதுக்காப்பிற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். சந்தன மரத்தை பாதுக்காப்பது வனத்துறையினரின் முழு பொறுப்பாகும். அனைத்து மரங்களுக்கும் வனத்துறையினர் பாதுகாப்பு செய்வார்கள்.

68.சொட்டு நீர் பாசனம் அமைத்து சந்தன மரத்தை வளர்க்கலாமா?

சொட்டு நீர் பாசனத்தில் சந்தன மரத்தை வளர்த்தால் சந்தன மரத்தின் வளர்ச்சி 15% முதல் 20% வரை வளர்ச்சி கூடுதலாக இருக்கும். சொட்டு நீர் பாசனத்தினால் மிக குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. தேவையான செடிக்கு மட்டும் தண்ணீர் போவதால் தேவையற்ற களைகள் முளைப்பதில்லை. அதனால் தோட்டத்தின் பராமரிப்பு மிக குறைவு. அதிகமான ஏரியாவை பாரமரிப்பதற்கு சொட்டு நீர் பாசனமே சிறந்த வழியாகும்.

69.பாதுகாப்பிற்கு சூரிய மின்வேலி அமைக்கலாமா?

1. ஆடு மாடுகளிடம் இருந்து தோட்டத்தை பராமரிப்பதற்கும்

2. மரத்தின் மதிப்பு அதிகம் ஆகும்போதும் சூரிய மின்வேலி அமைத்து பாராமரிப்பதே சிறந்த வழியாகும்.

70.என் நிலத்தில் வளரும் சந்தன மரத்தை சட்டத்தை மீறி யாரோ வெட்டினால் நான் எப்படி புகார் செய்வது?
சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். மரங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தால் 30 நாட்கள் கழித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். சந்தன மரத்தின் மதிப்பானது பூமிக்கு மேல் பகுதியில் 30% பூமிக்கும் கீழ் 70% மதிப்பு தன்மை கொண்ட்தாகும். பூமிக்கு மேல் உள்ள மரம் வெட்டப்பட்டால் பூமிக்கு கீழ் உள்ல வைரத்தின்(கட்டை) மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

71.வனத்துறை மாவட்டம் தோறும் செக் போஸ்ட் அமைத்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

சந்தன மரத்தால் அன்னிய செலவாணி அதிகம் ஈட்டி தருவதாலும் அரசுக்கு வருவாய் அதிகரிப்பதாலும் சந்தன மரத்தினை தெசிய சொத்தாக கருதுவதாலும் அரசு வனத்துறையின் மூலம் கண்டிப்பாக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு செய்து தரும். அது அவர்களின் கடமையும் ஆகும்.

72.ஒரு ஏக்கரில் சராசரி எத்தனை டன் சந்தனம் எத்தனை வருடதில் விளையும்?

12 / 14 வருடத்தில் ஒரு மரத்தில் வைரம் (கட்டை) 30 கிலோ கிடைத்தாலும் ஏக்கருக்கு 53x30=15900 கிலோவாகும். 12 / 17 வருடம் வளர்த்தால் ஒரு மரத்தின் வரைம் 60 கிலோ கிடைக்கும்.அதாவது 31 டன் உறுதியாக இருக்கும்.

73.அனைத்து பட்ட நிலத்திலும் சந்தனம் வளர்க்கலமா?
அனைத்து பட்டா நிலத்திலும் சந்தனம் வளர்க்கலாம். வீடு,பள்ளி,கல்லூரி,தொழிற்சாலைகளில் உள்ள காலி இடங்கள் மற்றும் அனைத்து விவசாய பட்டா நிலங்களிலும் வளர்க்கலாம்.

74.இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் சந்தன வளர்ப்பு அரசு ஆணை உள்ளதா?
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் சந்தன மரம் வளர்க்கும் அரசு ஆணை உள்ளது.

75. 2011 ஆண்டு சந்தனத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்ட்து?
ஒரு கிலோ சந்தன கட்டை அதிகபட்சமாக ரூ.7500/-

76. 5 ஆண்டுகள் கழித்து சந்தன மரத்தின் கவாத்து செய்யும் கழிவுகலை யார் அனுபதி பெற்று பொது மக்களுக்கு விற்பனை செய்யலாம்?

