Pages

Subscribe:

Tuesday, October 30, 2012

இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?



            நவீன கால மக்களிடையே இராமாயணத்தைப் பற்றிப் பேசும்போது எழும் பொதுவான கேள்வி: வாலிக்கும் இராமருக்கும் எந்தப் பகையும் இல்லாத பட்சத்தில், இராமர் வாலியை வதம் செய்தது ஏன்? அதுவும் மரத்திற்குப் பின்னால் மறைந்திருந்து வதம் செய்ய காரணம் என்ன? இவற்றை இங்கு சற்று அலசிப் பார்ப்போம்.

            இக்கேள்விகளை எழுப்புவோரை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்:
1. வேத வரலாற்றை நம்புவோர்
2. வேத வரலாற்றை நம்பாதோர்.

ஸ்ரீ இராமர் பாவமற்றவர், கறையற்றவர், குற்றமற்றவர் என்பதை வேத வரலாற்றை நம்புவோர் அறிவர்; இருப்பினும், போதிய சாஸ்திர ஞானம் இல்லாத காரணத்தினால், அவர்களால் இதுபோன்ற கேள்விகளுக்கு திருப்தியான பதிலை வழங்க முடிவதில்லை. இச்சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நம்பிக்கையற்ற மக்கள், இராமர் நல்லவர் அல்ல" என்னும் மூடத்தனமான முடிவிற்கு வருகின்றனர்.
 கடவுள்" என்பதன் அடிப்படைப் பொருளை ஆராய்ந்தோ மெனில், அவர் பூரணமானவர், அனைத்து சக்திகளும் கொண்டவர், அனைவரது நலனையும் விரும்புபவர், என்றும் நல்லவர் போன்ற தகவல்களைப் பெறலாம். அவர் என்றும் நல்லவர் என்னும் பட்சத்தில், இராமர் நல்லவர் அல்ல" என்னும் முடிவு நிச்சயம் முட்டாள்தனமானதே. இராமரின் மீதான இக்குற்றச்சாட்டிற்கு எவ்வாறு தீர்வு காண்பது?

உருளைக்கிழங்கு போண்டா

தேவையானவை:
    உருளைக்கிழங்கு - அரைக்கிலோ
    பெரிய வெங்காயம் - இரண்டு
    பச்சைமிளகாய் - இரண்டு
    இஞ்சி - ஒரு சிறியத்துண்டு
    பூண்டு - இரண்டு பற்கள்
    மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகாய்தூள் - அரைத்தேக்கரண்டி
    உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
    கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து
    எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    கடலை மாவு - இரண்டு கோப்பை
    ஆப்பச்சோடா - ஒரு சிட்டிகை
    எண்ணெய் - இரண்டு கோப்பை
    கொத்தமல்லி - ஒரு பிடி

   உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
   வெங்காயத்தை பொடியாக நறுக்கி கிழங்குடன் சேர்த்து கலக்கி வைக்கவும்.
   இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைச் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  
   சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பை,   கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
  
   பிறகு அரைத்த கலவையைப்போட்டு வதக்கி அரைதேக்கரண்டி மஞ்சள்தூள், ஒரு தேக்கரண்டி உப்புத்தூளைப் போட்டு கலக்கி கிழங்குக் கலவையுடன் நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.

    பிறகு கடலைமாவில் ஆப்பச்சோடா மற்றும் மீதியுள்ள உப்புத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும்.

    பிறகு அடுப்பில் சூடான எண்ணெய் இருந்தால் அதில் ஒரு மேசைக்கரண்டியை எடுத்து மாவில் ஊற்றி தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

    பிறகு தயாரித்துள்ள கிழங்கு கலவையிலிருந்து எலுமிச்சையளவு உருண்டையாக எடுத்து மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு சிவக்க   பொரித்து எடுக்கவும்

Image by FlamingText.com

Friday, October 19, 2012

பிரட் ஜாமூன்

தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 3
பால் - சிறிது
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட் துண்டுகளை உதிர்த்து, அதை பாலால் சற்று பிசைந்து கொண்டு உருட்டிக் கொள்ளவும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட் வைத்துள்ள பிரட் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை போட்டு, பாகு போன்று காய்ச்சி, ஏலக்காய் சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.
பிறகு அந்த பாகுவில் பொரித்து வைத்துள்ள, பிரட் உருண்டைகளை சேர்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் பரிமாறவும்.
இப்போது சுவையான பிரட் ஜாமூன் ரெடி!!!

