தேவையானவை:
மிளகு -6
பட்டை -2
ஏலக்காய் -6
பிரியாணி இலை -3
லவங்கம் -3
கிராம்பு -1/2 ஸ்பூன்
மேஸ்-2
சீரகம் -1 ஸ்பூன்
அண்ணாச்சி பூ -3
முதலில் கொடுக்கபட்டுள்ளதை அரைத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
மிளகாய் தூள், தனியா துள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், தயிர் மற்றும் உப்பு. இவை அனைத்தும் 2 ஸ்பூன் வீதம் எடுத்துகொள்ள வேண்டும்.
நன்கு கழுவிவைத்த சிக்கனுடன் அரைத்துவைத்த மசாலாவை கலக்க வேண்டும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், இஞ்சிபூண்டு விழுது, மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும்.
பின்பு அதனுடன், புதினா, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், இவற்றை ஒன்றாக கலக்க வேண்டும்.
அதனுடன் சிறிது எண்ணெய் ஊற்றவேண்டும். பிறகு 3-4 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இப்போது மசாலா நன்கு சிக்கனுடன் ஊறி இருக்கும்.
பாஸ்மதி அரிசி 500 கிராம் எடுத்து ஒரு பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
பின்பு, ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சீரகம், இலை, மற்றும் உப்பு, 2 அல்லது 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும்.
ஒரு மணி நேரம் ஊறவைத்த அரிசியை கொதிக்கும் நீருடன் சேர்த்து 5 நிமிடம் வைக்கவேண்டும்.
முக்கால் அளவு வேகவைத்த அரிசியை சிக்கனுடன் சேர்க்கவேண்டும்.
அதன்மேல் வருத்த வெங்காயத்தை சேர்க்கவேண்டும்.
2 ஸ்பூன் பாலுடன் சிறிது குங்குமபூ அல்லது கேசரி பவுடர் சேர்க்க வேண்டும்.
அதனுடன் 2 ஸ்பொன் நெய் சேர்க்கவேண்டும். இது தேவைபட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.
ரோஸ் வாட்டர் 1 ஸ்பூன் சேர்க்கவேண்டும். மற்றும் kewra water 1 ஸ்பூன் சேர்க்கவேண்டும்.
கடைசியாக ஒரு கனமான மூடிக்கொண்டு மூடிவைக்கவேண்டும். 5 நிமிடம் அதிக சூட்டிலும் , பிறகு 10 நிமிடம் குறைந்த சூட்டிலும் வைக்க வேண்டும்.
10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட வேண்டும். பிறகு 10 நிமிடம் கழித்து திறந்து பரிமாறவும்.