மாவட்ட வனத்துறை அலுவலரின் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்.

77.கவாத்து செய்த சந்தன குச்சிகளை விற்க வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டுமா?
அனுமதி பெற்றுதான் விற்பனை செய்ய வேண்டும்.

78. மூலிகை சம்மந்தப்பட்ட அனைத்து விதமான பொருட்களை காட்டில் இருந்து வெளியே கொண்டு வர மலைவாழ் பழங்குடியினருக்கு அதிகாரம் இந்திய அரசால் அளித்துள்ளது என்பது உண்மையா?
உண்மையே

79.எந்த நாட்டில் விளையும் சந்தனத்திற்கு ஆயில் அதிகம் எடுக்க முடியும்?
இந்திய சந்தனத்திற்கு தான் ஆயில் அதிகம் கிடைக்கும். தரமானதாகவும் இருக்கும்,குறிப்பாக தமிழ்நாட்டில் விளையும் சந்தனத்திற்கு தான் ஆயில் தன்மையும் வாசனையும் அதிகம் இருக்கும்.

80.நறுமணம் அதிகம் வீசும் சந்தனத்திற்கு பெயர் என்ன?

வாசனை சந்தனம் அல்லது ஜவ்வாது சந்தனம்

81.சந்தன மரம் அதிவேகமாக வளரக்கூடியதா?
சந்தனம் மெதுவாக வளரக்கூடிய மரமாகும்.குறிப்பாக வேம்பின் சாராசரி வளர்ச்சி அளவுக்கு சந்தனம் இருக்கும்.

82.எங்கள் வீடுகளில் வளர்க்கும் சந்தன மரத்தினை அரசுக்கு வரி கட்டிவிட்டு வெட்டிக்கொள்ளலாமா?

வரி கட்டி விட்டு நாம் பயன்படுத்திக் கொள்ள நமக்கு உரிமை உண்டு.

83.சந்தன கன்று நடவு செய்யும் பருவகாலம் உண்டா?

சந்தன கன்று நடவுக்கு எல்லா பருவகாலமும் உகந்ததே.

மானாவாரியான நிலங்களில் அனைத்து காலங்களிலும்

தோட்டத்தில் அதிகம் மழை பெய்யும் காலத்தை தவிர்த்தும் நடவு செய்ய வேண்டும்.

84.மழைநீர் தேங்கி இருக்கும் நிலத்தில் சந்தனம் பயிர் நடலாமா?
வடிகால் வசதியுள்ள நிலத்தில் நடவு செய்யலாம.

குறைந்த பட்சம் 2 / 3 வாரங்களுக்கும் அதிகபட்சம் 3 / 4 வாரம் வரை நீர் தேங்கி நிற்கும் காலக்கட்டத்தில் நடவு செய்வதை தவிர்த்து விட வேண்டும்.

85.வேப்பம் (வேம்பு) மரமும் சந்தன மரமும் ஒரே குடும்ப வகையைச் சார்ந்த்து?
வேம்பும் சந்தனமும் ஒரே குடும்ப வகையைச் சார்ந்தது.வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கு சந்தனமும் வளரும்.

86.சந்தன மரத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

5 / 7 ஆண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களுக்கு காப்பீடு செய்யும் வசதியுள்ளது.

87.சந்தனத்தை எவ்வளவு ஆழம் குழி எடுட்து நடவு செய்ய வேண்டும்?
மண் தன்மை ஆழமாக உள்ள நிலத்தில் 1x1x1 அடி நீளம் அகலம் ஆழம் குழி எடுத்தும்,

மண் தன்மை ஆழத்தில் குறைவாக இருந்தால 2x2x2 நீளம் அகலம் ஆழம் குழி எடுத்து நடவு செய்யலாம்.

88.குழி மூடுவதும் சந்தனம் நடவு செய்வதும் ஒன்றாக செய்யலாமா?
குழி எடுத்து இரண்டு நாள் கழித்து பூமியின் மண், எரு,வேப்பம் புண்ணாக்கு கலந்து மூடி தண்ணீர் விட்டு பிறகுத் நடவு செய்ய வேண்டும்.

89.நடவு செய்ய ஏற்ற நேரம் எது?

