Pages

Subscribe:
Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

Friday, August 3, 2018

முகத்திற்கு கொய்யா இலையின் பயன்கள்

                                                                                       Please Subscribe : V2 CHANNEL

முகத்தில் சுருக்கம் வருவது இன்று பெரும்பாலோர்க்கு உள்ள பிரச்சினையே. உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் குறைவால் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக இது இளமையை விரைவிலேயே இழக்க செய்துவிடும். இதற்கு சிறந்த தீர்வு கொய்யா இலையே. இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் முக சுருக்கத்தை போக்கி "என்றும் பதினாறு" போல தோற்றத்தை தரும். இந்த இலைகளை காயவைத்து பொடி செய்து நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் சுருக்கங்கள் மறையும்.

பலருக்கு இறந்த செல்கள் முகத்திலேயே தங்கி விடுகின்றன. இதனால் அவர்களுக்கு கரும்புள்ளிகள் வருகிறது. இது முக அழகையே முற்றிலுமாக கெடுத்து விடும். இதனை அகற்ற கொய்யா இலையை அரைத்து, அதனுடன் 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த அழகு குறிப்பு உங்கள் காதலியின் முகத்தை கண்டிப்பாக தேவதை போல மாற்றும்.

உங்களின் காதலியின் சருமம் என்றுமே புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் நம்ம கொய்யா இலை அதற்கு உதவும். கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். அத்துடன் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள், முகம் மற்றும் தோல்களையும் பாதிக்க செய்யும். சுற்றுசூழல் சீர்கேட்டால் இதன் பாதிப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது. இதனை சரி செய்ய கொய்யா இலையை வெயிலில் உலர வைத்து, பொடி செய்து பின் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். 20 நிமிடம் கழித்து இதனை காட்டன் துணியால் துடைத்து விடவும். இது நல்ல பலனை தரும்.

உங்கள் காதலியின் முகம் மிகவும் வெண்மையாக இருக்க இந்த அழகு குறிப்பை பயன்படுத்துங்கள். கொய்யா இலையை அரைத்து அதனுடன் சிறுது ரோஸ் நீரை ஊற்றி கலக்கவும். பின் சிறிதளவு மஞ்சளையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் மினுமினுப்பான தேவதை போன்ற சருமம் பெறலாம்.

Image by FlamingText.com

Monday, March 14, 2016

சந்தன மரம் வளர்க்கலாம்

                                                                           Please Subscribe : V2 Channel

உங்கள் நிலத்திலும் சந்தன மரம் வளர்க்கலாம் சட்டம் அனுமதிக்கிறது...




   தெய்வங்கள் அனைத்துக்கும் சந்தன அபிசேகம் செய்யப்படுகிறது. மனிதனுக்கு நெற்றியிலும்,நெஞ்சிலும், உடல் முழுக்கவும் பூசிக்கொள்ள பயன்படுகிறது. சோப்பு,மாலை என்று பல விதங்களில் பயன்படுகிறது.

இப்படி பயன்தரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்கவும் முடியாது. தப்பித்தவறி தானே வளர்ந்திருந்தால் கூட அதை வெட்டவும் முடியாது. காரணம், பட்டா நிலத்தில் சந்தன மரம் அதுவாக வளர்ந்திருந்தால் கூட அது அரசுக்கு தான் சொந்தம் என்று தான் சட்டம் இருந்தது. சந்தன மரத்தை வெட்டி விற்றால் கோடீசுவராக மாறி விடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் இப்போதும் கூட காடுகளில் இருக்கும் சந்தன மரங்கள் தேக்கு கருங்காலி மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவது தனிக்கதை. இது இருக்கட்டும். இப்போது சந்தன மரங்களை நாமே வீட்டில் இருக்கும் காலி இடத்தில் வளர்க்க முடியும். தற்போது சட்டம் இதை அனுமதிக்கிறது. இது பற்றிய ஒரு பார்வை...

மலைப்பகுதிகள் பார்க்க ரம்மியமானவை. காரணம் மனிதனின் காலடிகள் அடர்ந்த காடுகளுக்குள் அவ்வளவாக படுவதில்லை.அதனால் அவை அவற்றின் கற்பை இழக்காமல் கன்னி காத்து வருகின்றன. மனிதனின் கண்ணுக்கு தெரியவராமல் பல வித மரங்கள் பெருங்காடுகளில் வளர்ந்து ஓங்கி நிற்கின்றன. அவற்றில் தேக்கு,கடம்பு,மஞ்சள் கடம்பு,தோதகத்தி,சந்தனம் போன்றவை முக்கிய மரங்களாகும். இந்த மரங்கள் எல்லாம் இயற்கை தந்த வரம். இவை வானிலிருந்து மழையை ஈர்த்து மனிதனுக்கு சிற்றோடையாக, ஆறாக தருகின்றன. காற்றை தூய்மைப்படுத்தி தென்றலை வீசச்செய்கின்றன. மலைவாழ் ஆதிவாசிகள் தேன்சேகரிக்கவும், மூலிகைகளை சேகரிக்கவும் உதவுகின்றன.

ஆனால் நகரத்தில் உள்ள சில பேராசை பிடித்த மனிதர்களால் இப்படிப்பட்ட காடுகளிலிருந்து அதிகம் வெட்டி கடத்தப்படுவது சந்தன மரங்கள் தான். காரணம் சந்தனத்திற்கு சர்வதேச அளவில் கடும் கிராக்கி. சந்தன மரம் பரவலாக வளர்க்கப்பட்டு விட்டால் இந்த கிராக்கி குறைந்து காடுகளில் உள்ள மரங்கள் வெட்டி கடத்தப்படுவது குறைந்து விடும்,சுற்றுப்புறசூழலை பாதுகாக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு 2008 நவம்பர் முதல் ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.

இதன்படி சந்தன மரங்களை வளர்க்க விருப்பமுள்ள உழவர்கள் அல்லது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் தரப்பட்டுள்ளன.

சந்தன மரங்களை வளர்க்க விரும்புபவர்கள் தங்கள் நிலங்களில் சந்தன மரக்கன்றுகளை வாங்கி நடலாம்.

நட்ட பிறகு நடப்பட்ட நிலத்தின் பட்டா எண், எத்தனை கன்றுகள் அந்த நிலத்தில் நடப்பட்டுள்ளது என்பது பற்றிய விவரங்களை வருவாய்த்துறை அடங்கலில் பதிவு செய்து அதற்கான சான்றிதழை வருவாய்த்துறையிடமிருந்து வாங்கி மாவட்ட வன அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்படி வளர்க்கப்படும் மரங்களை நன்றாக வளர்ந்து வெட்டும் நிலைக்கு வரும் போது மாவட்ட வன அலுவரிடம் வெட்ட போகிறோம் என்பதை தெரிவித்து ஒப்புதல் வாங்க ஒரு விண்ணப்பத்தை தர வேண்டும்.

இந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் வன அதிகாரிகள் ஆய்வு செய்து விட்டு அந்தமரங்களை வெட்ட அவர்களே ஏற்பாடு செய்வார்கள்.

