Pages

Subscribe:

Wednesday, September 17, 2014

சம்சாரம்

சம்சார பாரம் என்ற சொல்லில் பொருள்:
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் ஒருத்தர் கேட்டாரு, "இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புவர்கள் கை தூக்குங்கள்".
ஒருவனை தவிர அனைவரும் கை தூக்கினாங்க, பேச்சாளர் கேட்டார், ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?"
"என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்."
ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
என் மனைவி சொர்க்கம் போய்  விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல தான் இருக்கு,.


Image by FlamingText.com

Monday, September 15, 2014

எலுமிச்சை சாறு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ளஉணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள்,சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. Stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.


Image by FlamingText.com

சமையலில் செய்யக்கூடாதவ....செய்ய வேண்டியவை

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.



Image by FlamingText.com

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில விசித்திரமான வழிகள்!!!

உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள். இதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.

* கர்ப்பிணிகளுக்கு வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை ஆண். ஆனால் வயிறு பெரியதாக இருந்தால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.

* இல்லாவிட்டால், தெற்கு திசையை நோக்கி நிற்கும் போது, வயிறானது கீழே இறங்கி காணப்பட்டால், ஆண் குழந்தை என்றும், அதுவே வயிறு பெரியதாக காணப்பட்டால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.

* இந்த முறையின் படி பலருக்கு உண்மை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தின் துடிப்பு நிமிடத்திற்கு 140+ ஆக இருந்தால், பெண் குழந்தை என்றும், 140- ஆக இருந்தால் ஆண் என்றும் அர்த்தம். ஆகவே இதயத் துடிப்பை கண்க்கிட்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* கர்ப்பிணிகளுக்கு புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஏங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே இனிப்பு சாப்பிட விரும்பினால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம். இதுவும் அக்காலத்தில் கணிக்கும் வழிமுறைகளில் ஒன்று.

* சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை. ஆனால் கர்ப்பிணிகள் நன்கு அழகாக, பொலிவோடு காணப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.

* பொதுவாக கர்ப்பிணிகள் சிலருக்கு காலையில் சோர்வு அதிகம் இருக்கும். ஒருவேளை அப்படி எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

* வயிற்றில் பெண் குழந்தை இருந்தால், கர்ப்பிணிகள் சோர்வாகவும், வலிமையின்றியும் இருப்பார்கள். ஏனெனில் வயிற்றில் வளரும் பெண் குழந்தையானது, தாயிடமிருந்து, அழகு மற்றும் வலிமையை எடுத்துக் கொண்டு வளர்கிறதாம். மேற்கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். இவை நகைச்சுவையாக இருந்தாலும், பலருக்கு சாத்தியமாக உள்ளது.


Image by FlamingText.com

ஜோக்ஸ் -3

அவள்: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்?

இவன்: 49

அவள்: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே?

இவன்: பழைய ஜோக்; கதவ திறந்து.

அவள்: அப்ப மானை?

இவன்: யானைய எடுத்துட்டு வெப்பேன்.

அவள்: காட்டுல சிங்க ராஜா விருந்து வெச்சார். ஒரு
மிருகம் மட்டும் போகல, எது?

இவன்: மான். அது ஃப்ரிட்ஜுக்குள்ளதான் இருக்கு.
அவள்: பாட்டி முதலைகள் இருக்கற ஆற்றை எப்டி
ஈஸியா கடந்தாள்?

இவன்: முதலைகள்தான் சிங்க ராஜா விருந்துக்கு போய்டுச்சே.

அவள்: ஆனாலும் அவள் ஆற்றை கடக்கைய்ல செத்துப்போனாள்.ஏன்?

இவன்: ஏன், தெரியலையே…
அவள்: அந்த செங்கல் அவ தலையில விழுந்துடுத்து.


Image by FlamingText.com

ஜோக்ஸ் -2

மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!

கணவன் : ஏன்? என்னாச்சு..?

மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!

கணவன் : சரி...!

மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!

கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே!

மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)

(வாசலிலிருந்து வந்த மகன்...)
மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா!

அப்பா : ஏண்டா..?

மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!!

அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே.,அய்யய்யோ ...இப்ப நான் என்ன செய்வேன்..!எங்க போவேன்..!செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே.....இத கேட்க நாதியில்லையா....

Image by FlamingText.com

நம்பினால் நம்புங்கள்.

நம்பினால் நம்புங்கள்.

எவரெஸ்ட் உச்சியை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எட்டியிருகின்றனர். ஆழ்கடல் தரையைத் தொட்டவர்களோ இருவர் மட்டுமே.

மனித காதுகள் 130 டெசிபல் அளவு வரையிலுள்ள ஒளியை வலியின்றி கேட்கும்.

விண்ணில் சுட்டும் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள்களில் 40% இங்கிலாந்தை சேர்ந்தவை.

10% மக்களுக்கு கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் திறன் உள்ளது. அவர்களது வியர்வை வாசனையை 30 மீட்டர் தொலைவிலிருந்தும் கூட, கொசுக்களால் அறிய முடியும்.
1920 களிலேயே "கிறிஸ்டல் செட் ரேடியோ" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மொபைல் போன்  உருவாக்குவது பற்றி விவாதிக்கபட்டிருன்தது.

சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு கலந்த உணவுகளில் மனத்திண்மையை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

சுத்தமான நீரை, அது உறைவதற்கு முன், மைனஸ் 48டிகிரி செல்சியல் வரை குளிர்விக்க முடியும்.





Image by FlamingText.com

Search This Blog