மாலை நேரத்தில் நடவு செய்வதே மிக சிறந்த வழியாகும்.வெயில் இல்லை என்றால் காலையில் நடவு செய்யலாம்.

90.நாற்று இடம் மாற்றம் செய்து எத்தனை நாட்கள் கழித்து நடவு செய்ய வேண்டும்?

குறைந்தது 10 நாட்கள் அல்லது இரண்டு வாரம் கழித்து மாற்றப்பட்ட ஏரியாவில் தண்ணீர் விட்டு அந்த சீதோஷண நிலைக்கு மாற்றம் செய்து நடவு செய்ய வேண்டும்.

91.பாதுகாப்பிற்காக தாங்கள் காட்டும் உச்ச கட்ட வழிமுறை?

சந்தன மரம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்ட மரம். அதனால் 4 / 5 ஆண்டுகள் கழித்து வருடத்திற்கு ஒரு முறை தரையோடு வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்தால் பூமிக்கு அடியில் வேர்கட்டை நன்கு குறைந்த காலத்திலேயே முதிர்வு தன்மை பெற்று மரம் விளைந்து விடும் பாதுகாப்பு பிரச்சனை என்பதே இந்த முறையில் மரம் வளர்த்தால் இல்லவே இல்லை.

92.ஆர்டர் கொடுத்தால் நீங்களே அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பீர்களா?

· ஆர்டரின் பேரில் நிறுவனமே ஆட்களை வைத்து குழி எடுத்து நடவும் செய்து கொடுக்கும்.

· மேலும் தோட்டத்தை சுற்றி சூரிய மின்சார வேலி அமைத்தும்

· சொட்டு நீர் பாசன வசதியையும் அமைத்து கொடுக்கும்.

சந்தன கன்றின் விலை நிலவரம் என்ன?

Image resized to 81% of its original size [617 x 230]
Image





Image by FlamingText.com

Wednesday, November 4, 2015

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி

மகாபாரதம் என்பது இந்து சமய இதிகாசங்களில் ஒன்று என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். மகாபாரத காப்பியத்தை பற்றி தெரியாத இந்துக்கள் இருக்கவே முடியாது. இந்த காப்பியத்தை எழுதியவர் வேத வியாசர். சாஸ்திரத்தில் இதனை ஐந்தாவது வேதமாக குறிப்பிட்டுள்ளனர். மகாபாரததத்தில் எண்ணிலடங்கா சுவாரஸ்யமான தகவல்களும் போதனைகளும் அடங்கியுள்ளது. மகாபாரதத்தில் மறைந்துள்ள தகவல்கள் பல உள்ளது. அவைகளைப் பற்றி உங்களுக்கு யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட சில ரகசியங்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம்:

திரௌபதியின் பிறப்பு குரு துரோணாச்சாரியர் தன் நண்பன் துருபதனை பழி வாங்க நினைத்து, தன் மாணவர்களை வைத்து வீழ்த்தினார். இதனால் அந்நாட்டில் உள்ள ரிஷிகளின் உதவியோடு ஹோமகுண்டத்தை நடத்தினார் துருபதன். அதன் விளைவாக திவ்ய குமாரன் பிறந்தான். அதன் பின் ஹோமம் மூலமாக யாக்யா தேவி பிறந்தாள். அவளுக்கு திரௌபதி என பெயரும் சூட்டப்பட்டது. துரோணாச்சாரியரை கொல்வதற்காகவே திவ்ய குமாரன் பிறந்தான் என்றும், ரிஷிகளுக்கு பயனளிக்கவே திரௌபதி பிறந்தாள் என்றும் அசரிரி உள்ளது.