இப்படி வெட்டப்படும் மரங்களை அரசாங்க மரக்கிடங்குக்கு கொண்டு வந்து வைரம் பாய்ந்த பகுதியை மட்டும் பிரித்து எடுப்பார்கள். பிறகு அந்த கட்டைகளை தரத்தின் அடிப்படையில் 19 வகையாக பிரித்து விற்பனை செய்வார்கள்.

விற்பனைத் தொகையில் 80 சதவீதம் மரத்தை நட்டு வளர்த்த நிலத்தின் சொந்தக்காரருக்கு சேரும். மீதமுள்ள 20 சதவீதம் தொகையில் வெட்டுக்கூலி,சுத்தம் செய்த கூலி,தரம்பிரித்த கூலி,பாதுகாத்தது மற்றும் ஏலம் நடத்திய வகையில் ஆன செலவுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இந்த பணம் அரசாங்கத்திற்கு சேரும்.

மரத்தை வெட்டி எடுத்த 90 நாட்களில் நிலத்தின் உரிமையாளருக்கு பணம் கிடைத்து விடும்.

எனவே கல்லுக்காடு,கரட்டுக்காடு,வறட்சியான நிலம் என எல்லா இடத்திலும் சந்தன மரம் வளருமுங்கோ...

என்ன சந்தன மரம் வளர்க்க கிளம்பலாமா....
நன்றி:இணையம் poocharam.net
------------------------------------------------------------------------------

1.இந்தியாவில் சந்தனம் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது?


சந்தன மரம் இந்தியாவில் அதிகமாக தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படுகிறது.

2.தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தில் சந்தன மரம் அதிகம் காணப்படுகிறது?
திருவண்ணாமலை,சேலம்,தர்மபுரி,நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிக அளவிலும் மற்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் சந்தன மரம் காணப்படுகிறது.

3.தமிழ்நாட்டில் எந்த வகையான சந்தனமரம் வளர்கிறது?

தமிழ்நாட்டில் எல்லாவகையான சந்தனமரமும் வளர்கிறது.

4.விவசாயிகள் எந்த நிலத்தில் சந்தனம் பயிரிடலாம்?

மானாவாரி நிலங்களிலும்,வடிகால் வசதியுள்ள விவசாய நிலங்களிலும் பயிரிடலாம். சந்தன மரத்தின் குடும்ப வகையை சார்ந்த வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் சந்தன மரமும் வளரும்.

5.சந்தன கன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறதா?
மத்திய அரசு மானியம் 75% அளிக்கிறது. குழி எடுக்கும் செலவு,நடவு செலவு,உரச்செலவு, நாற்று வாங்கும் செலவு என மொத்த செலவில் 75% ஆகும்.

6.சந்தன மரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா?
சந்தன மரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை வரி செலுத்த வேண்டியுள்ளதால் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வனத்துறையினர் விவசாயிகளுக்கு ( மாதம் மாதம் நடக்கும் டெண்டர் மூலமாக) விற்பனை செய்து தருகிறார்கள். அதனால் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் விற்பனை செய்து தரப்படும்.

7.சந்தன மரத்தை மாவட்ட வனத்துறையினர் விற்பனை செய்து தருவார்களா?
சந்தன மரங்களை கட்டிங் செய்து ரகம் பிரித்து அதன் கழிவுகளை நீக்கியும், மரத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு விலை நிர்ணய சம்மதத்தோடு மாவட்ட வனத்துறையின விற்று தருவார்கள்.

8.சந்தன ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளதா? எந்த மாநிலத்தில் உள்ளது.?

ஆயில் தொழிற்சாலை உள்ளது. அது தமிழ்நாடு,கேரளா,பாண்டிசேரி,குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது.

9.சந்தன் மரத்தில் என்னென்ன பொருட்கள் உருவாக்கப்படுகிறது?
சந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.

சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.

10.சந்தன் ஆயில் எது எதோடு சேர்க்கப்படுகிறது?

சந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம் எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.

சந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது.

11. சந்தன இந்தியாவில் அழியும் தருணத்தில் உள்ளதா?
சந்தன உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி சந்தன மரத்தின் தேவையானது ஆண்டிற்கு 5000 முதல் 6000 மெட்ரிக் டன்கள், அதில் 2.3 பங்கு இந்திய சந்தனத்திற்கு தான்.

இந்தியாவை பொருத்த வரையில் மரத்தின் உற்பத்தியானது ஆண்டுதோறும் குறைந்து கொண்டுதான் வருகிறது. தற்போது அழியும் தருவாயில் உள்ளது. இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை விளக்குகிறது.

Image resized to 95% of its original size [522 x 208]
Image

தற்போது அதிகரித்து வரும் சந்தன மரத் தேவையால் இதன் மதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை தெளிவாக விளக்குகிறது.
Image resized to 94% of its original size [527 x 349]
Image

இப்பற்றாக்குறைய போக்கவும் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படவும் அரசாங்கமானது தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி காடுகளில் மட்டும் உற்பத்தியான சந்தன மரத்தின் உற்பத்தியை அதிகரிக்க விவசாய நிலங்களிலும் விளைவிக்கலாம் என அரசு ஆணை வழங்கியுள்ளது.

12. சந்தன மரத்தினை இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும் விவசாயம் செய்யலாமா?

அனைத்து மாநிலங்களிலும் சந்தன மரம் வளர்க்கலாம். விற்பனை வரி மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

13.சந்தன மரத்தை வளர்க்க அரசு ஆணை உள்ளதா?.

விவசாய நிலத்தில் சந்தன மரத்தினை வளர்க்க 2002 அரசு ஆணையும் 2008 அரசு ஆணையும் உள்ளது.

14.இந்தியாவில் சந்தன கட்டை ஒரு கிலோ அரசு விலை எவ்வளவு?
சந்தன மரத்தின் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.7500 வரை விற்பனை ஆகிறது.

15.ஒரு லிட்டர் சந்தன ஆயில் என்ன விலை?
சந்தன ஆயில் தற்போது 1 லிட்டர் ரூ.70000 முதல் 190000 வரை விலை போகிறது.

16. சந்தன மரம் வளர்க்க் துணை செடி வளர்க்க வேண்டுமா?

சந்தன மரமானது 3 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை நைட்ரஜனை உற்பத்தி செய்து கொள்ளும் தன்மை அதற்கு இல்லை. அதனால் வேர் முடிச்சுகளில் ஹைட்ரஜனை சேகரித்து வைக்கும் தன்மை கொண்ட துணை செடியினை அருகில் வளர்த்தால் தான் சந்தன மரம் வளரும்.

17. சந்தன மரம் ஒட்டுண்ணி அல்லது சாருண்ணி வகையினை சாந்துள்ளதா?

சந்தனம் மரம் ஒட்டுண்ணியோ அல்லது சாறுண்ணி வகையையோ சார்ந்தது இல்லை.

18.சந்தன மரத்தோடு துணைமரம் வளர்ப்பது எதற்காக?