குறிப்பு: வேண்டுமென்றால் பிரட் துண்டுகளை வேண்டிய வடிவத்தில் வெட்டி, எண்ணெயில் பொரித்து, சர்க்கரை பாகுவில் போடலாம்.


Image by FlamingText.com

Friday, October 12, 2012

எம். ஆர் ராதாவின் சீரிய சிந்தனைகள்












Image by FlamingText.com

இடைவேளையில் தேனீர் கொஞ்சம்

வகை வகையாய்
உணவு தயாரித்துவிட்டுப்
பழைய சாதம் தின்று
படுத்துக் கொள்கிறாள்
வேலைக்காரி..!




திருமணம் !
தாயார் வீட்டு
தனிச்சிறையிலிருந்து
மாமியார் வீட்டு
மத்திய சிறைக்கு மாற்றபடுவது!


கண் பார்வை ரொம்பக்
குறிஞ்சிப் போச்சி டாக்டர்.!
யாரைப் பார்த்தாலும் முகம்
சரியாத் தெரியல.
  "அப்படின்னாக் கழுத்து
வரைக்கும்தான் சரியாத் தெரியுதா?"




Image by FlamingText.com

தேடல்

காற்றில் கலந்தேன்!
காகிதம் நானானேன்.

கட்டி அணைக்காமல்
கிழித்து எறிந்தாயே!

அங்கும் இங்கும் சிதறி கிடந்தேன்.
அள்ளிக் கொள்ள கைகள் இல்லை.

பறந்து பறந்து தொலைந்து போனேன்
முகவரி இன்றி ஆனேன்!


Image by FlamingText.com

Monday, October 8, 2012

ஏழையா? பெருமைப்படு!

    பத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்
மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். 

ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ, தமது உடைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மை இழந்து விடுவோம் என்ற எண்ணம், பணக்காரர்களிடம் அதிகமாக இருப்பதில்லை. அவர்கள், மேலும் மேலும் பணத்தை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஏழைகளோ, தமது நண்பர்களுடனும், மனதுக்கு பிடித்தவர்களுடனும் பொழுதை கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய, ஏழைகள் விரும்புவதில்லை. ஆனால், ""உறவுகள் போனாலும், நட்பு போனாலும் கவலையில்லை; பணமே முக்கியம்; அதற்காக எங்கும் செல்லலாம்'' என்று, வசதி படைத்தோர் நினைக்கின்றனர். இவ்வாறு, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


Image by FlamingText.com

மலை உச்சியில் சவ பெட்டிகள்:

மலை உச்சியில் தொங்கும் சவ பெட்டிகள்: ஈஸியாக ஆத்மா சாந்தி அடையுமாம்!


       இறந்தவர்களின் உடலைப் பெட்டியில் வைத்து மல உச்சியில் தொங்கவிடும் வித்தியாசமான வழக்கம் சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பின்பற்றப்படுகிறது. மலை உச்சியில் உடலை விபத்தால் அவர்கள் இறைவனை நெருங்குகின்றனர். அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்று அப்பகுதியினர் நம்புகிறார்கள். இறந்தவர்களை புதைக்கும் அல்லது எரிக்கும் வழக்கமே உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் சீன, பிலிப்பைன்ஸ், உள்ளிட்ட நாடுகளில் சிலபகுதிகளில் இறந்தவர்களின் உடலை ஒரு பெட்டியில் வைத்து மல உச்சியில் தொங்கவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