ஐவரை மணக்க காரணம் தன் முன் ஜென்மத்தில் திருமண யோகம் இல்லாததால், தவமிருக்க தொடங்கினாள் திரௌபதி. அந்த தவத்தினால் ஈர்க்கப்பட்ட சிவபெருமான், அவள் மனம் விரும்பிய வரத்தை அளிக்க, அவள் முன் தோன்றினார். அனைத்து பண்புகள் நிறைந்தவர் தனக்கு கணவனாக வர வேண்டும் என கோரி அந்த வரத்தை ஐந்து முறை கேட்டாராம். அதனால் தான் தன் அடுத்த ஜென்மத்தில் அவர் ஐவரை மணக்க வேண்டி வந்தது.
பாண்டவர்களின் விதிமுறை குறிப்பிட்ட காலத்தின் படி, ஒவ்வொரு பாண்டவர்களுடன் திரௌபதி வசிப்பார் என பாண்டவர்கள் ஒரு விதிமுறையை போட்டனர். அதில் ஒரு பாண்டவனுடன் இருக்கும் போது, மற்ற பாண்டவர்கள் யாரும் அவர் அருகில் வரக்கூடாது. யாராவது இந்த விதிமுறையை மீறினால், ஒரு பிரம்மச்சாரியாக 12 வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டும்.

விதிமுறையை மீறிய அர்ஜூனன் யுதிஷ்டரின் அரண்மனையில் பிராமணர் ஒருவரின் பசு களவு போனது. அந்த பிராமணரோ அர்ஜுனனின் உதவியை நாடினார். ஆனால் அர்ஜுனின் ஆயுதங்கள் யுதிஷ்டரின் அரண்மனையில் இருந்தது. அங்கே அவர் திரௌபதியுடன் இருந்தார். அங்கே சென்றால் விதிமுறையை மீறும் செயலாகி விடும். ஆனால் பசுவை காக்காமல் போவது மதத்திற்கு எதிரானது என்ற ஒரு கன எண்ணம் அவரை அங்கே செல்ல வைத்தது. அதனால் தன் 12 வருட வாழ்க்கையை அவர் காட்டினில் கழிக்க வேண்டி இருந்தது.

யுதிஷ்டரின் மற்றொரு மனைவி ஒவ்வொரு பாண்டவர்களின் மூலமாக திரௌபதிக்கு ஒரு மகன் உள்ளான். யுதிஷ்டருக்கு தேவிகா என்ற மற்றொரு மனைவியும் உண்டு.

வாழ்க்கை வெறுத்த பாண்டவர்கள் கிருஷ்ணர் சித்திப்பெற்ற செய்தியை கேள்விப்பட்ட பாண்டவர்கள், இந்த உலகத்தின் மீதுள்ள ஈடுபாட்டை இழந்தனர். அதனால் திரௌபதி மற்றும் நாயுடன் சொர்க்கத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். போகும் வழியில் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வந்தனர். கடைசியில் யுதிஷ்டரும் நாயும் மட்டுமே உயிருடன் இருந்தனர். தன் நேர்மையின் காரணமாக, உயிருடன் இருக்கும் போதே, சொர்க்கத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட ஒரே மனிதராக யுதிஷ்டர் விளங்கினார்.

சொர்க்கத்தில் துரியோதனன் சொர்க்கத்தில் துரியோதனன் இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார் யுதிஷ்டர். ஆனால் பின் தான் தெரிய வந்தது, அவர் எப்போதும் பயத்தை காட்டாமல் இருந்ததோடு, சமண்ட்பஞ்சகா என்ற புனிதமான இடத்தில் வீர மரணம் அடைந்த காரணத்தினால் தான் அவருக்கு சொர்க்கத்தில் அனுமதி கிடைத்தது.
Image by FlamingText.com

Thursday, October 8, 2015

உண்மையான காதல் கதைகள்!!!

பலருக்கு தெரியாத வரலாற்றில் உள்ள மறக்க முடியாத உண்மையான காதல் கதைகள்!!!

நம் வரலாற்றைப் பார்த்தோமானால் காலத்தால் அழிக்க முடியாத பழமையான காதல் கதைகள் எண்ணிலடங்கா வகையில் உள்ளது. ஆச்சரியப்படும் வகையில் இவற்றில் பெரிதாக எதுவுமே மாறி விடவில்லை. இந்த காதலர்கள் கொண்டிருந்த காதல், அக்காலத்தின் கிசுகிசுக்களாக கூட இருக்கலாம்.
 