சந்தன மரம் வளர்க்க ஆரம்ப காலத்தில் நிழல் தேவைப்படுகிறது. அதனால் சந்தன மரத்திற்கு இடைவெளியில் குமிழ்மரம் அல்லது மலைவேம்பு மரம் வளர்க்கலாம். சந்தன மரத்தின் குறைந்த முதிர்வு காலம் 12/14 ஆண்டுகள் ஆகும். அதனால் இடை வருமானம் ஈட்டவும் துணைமரம் உதவியாக உள்ளது. அதாவது குமிழ் கட்டிங் 6 ½ / 7 ஆண்டுகள், மலைவேம்பு 7 / 9 ஆண்டுகள்.

19. சந்தன விதை எவ்வாறு தேர்வு செய்கிறீகள்?

சந்தன விதை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான செயலாகும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆன மரத்தில் தான் தரமான விதை கிடைக்கும்.

20. எந்த வகையான மரத்திலிருந்து (இரகம்) விதை தேர்வு செய்ய வேண்டும்?
அதிக ஆயில் தன்மையும் அதிக வாசனையும் உடைய மரத்தில் இருந்து விதை தேர்வு செய்தால தான் விளைச்சலும் இலாபமும் உறுதி செய்யப்படும்.

21.சந்தன விதை எத்தனை நாட்களில் முளைக்கும்?

சந்தன விதை 32/45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை முளைக்கும் தன்மை கொண்டது.

22.விவசாயிகள் எத்தனை மாதம் வளர்ந்த சந்தன் கன்றுகளை நடவு செய்யலாம்?
1 வருடம் ஆன,அதற்கு மேலும் உள்ள சந்தன கன்றுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

23. ஒரு வருடம் ஆன சந்தன கன்றுகள் எந்த நிலையிலும் வளரக்கூடியதா?
ஒரு வருடமும் அதற்கு மேலும் வளர்ந்த சந்தனக் கன்றுகள் தான் பல்வேறு வகையான சீதோஷண நிலையினை தாங்கி வளரும் தன்மை கொண்டது.குறைந்த பராமரிப்பே போதுமானது.

24.இயற்கை வேளாண் முறையில் சந்தனம் கன்றுகளை வளர்ந்து தருவீர்களா?

தரமான சந்தன கன்று என்பது இயற்கை வேளாண் முறைப்படி வளரந்த சந்தன கன்றுகள் தான். இயற்கை வேளாண் முறைப்படியும் ஆர்கானின் முறைப்படியும் தான் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

25.சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகள் சங்கம் உள்ளதா?
உள்ளது அதன் பெயர் “தென்னிந்திய நறுமண / சந்தன மூலிகை மரம் / பயிர் வளர்ப்போர் விவசாயிகள் சங்கம். அரசு பதிவு எண்: 34.VPM.2011

26.வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு சந்தன மரக் கன்றுகளை அனுப்பி வைப்பீர்களா?

வெளிநாட்டிற்கு தரமான சந்தன கன்றுகளை அனுப்பி வைக்கிறோம். தரமான விதைகளையும் அனுப்பி வைக்கிறோம்.

27.நீங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தும் சந்தன விதைகள் விலைக்கு கிடைக்குமா?

விதைகள் விற்பனைக்கு உண்டு.

28.சந்தன மரம் மூலிகை மரம்தானா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சித்தரகளால் கண்டறியப்பட்ட சந்தன மரமானது சித்த வைத்தியத்திற்கு மூலிகையாகப் பயன்படுகிறது.

சந்தனம் அதன் நறுமணம் குணம் இன்றி மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்காக களிம்புகள், தீக்காயங்கள் மற்றும் அழுகளை தடுக்கும் மருந்துகள் ஆகியவற்றை தயாரித்தலில் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

29.எந்த வைத்திய முறைல் சந்தனத்தை பயன்படுத்துகிறார்கள்?
உடல் உஷ்ணத்தை தணிக்க, உஷ்ணத்தால் உண்டாகும் நோயை குணப்படுத்த சித்த வைத்திய முறையில் பல மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

30.சந்தன மரத்தில் சித்திர வேலைப்பாடுகள் நடக்கும் முக்கிய இடங்கள் எங்குள்ளது?
அங்கோலா,பெங்களூர்,கொன்னவார்,கும்தா,மைசூர்,சாகர்,சோரப்,கிர்ஸி,தால்குப்பா,திருப்பதி,சூரத், தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் ஆகும்.

31.இந்தியாவில் அதிகம் சந்தன சோப்பு தயாரிக்கும் கம்பெனியின் பெயர் சொல்ல முடியுமா?
மைசூர் சாண்டல் சோப்பு

32.சந்தன சோப்பு உடம்புக்கு குளிச்சியை தருமா?
நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது.

33.சந்தன கன்று வளரும் தருணத்தில் வேர்க்கரையான் தாக்கும் வாய்ப்பு உள்ளதா?
ஒரு சில ஏரியாக்களில் வேர் கரையான் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

அதனால் நடவு செய்யும்போதே குழிக்கு 200 கிராம் நயமான வேப்பம் புண்ணாக்கு கலந்து நடவு செய்தால் முழுமையாக வேர்க்கரையானை கட்டுப்படுத்தலாம்.

34.மண் பரிசோதனை செய்த நிலத்தில் சந்தன பயிர் செய்வது சிறந்த முறையா?
மண்ணில் கார அமில தன்மையை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்ப் போல் நிலத்தை சீர் செய்து நடவு செய்தால மரம் நன்றாக வளரும்.

35.சந்தன மரம் எத்தனை ஆண்டுகளில் பயன் தரும்?

தரமான தாய் மரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நாற்றுக்களை பயன்படுத்தி கவாத்து முறையில் சந்தன மரத்தினை வளர்த்தால் 10 / 12 ஆண்டுகளில் முதிர்வு தன்மைக்கு வந்துவிடும். தேவைப்பட்டால் அதிக ஆண்டுகள் வளர்க்கலாம்.

36.சந்தன மரம் உள்ள இடங்களில் அதிகம் மழை பெய்யுமா?
பொதுவாகவே சந்தன மரங்களுக்கு காற்றை குளிர்விக்கும் தன்மை அதிகம் உள்ளது. அதனால் சந்தனமரம் அதிகம் உள்ள ஏரியாவில் கண்டிப்பாக மழை அதிகமாக பெய்யும்.

37.சந்தன மரம் உலக சந்தையில் அதிக வரவேற்பு அடைந்துள்ளதா?
சந்தன ஆயிலுக்கு நிகரான ஒரு ஆயில் இதுவரை எதுவும் இல்லாததாலும்,சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுவதாலும் உலக சந்தையில் சந்தனத்தின் மதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

38.எந்த நாட்டிற்கு சந்தன மரம் அதிகம் தேவைப்படுகிறது?

உலகத்தில் ஆசியா கண்டம், ஆப்பிரிக்கா கண்டம்,ஆஸ்திரேலியா கண்டம் மேலும் முக்கியமாக இஸ்லாமியர்கள் வாழும் நாட்டிற்கு அதிகமாக தேவைப்படுகிறது.