   இந்த பழக்கம் ஒரு சில பிரிவினரால் மட்டுமே பின்பற்றப்படுகிறது. இறந்தவர்கள் இறைவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்பதால் இப்படிச் செய்வதாகக் கூறபடுகிறது. அனால் சீனாவிலேயே இந்த வழக்கம் அதிகம் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம்முறை வழக்கத்திலிருந்து வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

         "இது புனிதமான செயல். மற்ற மக்களிடம் இருந்து விலக்கி எடுத்துசென்று, மலை உச்சியில் வைப்பதால் அவர்கள் இறைவனை எளிதில் நெருங்குகின்றனர். இறந்த பிறகு, அவர்களது ஆத்மா சாந்தியடைகிறது" என்று அவர்கள் நம்புவதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

Image by FlamingText.com

Monday, October 1, 2012

மிட்டாய் கதை - உடைகள்

உடைகள்

முன்பு ஒருநாள், அழகும் அவலட்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்துகொண்டன.

'நாம் சேர்ந்து குளிப்போமா?' என்று அழகு கேட்க, அவலட்சணம் ஒப்புக்கொண்டது. இரண்டும், உடைகளை களைத்துவிட்டு  கடலில் ஆனந்தமாக நீந்திக்குளித்தன.

சிறுது நேரம் கழித்து, குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது. அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்துகொண்டு தா வழியே சென்றுவிட்டது.

பின்னர், குளித்துத் திரும்பிய அழகு, தா உடைகளைக் காணாமல் தவித்துப்போனது. ஆடையில்லாமல் தெருவில் செல்வதற்கு அதற்குக் கூச்சமாக இருந்தது. ஆகவே, வேறுவழியில்லாமல், அவலட்சனத்தின் உடைகளை அணிந்துக் கொண்டு சென்றது.

அன்றுமுதல் இன்றுவரை, உலகத்தார் பலரும், ஆடைகளைவைத்து, அழகையும் அவலட்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளைப் பார்த்து முகம் சுளித்து, அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர், அழகின் ஆடைகளில் மயங்கி, அவலட்சணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 

Image by FlamingText.com

தியானம் ஐந்து படிகள் -2

மகா மந்திர உச்சாடனம் செய்தல்

இந்த முறை உங்கள் உடலை ஒரு சக்தியாக உணர வைக்கின்றது.


இந்த இரண்டாவது பகுதியில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து கைகளில் சின் (chin) முத்திரையை உருவாக்கி உங்கள் முட்டிப் பகுதியில் வைக்க வேண்டும்.

இந்நிலையில் உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, செய்ய வேண்டும்.

தொடர்ச்சியாக உங்களின் மனம் பேசிக்கொண்டே இருகின்றது. வெளியே நாம் யாரோடும் பேசாமல் இருந்தாலும், உங்களுக்குள் எதாவது எதாவது ஒரு செயல் ஓடிகொண்டே இருக்கும். 

பொதுவாக மக்களுக்கு எந்த வித என்ன ஓட்டமும் இல்லாமல் அமர்ந்திருபதற்கு கஷ்டமான செயலாக இருக்கும். நீங்கள் தியானம் என்ற செயலில் இறங்கும் பொது, மனம் எதிர்ப்பு தெரிவிப்பதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த நேரத்தில்தான் நிறைய மக்கள் தியானத்தை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் உற்சாகம் இழந்து தியானமெல்லாம் நமக்கு சரிவராது என்று நினைத்து விடுகிறார்கள்.

ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் தான் முதலில் கிடைக்கும். நீங்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடந்து அமிர்தத்தை எடுப்பதாகப் புராணத்தில் ஒரு  கதை உள்ளது. அனால் கடலைக் கடந்த பிறகு முதலில் கொடிய விஷம் தோன்றியது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்ககூடியதாக இருந்தது. அதற்கடுத்து நிறைய பொருட்கள் வெளிவந்த பிறகே முடிவில் அமிர்தம் வந்தது. இந்தக்கதை தியானத்தின் ஒரு முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.


Image by FlamingText.com

Search This Blog