பாஜி ராவ் மற்றும் மஸ்தானி ADVERTISEMENT ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே நடித்து வரவுள்ள ஒரு படம், பேஷ்வா பாஜி ராவின் கதையால் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. மஸ்தானியின் மாய மந்திரங்கள் (நல்ல விதத்தில்) இல்லாமல் இவர்களின் கதை முழுமை பெறாது. இந்திய வரலாற்றில் பல தகவல்கள் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளதை போலவே, மஸ்தானியின் பிறப்பைப் பற்றியும் சரியாக தெரியவில்லை. சிலர் அவரை ஹைதராபாத்தை சேர்ந்த இளவரசியாக நம்புகின்றனர். சிலர் அவரை நடன கலைஞராகவும் நம்புகின்றனர். தன் குலத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த போதிலும் கூட பாஜி ராவ் அவரை மணம் புரிந்தார். போர்களத்தில் பாஜி ராவ் மரணம் அடைந்த போது மஸ்தானியும் தற்கொலை செய்து கொண்டார்.
 
 
 
கிளியோபட்ரா மற்றும் மார்க் ஆண்டனி தன் ஆண் உறவினர்களுடன் கூட்டணி அடிப்படையில் ஆண்டு வந்தாலும் கூட, எகிப்தின் கடைசி பரோவாக அறியப்படுபவர் கிளியோபட்ரா. மிகவும் அழகிய பெண் என வரலாற்றால் கூறப்படும் இவர் உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த இரு ஆண்களை வசீகரித்தார். ஜூலியஸ் சீஸரின் மறைவுக்கு பின்னர் மார்க் ஆண்டனியின் மீது காதலில் விழுந்தார் கிளியோபட்ரா. இவர்களின் உறவு 11 ஆண்டுகளுக்கு நீடித்தது. கி.பி.41-ல், கிளியோபட்ராவின் வசீகரத்திற்கு இரையாகாமல் எகிப்தை கைப்பற்றும் எண்ணத்தில் ரோமானிய படைக்கு ஆக்டேவியன் தலைமை தாங்கிய போது, கிளியோபட்ரா இறந்து விட்டார் என்ற பொய்யான செய்தி கேட்டு, ஆண்டனி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கட்டுவிரியனை கடிக்கச் செய்து தன் உயிரையும் மாய்த்துக் கொண்டார் கிளியோபட்ரா.
 
ஷாஜகான் மற்றும் மும்தாஜ் தன் தாத்தா அக்பருக்கு பின் நன்றாக அறியப்பட்ட முகலாய பேரரசர்களில் ஒருவர் தான் ஷாஜகான். இவருக்கு மூன்று மனைவிகள். அவர்களில் இவருக்கு மிகவும் பிடித்தவராக இருந்தவர் மும்தாஜ். தங்களின் 14 ஆவது குழந்தையைப் பெற்றெடுக்கும் போது உயிரை இழந்தார் மும்தாஜ். அவரின் கடைசி வார்த்தைகளின் நினைவாக, தங்கள் காதல் என்றென்றும் வாழ்ந்திட, அவர் கம்பீரமான கல்லறை மாடத்தை கட்டினார். ஒரு கணவனின் காதலை நமக்கு ஞாபகப்படுத்தும் விதமாக இன்றளவும் தாஜ் மஹால் நிற்கிறது.
விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஜெர்மன் நாட்டு இளவரசரும், தன் தூரத்து சொந்தக்காரருமான ஆல்பர்ட்டை சந்தித்த போது, சொக்கிப்போனார் இளவயது விக்டோரியா. அவர்களின் திருமண வாழ்க்கையில், உள்நாட்டு மதிப்புகள் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தும் விதத்தில், ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரை போலவே அவர்கள் காட்சியளத்தினர். திருமணமாகி 21 ஆண்டுகளில், 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு, 1861 ஆம் ஆண்டு தன் மனைவியை தனியாக விட்டு விட்டு, காய்ச்சலால் ஆல்பர்ட் இறந்தார். அதன் பிறகு பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகி கொண்டார். வெண்ணிற திருமண ஆடைக்காக பிரபலமாக அறியப்பட்ட பெண், அவர் கணவனின் மரணத்திற்குப் பிறகு துக்கத்தை அனுசரிக்கும் விதத்தில் கருப்பு ஆடையையும் முகத்திரையையும் அணிந்து கொண்டார்.