39.சந்தன கன்று நடவு செய்த நிலத்தில் ஊடுபயிர் செய்யலாமா?
சந்தம மர நடவு செய்த தோட்ட்த்தில் ஒரே காலகட்டத்தில் 5 அடுக்கு வருமானம் பெறலாம்.

i) சந்தனத்துடன் குமிழ் மரத்தினையும்

ii) குமிழ் மரத்தில்

iii) மிளகு காப்பியையும்,மேலும்

iv) வாழையையும்

v) மூலிகை பயிரான எளிதில் வருமானம் தரக்கூடிய மணத்தக்காளி,முருங்கைக்கீரை,அரைக்கீரை, தண்டு கீரை, பொன்னாங்கன்னி,சிறுகீரை செடி வகையான் மருதாணி,செம்பருத்தி,கருவேப்பிலை,துளசி,வல்லாரை ஆகியவைகளை மரத்தோட்டத்தில் ஊடுபயிராக வளர்த்து பயன் பெறலாம்.

40.நீங்கள் சந்தன கன்று எந்த முறையில் உற்பத்தி செய்கிறீர்கள்?

ஏதோ ஒரு சந்தன மரத்தில் இருந்து விதை தேர்வு செய்து கன்று உற்பத்தி செய்தால் மரத்தொட தரத்திற்கும் அதன் முதிர்வு தன்மைக்கும் உத்திரவாதம் அற்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதனால் விதை தேர்வு செய்யும் தாய் மரமானது தரம் பிரிக்கப்பட்ட கிராப் வகையைச் சார்ந்த்தாகும்.அதனால் வாசனையும் தரமும் உறுதி செய்யப்படுகிறது.



41.சந்தன மரத்தினை விவசாயிகளே தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய முடியுமா?

சந்தன மரத்தின் விற்பனை என்பது உலக வர்த்தகம் ஆகும்.அதனால் தான் அரசே அந்த முழுப் பொறுப்பை ஏற்று விவசாயிகளுக்கு உதவி செய்கிறது. சந்தன மரம் விற்பனையில் அதிகப் படியாக வருவாய் வருவதால் அரசு மூலமாக பெறும் போது வெள்ளைப் பணமாக கிடைக்கும். அதனால் விவசாயிகளுக்கும் பாதுகாப்பாக அமைந்து விடுகிறது.

42.சந்தன மரத்தை கவாத்து முறையில் வளர்த்தால் வைரம் அதிகமாக ஏறுமா?

கண்டிப்பாக அதிகமாக ஏறும்.மேலும் குறைந்த காலத்திலேயே மரம் முதிர்வு தன்மை அடைந்துவிடும்.

43.சந்தனம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்டதா?
சந்தனம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்ட மரமாகும்.

44.சந்தன மரம் உள்ள இடம் குளிர்ச்சியாக இருக்குமா?
காற்றை குளிர்விக்கும் தன்மை சந்தன மரத்திற்கு அதிகமாக இருப்பதால் சந்தன மரம் உள்ள இடத்தில் குளிர் அதிகமாக இருக்கும்.

45.சந்தன மரம் உவளர்ப்போ அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டுமா?

பட்டா நிலத்தில் சந்தன மரத்தினை நடவு செய்ய வேண்டும்.நடவு செய்த 6 மாதம் கழித்து கிராம நிர்வாக அலுவலரிடம் பயிர் அடங்கலில் பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு ஒன்றே போதுமானதாகும்.

46.சந்தன மரம் எத்தனை வகைப்படும்?
இந்தியாவில் விளையும் சந்தன மரத்தின் வகைகள்:
1.ருட் ஐ கிளாஸ்

2.ரூட் II கிளாஸ்

3.ரூட் III கிளாஸ்

4.ஜட்ஜ் போக்கல் I கிளாஸ்

5.ஜட்ஜ் போக்கல் II கிளாஸ்

6.சோட்லா

7.ஜீரியா

8.ஜெயின் பெக்கர்

9.அயன் போக்கல்

10.அயன் சில்டா

11.ஜர் சில்டா

12.அபிரியா

13.சாட்ப் சால்டா

14.மில்விடு சில்டா

15.பசோலா பக்கினி

16.ஸார்டு ரெஸ்ட்

17.ஸார்டு ருட்ஸ்

18.ஜார்புல் அட்



அயல்நாடுகளில் விளையும் வகைகள்:
1.Vilayed Both

2.China Both

3.Panjam

4.Katpattla(கட்பட்டலா)

5.Pakarjhh (பகர்தாத்)

47.எந்த வகையான கன்று விவசாயிகளுக்கு உகந்தது?
எல்லா சீதோஷண நிலையையும் தாங்கி வளரக்கூடிய சந்தனகன்றுதான் விவசாய நிலத்திற்கு ஏற்றதாகும்.

சந்தன மரத்தின் மதிப்பானது மண்ணிற்கு அடியில் மதிப்பு அதிகம்,அதனால் பூமிக்கு அடியில் நன்கு விளையக்கூடியதும்,மண்ணிற்கு மேலும் நல்ல வளர்ச்சி அடையும் ஜட்ஜ் போகல் ஐ கிளாஸ் இரகம் தான் விவசாய நிலத்திற்கு ஏற்றதாக உள்ளது.

48.சந்தன கன்றுகள் எத்தனை ஆண்டுகாலம் உயிர் வாழும்?
சந்தன மரத்தின் சராசரி ஆயுள் காலம் 40 / 45 ஆண்டுகள் ஆகும்

49.சந்தன இலையில் சந்தன வாசனை வருமா?
சந்தன இலையில் சந்தன வாசனை வராது.

50.சந்தன மரத்தில் எத்தனை ஆண்டு கழைத்து வைரம்(சேவு) ஏற ஆரம்பம் ஆகும்?

சந்தன மரத்தில் 4 ஆண்டு கழித்து சேவு ஏற ஆரம்பம் ஆகும்.

51.சந்தன மரத்தில் எந்த பாகத்தில் ஆயில் எடுக்க பயன்படுகிறது?
சந்தன மரத்தின் வைரக் கட்டை மற்றும் வேர்ப்பகுதியில் இருந்து ஆயில் எடுக்கப்படுகிறது.

52.சந்தன மரத்தை ஒரு விவசாயி விற்பனை செய்ய உரிமை இருக்கிறதா?
சந்தன மரத்தை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு முழு உரிமை உண்டு.

53.சந்தன மரத்தை விலை நிர்ணயம் செய்வது யார்?
பப்ளிக் டெண்டர் மூலமாக விலை நிர்ணயம் நடைபெறூம்,ஆனால் விவாசாயியின் முழு சம்மதத்துடன் தான் விற்பனை செய்ய முடியும்.விலை கட்டுப்படி இல்லை என்றால் 6 மாதமோ அல்லது 1 வருடம் கழித்தோ விற்பனை செய்ய விவசாயிக்கு முழு உரிமை உண்டு.

54.சந்தன மர விற்பனை(பப்ளிக் டெண்டர்) எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

பப்ளிக் டெண்டர் மாதா மாதம் நடைபெறுகிறது.

55.சந்தன மரத்தை விற்பனை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது?
மாவட்ட வன அலுவலருக்கு முழு அதிகாரம் உள்ளது.

56.எந்த வகை சந்தன மரத்தில் பர்னிச்சர் செய்ய முடியும்?
பர்னிச்சர் செய்ய 15 வருடங்களுக்கு மேல் வயதுடைய மரத்தில் இருந்துதான் தயாரிக்க முடியும்.

57. 1 ஏக்கரில் எத்தனை சந்தன மரங்கள் நடவு செய்யலாம்?
8x8 அடி இடைவெளியில் 680 மரங்களையும்,

9x9 அடி இடைவெளியில் 537 மரங்களையும் நடவு செய்யலாம்.

58. ஒரு ஏக்கரில் சந்தனம் குறைந்த முதிர்வில் எவ்வளவு வருவாய் கிடைக்கும்?
ஒரு மரத்தில் குறைந்த அளவு 30 கிலோ சந்தன கட்டை கிடைத்தாலும் 550x30=16500 கிலோ. ஒரு கிலோ சந்தன கட்டை சராசரியாக ரூ.5000 விற்பனை ஆனால் கூட 16500x5000=ரூ.8,25,00,000./- அதில் பாதி அளவு கிடைத்தால் கூட ஏக்கருக்கு 4 கோடி ரூபாய் வருவாய் கண்டிப்பாக ஈட்டலாம்.

59.சந்தன கன்றுகளை எந்த நோய் தாக்கும்?
1.இலையுண்ணி பூச்சிகள்

2.இலையுண்ணும் வண்டுகள்

3.வெட்டுக்கிளிகள்

4.சாறு உரிஞ்சும் பூச்சிகள்

5.துளைப்பான்கள்

6.வேர்க்கரையான்கள்

60.சந்தனத்திற்கு அடியுரமாக எதை இடவேண்டும்?
நன்கு மக்கிய சாண எரு வேப்பம் புண்ணாக்கு,மண்புழு உரம் வரை கரையான் தொல்லையில் இருந்து மரத்தை பாதுகாக்கலாம்.

61.எனக்கு நிலம் இல்லை, ஆனால் நான் சந்தன விவசாயம் செய்ய முடியுமா?
சந்தனைத்தை நில உரிமையாளரும் வளர்க்கலாம். அல்லது குத்தகைதார்ரும் வளர்க்கலாம். அதாவது குத்தகை ஒப்பந்தம் செய்து சந்தன மரத்தினை வளர்க்கலாம். அவ்வாறு வளர்த்தால் குத்தகைதார்ருக்கே சந்தன மரம் சொந்தமாகும்.

62.சந்தன மரத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

5 வருடங்களுக்கு மேல் ஆன சந்தன மரத்திற்கு காப்பீடு செய்யலாம்.

63.மத்திய அரசு நலவாரியம் 2000 ஆம் ஆண்டு அமைத்தது.அதில் சந்தனம் இடம் பெற்றுள்ளதா?
மத்திய அரசு நலவாரியம் 2000 ஆம் ஆண்டில் சந்தன மரம் இடம் பெற்றுள்ளது.

64.தமிழ்நாட்டில் எந்த எந்த ஆண்டு சந்தனம் மரம் வளர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது?
அரசு ஆணையானது 2002 ஆம் ஆண்டு மற்றும் 2008 ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

65.வனத்துறையினருக்கு விவசாயிகள் எவ்வளவு வரியும்,சந்தனம் விற்றுக் கொடுக்கும் செலவும் கட்ட வேண்டும்?

சந்தன மரத்தினை விற்பனை செய்யும்போது அதன் முழு மதிப்பீட்டில் 10% தொகையும்,கட்டிங் எடுத்து விற்பனை செய்யும் செலவிற்காக 10% கட்ட வேண்டும்.

66.சந்தனத்தை சாகுபடி செய்யும் போது அரசு எந்த முறைப்படி பணத்தை பட்டுவாடா செய்யும்?
மரத்தின் உரிமையாளருக்கு மொத்த விலையில் 20 வீதம் 30 நாட்களுக்குள்ளும்,மீதித்தொகை 90 நாட்களுக்குள்ளும் தரப்பட வேண்டும்.

67.விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமை வனத்துறையினருக்கு உள்ளதா?

சந்தன மரங்கள் பெரிதாகி அதன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க ஒரு சில ஏரியாக்களில் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட வனத்துறை அலுவலரிடம் விண்ணப்பம் கொடுத்து பாதுக்காப்பிற்கு உண்டான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். சந்தன மரத்தை பாதுக்காப்பது வனத்துறையினரின் முழு பொறுப்பாகும். அனைத்து மரங்களுக்கும் வனத்துறையினர் பாதுகாப்பு செய்வார்கள்.

68.சொட்டு நீர் பாசனம் அமைத்து சந்தன மரத்தை வளர்க்கலாமா?

சொட்டு நீர் பாசனத்தில் சந்தன மரத்தை வளர்த்தால் சந்தன மரத்தின் வளர்ச்சி 15% முதல் 20% வரை வளர்ச்சி கூடுதலாக இருக்கும். சொட்டு நீர் பாசனத்தினால் மிக குறைந்த அளவு தண்ணீரே போதுமானது. தேவையான செடிக்கு மட்டும் தண்ணீர் போவதால் தேவையற்ற களைகள் முளைப்பதில்லை. அதனால் தோட்டத்தின் பராமரிப்பு மிக குறைவு. அதிகமான ஏரியாவை பாரமரிப்பதற்கு சொட்டு நீர் பாசனமே சிறந்த வழியாகும்.

69.பாதுகாப்பிற்கு சூரிய மின்வேலி அமைக்கலாமா?

1. ஆடு மாடுகளிடம் இருந்து தோட்டத்தை பராமரிப்பதற்கும்

2. மரத்தின் மதிப்பு அதிகம் ஆகும்போதும் சூரிய மின்வேலி அமைத்து பாராமரிப்பதே சிறந்த வழியாகும்.

70.என் நிலத்தில் வளரும் சந்தன மரத்தை சட்டத்தை மீறி யாரோ வெட்டினால் நான் எப்படி புகார் செய்வது?
சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். மரங்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு இருந்தால் 30 நாட்கள் கழித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். சந்தன மரத்தின் மதிப்பானது பூமிக்கு மேல் பகுதியில் 30% பூமிக்கும் கீழ் 70% மதிப்பு தன்மை கொண்ட்தாகும். பூமிக்கு மேல் உள்ள மரம் வெட்டப்பட்டால் பூமிக்கு கீழ் உள்ல வைரத்தின்(கட்டை) மதிப்பு மேலும் அதிகரிக்கும்.

71.வனத்துறை மாவட்டம் தோறும் செக் போஸ்ட் அமைத்து விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமா?

சந்தன மரத்தால் அன்னிய செலவாணி அதிகம் ஈட்டி தருவதாலும் அரசுக்கு வருவாய் அதிகரிப்பதாலும் சந்தன மரத்தினை தெசிய சொத்தாக கருதுவதாலும் அரசு வனத்துறையின் மூலம் கண்டிப்பாக சோதனை சாவடி அமைத்து பாதுகாப்பு செய்து தரும். அது அவர்களின் கடமையும் ஆகும்.