Image by FlamingText.com

Monday, February 23, 2015

மரணத்தை வென்ற மார்கண்டேயன் கதை

முன்பு ஒரு காலத்தில் மிருகண்டர் என்ற மகரிஷி வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியான மருதவதியும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் ஆவார்கள். ஆனால் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே சிவபெருமானை புகழ்ந்து பாடல்கள் பாடியும், அவரைப் பற்றிய கதைகளைப் பரப்பியும் வாழ்ந்து வந்தார்கள். 
 
கடைசியாக அவர்களின் செயலால் மனம் குளிர்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு காட்சி அளித்து, குழந்தை வரத்தை அளித்தார். அந்த குழந்தை தான் மார்கண்டேயன். இங்கு மரணத்தை வென்ற மார்கண்டேயன் கதை கொடுக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் கொடுத்த வரம் மிருகண்டர் என்பவர் மகரிஷி ஆவார். அவருடைய மனைவி மருதவதி. அவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைச்செல்வம் இல்லை. அதற்காக சிவபெருமானை வேண்டினார் மகரிஷி. அவர் முன் தோன்றிய சிவபெருமான், "மிருகண்டா, உன்னால் நான் மனம் குளிர்ந்தேன். சொல், நீண்ட காலம் வாழப்போகும், ஆனால் முட்டாள்களாக இருக்க போகும், 100 குழந்தைகள் வேண்டுமா அல்லது பதினாறு வருடங்களே ஆழப்போகும் புத்திசாலியான ஒரு குழந்தை வேண்டுமா?" என கேட்டார்.
 
சிவனிடம் மகரிஷி கேட்டது 
அதற்கு மகரிஷி "கடவுளே, அந்த புத்திசாலி மகனை மட்டும் கொடுங்கள்", என உடனடியாக கூறினார். "நல்லது! உனக்கு அவன் கிடைப்பான்!" என சிவபெருமான் கூறினார். விரைவிலேயே மகரிஷிக்கு மகன் பிறந்தான். அவனுக்கு மார்கண்டேயன் என பெயரும் வைத்தார். அந்த சிறுவனும் புத்திசாலியாகவும் அழகானவனாகவும் வளர்ந்தான். வேத சாஸ்திரங்களை அவன் சுலபமாக கற்றுக் கொண்டான். அனைவருக்கும் அவனை பிடித்திருந்தது.

தந்தையின் சோகத்தை கேட்ட மார்கண்டேயன் 
அந்த சிறுவன் 16 வயதை நெருங்கி கொண்டிருந்த போது, மிருகண்ட மகரிஷியின் கவலையும் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு நாள் மார்கண்டேயன் தன் தந்தையை பார்த்து "தந்தையே, ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?" என கேட்டான். அதற்கு "மகனே, நான் உன்னிடம் என்ன சொல்வது? உன்னை எங்களுக்கு சிவபெருமான் அளிக்கையில் நீ 16 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பாய் என கூறினார். நீ இப்போது அந்த வயதை அடைய போகிறாய். இந்த வருடம் முடியும் போது நீ எங்களை விட்டுச்சென்றால் உன் இழப்பை நாங்கள் எப்படி தாங்குவோம்" என மகரிஷி கூறினார்.

தவம் மேற்கொண்ட மார்கண்டேயன் 
 "தந்தையே! இது தான் காரணமா? சிவபெருமானுக்கு அவரின் பக்தர்களின் மீது அன்பு உண்டு. அதை நீங்களே என்னிடம் கூறியுள்ளீர்கள். அவர் பலரையும் சாவில் இருந்து இதற்கு முன் காப்பாற்றி இருக்கிறார். அதை நான் புராணங்களில் படித்து இருக்கிறேன். அதனால் இன்றிலிருந்து இரவும் பகலுமாக நான் சிவபெருமானை வணங்க ஆரம்பிக்கிறேன். கண்டிப்பாக அவர் என்னையும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது." என மார்கண்டேயன் கூறினான்.
 