72.ஒரு ஏக்கரில் சராசரி எத்தனை டன் சந்தனம் எத்தனை வருடதில் விளையும்?

12 / 14 வருடத்தில் ஒரு மரத்தில் வைரம் (கட்டை) 30 கிலோ கிடைத்தாலும் ஏக்கருக்கு 53x30=15900 கிலோவாகும். 12 / 17 வருடம் வளர்த்தால் ஒரு மரத்தின் வரைம் 60 கிலோ கிடைக்கும்.அதாவது 31 டன் உறுதியாக இருக்கும்.

73.அனைத்து பட்ட நிலத்திலும் சந்தனம் வளர்க்கலமா?
அனைத்து பட்டா நிலத்திலும் சந்தனம் வளர்க்கலாம். வீடு,பள்ளி,கல்லூரி,தொழிற்சாலைகளில் உள்ள காலி இடங்கள் மற்றும் அனைத்து விவசாய பட்டா நிலங்களிலும் வளர்க்கலாம்.

74.இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் சந்தன வளர்ப்பு அரசு ஆணை உள்ளதா?
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திற்கும் சந்தன மரம் வளர்க்கும் அரசு ஆணை உள்ளது.

75. 2011 ஆண்டு சந்தனத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்ட்து?
ஒரு கிலோ சந்தன கட்டை அதிகபட்சமாக ரூ.7500/-

76. 5 ஆண்டுகள் கழித்து சந்தன மரத்தின் கவாத்து செய்யும் கழிவுகலை யார் அனுபதி பெற்று பொது மக்களுக்கு விற்பனை செய்யலாம்?

மாவட்ட வனத்துறை அலுவலரின் அனுமதி பெற்று விற்பனை செய்யலாம்.

77.கவாத்து செய்த சந்தன குச்சிகளை விற்க வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டுமா?
அனுமதி பெற்றுதான் விற்பனை செய்ய வேண்டும்.

78. மூலிகை சம்மந்தப்பட்ட அனைத்து விதமான பொருட்களை காட்டில் இருந்து வெளியே கொண்டு வர மலைவாழ் பழங்குடியினருக்கு அதிகாரம் இந்திய அரசால் அளித்துள்ளது என்பது உண்மையா?
உண்மையே

79.எந்த நாட்டில் விளையும் சந்தனத்திற்கு ஆயில் அதிகம் எடுக்க முடியும்?
இந்திய சந்தனத்திற்கு தான் ஆயில் அதிகம் கிடைக்கும். தரமானதாகவும் இருக்கும்,குறிப்பாக தமிழ்நாட்டில் விளையும் சந்தனத்திற்கு தான் ஆயில் தன்மையும் வாசனையும் அதிகம் இருக்கும்.

80.நறுமணம் அதிகம் வீசும் சந்தனத்திற்கு பெயர் என்ன?

வாசனை சந்தனம் அல்லது ஜவ்வாது சந்தனம்

81.சந்தன மரம் அதிவேகமாக வளரக்கூடியதா?
சந்தனம் மெதுவாக வளரக்கூடிய மரமாகும்.குறிப்பாக வேம்பின் சாராசரி வளர்ச்சி அளவுக்கு சந்தனம் இருக்கும்.

82.எங்கள் வீடுகளில் வளர்க்கும் சந்தன மரத்தினை அரசுக்கு வரி கட்டிவிட்டு வெட்டிக்கொள்ளலாமா?

வரி கட்டி விட்டு நாம் பயன்படுத்திக் கொள்ள நமக்கு உரிமை உண்டு.

83.சந்தன கன்று நடவு செய்யும் பருவகாலம் உண்டா?

சந்தன கன்று நடவுக்கு எல்லா பருவகாலமும் உகந்ததே.

மானாவாரியான நிலங்களில் அனைத்து காலங்களிலும்

தோட்டத்தில் அதிகம் மழை பெய்யும் காலத்தை தவிர்த்தும் நடவு செய்ய வேண்டும்.

84.மழைநீர் தேங்கி இருக்கும் நிலத்தில் சந்தனம் பயிர் நடலாமா?
வடிகால் வசதியுள்ள நிலத்தில் நடவு செய்யலாம.

குறைந்த பட்சம் 2 / 3 வாரங்களுக்கும் அதிகபட்சம் 3 / 4 வாரம் வரை நீர் தேங்கி நிற்கும் காலக்கட்டத்தில் நடவு செய்வதை தவிர்த்து விட வேண்டும்.

85.வேப்பம் (வேம்பு) மரமும் சந்தன மரமும் ஒரே குடும்ப வகையைச் சார்ந்த்து?
வேம்பும் சந்தனமும் ஒரே குடும்ப வகையைச் சார்ந்தது.வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கு சந்தனமும் வளரும்.

86.சந்தன மரத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய முடியுமா?

5 / 7 ஆண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களுக்கு காப்பீடு செய்யும் வசதியுள்ளது.

87.சந்தனத்தை எவ்வளவு ஆழம் குழி எடுட்து நடவு செய்ய வேண்டும்?
மண் தன்மை ஆழமாக உள்ள நிலத்தில் 1x1x1 அடி நீளம் அகலம் ஆழம் குழி எடுத்தும்,

மண் தன்மை ஆழத்தில் குறைவாக இருந்தால 2x2x2 நீளம் அகலம் ஆழம் குழி எடுத்து நடவு செய்யலாம்.

88.குழி மூடுவதும் சந்தனம் நடவு செய்வதும் ஒன்றாக செய்யலாமா?
குழி எடுத்து இரண்டு நாள் கழித்து பூமியின் மண், எரு,வேப்பம் புண்ணாக்கு கலந்து மூடி தண்ணீர் விட்டு பிறகுத் நடவு செய்ய வேண்டும்.

89.நடவு செய்ய ஏற்ற நேரம் எது?

மாலை நேரத்தில் நடவு செய்வதே மிக சிறந்த வழியாகும்.வெயில் இல்லை என்றால் காலையில் நடவு செய்யலாம்.

90.நாற்று இடம் மாற்றம் செய்து எத்தனை நாட்கள் கழித்து நடவு செய்ய வேண்டும்?

குறைந்தது 10 நாட்கள் அல்லது இரண்டு வாரம் கழித்து மாற்றப்பட்ட ஏரியாவில் தண்ணீர் விட்டு அந்த சீதோஷண நிலைக்கு மாற்றம் செய்து நடவு செய்ய வேண்டும்.

91.பாதுகாப்பிற்காக தாங்கள் காட்டும் உச்ச கட்ட வழிமுறை?

சந்தன மரம் வெட்ட வெட்ட துளிர்க்கும் தன்மை கொண்ட மரம். அதனால் 4 / 5 ஆண்டுகள் கழித்து வருடத்திற்கு ஒரு முறை தரையோடு வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்தால் பூமிக்கு அடியில் வேர்கட்டை நன்கு குறைந்த காலத்திலேயே முதிர்வு தன்மை பெற்று மரம் விளைந்து விடும் பாதுகாப்பு பிரச்சனை என்பதே இந்த முறையில் மரம் வளர்த்தால் இல்லவே இல்லை.

92.ஆர்டர் கொடுத்தால் நீங்களே அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பீர்களா?

· ஆர்டரின் பேரில் நிறுவனமே ஆட்களை வைத்து குழி எடுத்து நடவும் செய்து கொடுக்கும்.

· மேலும் தோட்டத்தை சுற்றி சூரிய மின்சார வேலி அமைத்தும்

· சொட்டு நீர் பாசன வசதியையும் அமைத்து கொடுக்கும்.

சந்தன கன்றின் விலை நிலவரம் என்ன?

Image resized to 81% of its original size [617 x 230]
Image





Image by FlamingText.com

Wednesday, January 14, 2015

Broccoli ப்ராக்கோலியின் சூப்பரான நன்மைகள்

ப்ராக்கோலியில் நினைத்து பார்க்க முடியாத அளவில் சத்துக்கள் நிறைந்துள்ளன.
ப்ராக்கோலி முட்டைக்கோஸ் வகையை சேர்ந்த காய்கறியாகும். உடல் எடையை குறைப்பதில் இதில் உள்ள சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
சரும நோய்களை குணப்படுத்துவது, மன நிலையை சரிசெய்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது என பல வழிகளில் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது.
 

செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு ப்ராக்கோலியில் நோய் எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும்.

மற்ற காய்கறிகளை ஒப்பிடும் போது ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கிறது.

ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள அதிப்படியான கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

ப்ராக்கோலியில் நோய் எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ப்ராக்கோலியில் உள்ள மினரல்கள், எதிர்ப் பொருள்கள் ஆகியவை புற்றுநோயை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாகும்.

ப்ராக்கோலியில் காணப்படும் குளூக்கோராஃபானின், பாதிக்கப்பட்ட சருமங்களை குணப்படுத்துகிறது. எனவே ப்ராக்கோலியை சாப்பிடுவதால் சரும நோய்கள் விலகி, தோல் பளபளப்பாகும்.

பொட்டாசியமும், மக்னீசியமும் ப்ராக்கோலியில் நிறைந்து காணப்படுகின்றன. மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கவும் ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்து உதவுகிறது.

ப்ராக்கோலியில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை மனநலத்தை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, புத்திசாலித்தனமாக விளங்கவும் இவை உதவுகின்றன.

Image by FlamingText.com

உடல் எடையை குறைக்க

பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.
குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.
பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.

பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.

பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

Image by FlamingText.com

Tuesday, October 15, 2013

சித்த மருத்துவம்-சருமத்தைக் காக்க


சித்த மருத்துவம் - சருமத்தைக் காக்க சில சித்த மருந்துகள்!

நம்முடைய சருமத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். சாதாரண சருமம், எண்ணைப் பசை சருமம், வறண்ட சருமம். இதில் சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் மற்ற இரண்டு சருமம் உள்ளவர்கள் சருமத்தை அதிக பாதுகாப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வெயில் காலத்தில் உடலில் உள்ள தண்ணீர் வியர்வை வழியாக வெளியேறுவதால் சருமம் வறண்டு போகும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மேலும் வறண்டு போகும். அதனால் முகத்தில் பளபளப்பு மறைந்து, சருமத்தில் சுருக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளன.

* இவர்கள் ஆரஞ்சுப் பழ தோலை காய வைத்து நன்கு பொடித்துக் கொள்ளவும். அதனுடன் பால் ஏடு சேர்த்து முகம் முழுவதும் தடவி இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும்.

* வேப்பிலை, புதினா மற்றும் துளசி இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடித்துக் கொள்ளவும். இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து பன்னீருடன் சேர்த் குழைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

* முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருக்க முட்டையில் மஞ்சள் கருவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். அது நன்கு காய்ந்த பிறகு சருமத்தை பிடித்து இழுக்க ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் சுருக்கம் மறைந்து போகும்.

* எண்ணைச் சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் அதிக எண்ணைப் பசை இருக்கும். இதனால் வெயில் காலத்தில் முகத்தில் பரு மற்றும் கரும் புள்ளிகள் ஏற்படும். வேப்பிலையைக் கொழுந்தாக பறித்து அம்மியில் அரைத்துக் கொள்ளவும். அதனுடன் முல்தானி மெட்டி பவுடரை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் எண்ணைப் பசை குறைந்து, பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

* சிறிது பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து கழுவலாம்.

சாதாரண சருமம் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்காது. அதற்காக கவனக் குறைவாக இருக்காதீர்கள்.

* முல்தானி மெட்டியை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து பச்சைத் தண்ணீரில் கழுவ வேண்டும்.

* எலுமிச்சைச் சாறு, கடலை மாவு, முல்தானி மெட்டி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து திக் பேஸ்டாக குழைத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தடவி பதினந்து நிமிடம் கழித்து பச்சைத் தண்ணீரில் கழுவி வந்தால் சருமம் மிருவாக இருக்கும்.

* வெயிலில் சென்று வருவதால் சருமத்தில் உள்ள புத்துணர்ச்சி குறையும். அந்த சமயத்தில் ரோஜா இதழ்களை பாலில் சிறிது நேரம் ஊற வைத்து, அதனை முகத்தில் தடவி கழுவி வந்தால், புதுப்பொலிவு ஏற்படும்.

* வாரம் ஒரு முறை முல்தானி மெட்டியை பன்னீரிலோ அல்லது தண்ணீரிலோ குழைத்து உடல் முழுவதும் தடவி பத்து நிமிடம் கழித்து குளித்து வந்தால் சரும பிரச்னை இருக்காது.

Image by FlamingText.com

வீட்டு மருத்துவம்

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.


Image by FlamingText.com

Monday, September 3, 2012

முகத்திற்கு கேரட்

முகத்திற்கு கேரட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பாருங்கள்.

  • உடல் மற்றும் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உடலில் சரியான செரிமான சக்தி இருக்க வேண்டும். அதற்கு தினமும் உணவு உண்டப்பின் ஒரு கேரட்டை சாப்பிட வேண்டும். இதனால் வாயில் உமிழ்நீர் சுரப்பு அதிகரித்து, உடலில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடுவதோடு, உடலில் செரிமான சக்தியும் அதிகரிக்கும்.
  • இரண்டு கேரட்டை எடுத்து அதனை வேக வைத்து, மசித்து, முகத்திற்கு தடவ வேண்டும். பின்னர் அதனை காய வைத்து, முகத்தில் இருந்து உரித்து எடுக்க வேண்டும். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்திற்கு ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்தால், முகம் நன்கு பொன்னிறமாக மின்னும்.
  • கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைஸாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை முகத்திற்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சரும நோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாக வைக்கும்.
  • தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸை பருகினால், சருமத்தில் எந்த நோயும் ஏற்படாமல் இருக்கும். அதுமட்டுமல்லாமல், முகச்சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கும்.
    ஆகவே கேரட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் எந்த ஒரு கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களையும் வாங்கி பயன்படுத்தத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.