இரவு பகல் பாராமல் வணங்கிய மார்கண்டேயன் 
தன் மகனின் வார்த்தைகளை கேட்ட மிருகண்ட மகரிஷி சந்தோஷம் அடைந்தார். தன் மகனுக்கு ஆசி வழங்கினார். கடற்கடையில் சிவலிங்கம் ஒன்றினை மார்கண்டேயன் கட்டினான். காலை, மாலை, இரவு என எந்நேரம் ஆனாலும் சிவபெருமானை வழிபட தொடங்கினான். பஜனைகளை பாடி, நடனம் ஆடியும் கூட அவன் வழிபாட்டை தொடர்ந்தான்.
 
மார்கண்டேயனை அழைக்க வந்த எமன் 
கடைசி தினத்தன்று, மார்கண்டேயன் பஜனைகள் பாட தொடங்கும் போது, மரணத்தின் கடவுளான எமன் அவனிடம் வந்தார். ஒரு எருமையின் மீது ஏறி எமன் வந்தார். தன் கையில் பாசக்கயிற்றை வைத்திருந்தார். மார்கண்டேயனிடம் "உன் பஜனையை நிறுத்து சிறுவனே! இந்த பூலோகத்தில் உன் வாழ்க்கை முடிவடைந்து விட்டது. மரணத்திற்கு தயாராக இரு" என எமன் கூறினார். இதை கேட்ட மார்கண்டேயன் பயப்படவில்லை. தன் தாயை குட்டி எப்படி பற்றிக்கொள்ளுமோ அதே போல் அவன் சிவலிங்கத்தை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டான்.
 
மார்கண்டேயனை காப்பாற்றிய சிவன் 
சிறுவனின் கழுத்தில் எமன் பாசக்கயிற்றை வீசினார். அவனை சிவலிங்கத்தை விட்டு இழுக்க முயன்றார். அப்போது அந்த சிவலிங்கம் வெடித்து, அதனுள் இருந்து சிவபெருமான் வெளியேறினார். எமனை நெஞ்சில் எட்டி உடைத்த சிவபெருமான், "எமா, போய் விடு. இந்த சிறுவனை தொடாதே! அவன் என் மனம் கவர்ந்த பக்தன். இவன் சிரஞ்சீவியாக வாழ்வான்" என கூறினார்.
 
மரணத்தை வென்ற மார்கண்டேயன் எமன் நிலை குலைந்து போனார். எப்போதும் போல் இல்லாமல் இன்னும் பக்தியுடன் சிவபெருமானை வணங்கினான் மார்கண்டேயன். இந்த ஜெபத்தின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் "இந்த மரணம் என்னை என்ன செய்யும்" என முடிந்தது. இப்போதும் கூட பலரும் இதனை ஜெபிப்பார்கள். வீட்டிற்கு வந்த மார்கண்டேயன் தன் பெற்றோரின் கால்களில் விழுந்தான். அவனை கட்டித்தழுவிய அவர்கள் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டனர். மிகப்பெரிய ரிஷியாக மாறிய மார்கண்டேயன் நீண்ட நாட்கள் வாழ்ந்தான்.
 

Image by FlamingText.com

Wednesday, January 14, 2015

Folder security

உங்கள் பதிவுகளை மற்றவர்கள் திருடாமல் இருக்க...!!
FOLDER களை மற்றவர்கள் CUT,COPY, PASTE செய்வதை தடுக்க நமது கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம். அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும். நமக்கே தெரியாமல் சிலர் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.
இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட www.puradsifm.com
image "1" தோன்றும். இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க. தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.
பின் கீழ்க்கண்ட image 2 தோன்றும். இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட், பேஸ்ட், காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.
image "3" உள்ள படத்தை பார்க்க. உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும். அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய,


Image by FlamingText.com

Broccoli ப்ராக்கோலியின் சூப்பரான நன்மைகள்

ப்ராக்கோலியில் நினைத்து பார்க்க முடியாத அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த காய்கறியாகும். உடல் எடையை குறைப்பதில் இதில் உள்ள சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரும நோய்களை குணப்படுத்துவது, மன நிலையை சரிசெய்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது என பல வழிகளில் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது.
 

செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு ப்ராக்கோலியில் நோய் எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.

மற்ற காய்கறிகளை ஒப்பிடும் போது ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது.

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள அதிப்படியான கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

ப்ராக்கோலியில் நோய் எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், எதிர்ப் பொருள்கள் ஆகியவை புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களை குணப்படுத்துகிறது. எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகி, தோல் பளபளப்பாகும்.

பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை உதவுகின்றன.

Image by FlamingText.com

உடல் எடையை குறைக்க

பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.
குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.
பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.

பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.

பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

Image by FlamingText.com

Monday, September 15, 2014

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில விசித்திரமான வழிகள்!!!

உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள். இதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.

* கர்ப்பிணிகளுக்கு வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை ஆண். ஆனால் வயிறு பெரியதாக இருந்தால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.

* இல்லாவிட்டால், தெற்கு திசையை நோக்கி நிற்கும் போது, வயிறானது கீழே இறங்கி காணப்பட்டால், ஆண் குழந்தை என்றும், அதுவே வயிறு பெரியதாக காணப்பட்டால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.

* இந்த முறையின் படி பலருக்கு உண்மை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தின் துடிப்பு நிமிடத்திற்கு 140+ ஆக இருந்தால், பெண் குழந்தை என்றும், 140- ஆக இருந்தால் ஆண் என்றும் அர்த்தம். ஆகவே இதயத் துடிப்பை கண்க்கிட்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* கர்ப்பிணிகளுக்கு புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஏங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே இனிப்பு சாப்பிட விரும்பினால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம். இதுவும் அக்காலத்தில் கணிக்கும் வழிமுறைகளில் ஒன்று.

* சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை. ஆனால் கர்ப்பிணிகள் நன்கு அழகாக, பொலிவோடு காணப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.

* பொதுவாக கர்ப்பிணிகள் சிலருக்கு காலையில் சோர்வு அதிகம் இருக்கும். ஒருவேளை அப்படி எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

* வயிற்றில் பெண் குழந்தை இருந்தால், கர்ப்பிணிகள் சோர்வாகவும், வலிமையின்றியும் இருப்பார்கள். ஏனெனில் வயிற்றில் வளரும் பெண் குழந்தையானது, தாயிடமிருந்து, அழகு மற்றும் வலிமையை எடுத்துக் கொண்டு வளர்கிறதாம். மேற்கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். இவை நகைச்சுவையாக இருந்தாலும், பலருக்கு சாத்தியமாக உள்ளது.


Image by FlamingText.com

நம்பினால் நம்புங்கள்.

நம்பினால் நம்புங்கள்.

எவரெஸ்ட் உச்சியை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எட்டியிருகின்றனர். ஆழ்கடல் தரையைத் தொட்டவர்களோ இருவர் மட்டுமே.

மனித காதுகள் 130 டெசிபல் அளவு வரையிலுள்ள ஒளியை வலியின்றி கேட்கும்.

விண்ணில் சுட்டும் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள்களில் 40% இங்கிலாந்தை சேர்ந்தவை.

10% மக்களுக்கு கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் திறன் உள்ளது. அவர்களது வியர்வை வாசனையை 30 மீட்டர் தொலைவிலிருந்தும் கூட, கொசுக்களால் அறிய முடியும்.
1920 களிலேயே "கிறிஸ்டல் செட் ரேடியோ" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மொபைல் போன்  உருவாக்குவது பற்றி விவாதிக்கபட்டிருன்தது.

சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு கலந்த உணவுகளில் மனத்திண்மையை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

சுத்தமான நீரை, அது உறைவதற்கு முன், மைனஸ் 48டிகிரி செல்சியல் வரை குளிர்விக்க முடியும்.





Image by FlamingText.com

Thursday, March 20, 2014

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1. அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3. பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4. அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.


Image by FlamingText.com

குறட்டைத் தொல்லை

அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு குறட்டைத் தொல்லை என்பது தவிர்க்க முடியாத 'போனஸ்’ தொல்லை.குறட்டைத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாக்கப்படுப்பதைத் தவிர்த்து, ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் குறட்டையின் அளவு குறையும். காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்வதும் குறட்டைப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி. அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவோருக்கு எளிதில், குறட்டைத் தொல்லையும் வரும் வாய்ப்பு உள்ளது.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும்.
===============================
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை  ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல்  ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

Image by FlamingText.com

உண்மைக்கதை

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்ச!

Image by FlamingText.com

Search This Blog