Image by FlamingText.com

Monday, July 30, 2012

கருமையான முடி

கூந்தல் கருமை நிறத்தை இழப்பதற்கு, கூந்தலுக்குத் தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காததே ஆகும். மேலும் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளர்வதற்கு முறையான கூந்தல் பராமரிப்பும் இல்லாததாகும். அழகாக இருக்க, எவ்வாறு முகத்திற்கு அத்தனை மேக்கப் செய்கிறோம். அந்த அழகு முகத்தில் மட்டும் காணப்படுவதில்லை, கூந்தலிலும் தான் இருக்கிறது. அத்தகைய கூந்தல் நன்கு கருமையாக வளர்வதற்கு எங்கும் செல்ல வேண்டாம், அதற்கு மருந்தான எண்ணெய் வீட்டிலேயே இருக்கிறது.

* ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், 10 செம்பருத்தி பூக்களை போட்டு, அந்த எண்ணெயை வெயிலில் வைத்து, பூவானது எண்ணெயில் முழுவதும் மூழ்கும் வரை வைக்கவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சூடேற்றி, பின் குளிர்ந்ததும், ஒரு நாள் விட்டு அதனை கூந்தலுக்கு தடவி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து கூந்தலுக்கு தடவி வந்தால், கூந்தல் நன்கு கருமையாக வளர்வதோடு, அடர்த்தியாகவும் வளரும்.

* ஒரு பௌலில் தண்ணீரை விட்டு லேசாக சூடேற்றி, அதில் 100 மல்லிகைப் பூக்களை போட்டு, இரண்டு நாட்கள் மூடி ஊற வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து, அந்த தண்ணீரை பார்த்தால், தண்ணீரின் மேல் ஒருவித எண்ணெய் போன்ற பொருள் மிதக்கும். பின்னர் அந்த பூக்களை வெளியே போட்டு, அந்த எண்ணெயை தினமும் படுக்கும் முன் கூந்தலுக்கு தடவி, மறுநாள் கூந்தலை அலசி வரவும். இது ஒரு சிறந்த ஹேர் அரோமா தெரபி போல் இருக்கும். இதனால் கூந்தலானது பட்டுப்போல் மின்னுவதோடு, அதிலிருந்து வரும் வாசனை தலைவலியை சரிசெய்யும்.

* இரவில் படுக்கும் முன், பத்து நெல்லிக்காயை 1 லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைக்கவும். பின்பு அதனை மறுநாள் காலையில் கொதிக்க வைத்து, சூடானது ஆறியதும், அந்த எண்ணெயை வாரத்திற்கு மூன்று முறை தடவ வேண்டும். நெல்லி ஒரு சிறந்த சுத்தப்படுத்தி, அதிலும் இது கூந்தலுக்கு நல்ல நிறத்தை தரும். மேலும் இது கூந்தலுக்கு ஒரு நல்ல தரத்தையும் தரும்.

* செம்பருத்திப் பூ, மருதாணி இலைகள், கறிவேப்பிலை இலைகள், கசகசா இலைகள் நீரில் ஊற வைத்தது, வேப்பிலை, வெந்தயம் போன்றவற்றை நன்கு காய வைத்து, அதனை அரைத்து, உருண்டைகள் போல் செய்து, நல்லெண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தேய்த்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாகவும், கருமையாகவும் வளரும்.
மேலே சொன்ன அனைத்து எண்ணெய்களையும் இரவில் படுக்கும் முன்பு பயன்படுத்த வேண்டும்.



Image by FlamingText.com

Wednesday, July 25, 2012

அழகோ அழகு


மனிதனின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்துவது அவனின் முகம்தான்.  உடலிலும், உள்ளத்திலும் குறை  ஏதும் உண்டானால் அதன் வெளிப்பாடும் முகத்தில் தெரியவரும்.  இன்றைய நாகரீக உலகில் முகத்திற்கு அழகு சேர்க்க சந்தையில் விற்கப்படும் பொருட்கள் ஏராளம். 

இந்த வகையான அழகு பொருட்களால் முகம் பொலிவுறுகிறதா, உண்மையான அழகு கிடைக்கிறதா என்றால் அது என்னவோ பூஞ்ஜியத்தில்தான் முடியும்.  இதனால் மேலும் பல சரும நோய்களின் பாதிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வேதிப் பொருட்கள் கலப்பின்றி முகத்தையும், உடலையும் ஆரோக்கியம் பெறச் செய்யலாம்.

முகத்தில் வறட்சியோ, எண்ணெய் வடிதல்,  பரு தோன்றுதல், முகக்கருப்பு, கருவளையம், கரும்புள்ளி என எந்தவகையான பாதிப்பு தோன்றினாலும் இதற்கு வேண்டிய மருந்துகளை பயன்படுத்தும் முன் மலச்சிக்கல் இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  சருமத்திற்கு ஒவ்வாமை தரக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.  ஓய்வு காலங்களில் இவற்றை உபயோகிக்க வேண்டும்.  இந்த வழிமுறைகளை பின்பற்றினால் கீழ்காணும் மூலிகைப் பொருட்களால் முகம் பொலிவு பெறும்.

வறண்ட சருமத்திற்கு
வறண்ட சருமம் கொண்டவர்கள் கடல் உப்பை நீரில் கரைத்து முகத்தில் தேய்த்து இலேசாக மசாஜ் செய்து, பருத்தியினால் ஆன துணி கொண்டு முகத்தைத் துடைத்து, பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் வறண்ட சருமம் பொலிவு பெறும்.  15 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.

முகம் பொலிவு பெற
தேன்        - 1 ஸ்பூன்
ஆரஞ்சு பழச்சாறு    - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர்    - 2 ஸ்பூன்
இவற்றைக் கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் தடவி 10 நிமிடங்கள் ஊறவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகம் பட்டுபோல் ஜொலிக்கும்.

எண்ணெய் பிசுகு உள்ள முகத்திற்கு
இன்றைய இளம் வயதினர் அனைவருக்கும் மன உளைச்சலைத் தருவது எண்ணெய் தோய்ந்த முகமும், முகப்பருவும் தான்.
எவ்வளவுதான் முகப்பவுடர் பூசினாலும் சிறிது நேரத்திலே முகம் எண்ணெய் வடிவது போல் ஆகிவிடும்.

இதற்கு நிரந்தரத் தீர்வு
தேன்     - 1 ஸ்பூன்
முட்டை வெள்ளை கரு  - இரண்டையும் ஒன்றாகக் கலந்து முகம் முழுவதும் பூசி சுமார் 20 நிமிடம் காயவைத்து பின் நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் எண்ணெய் தோய்ந்த முகம் மாறி, முகம் பளிச்சிடும்.
எலுமிச்சம் பழச்சாறில் பப்பாளிப் பழத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து முகம் கழுவி வந்தால் முகம் சுருக்கமின்றி பொலிவுபெறும்.

மாதுளம் பழத்தோலை காயவைத்து பொடி செய்து அதனுடன் கடுகு எண்ணெய் கலந்து குழைத்து மேனி எங்கும்பூசி  குளித்து வந்தால்  தோல் சுருக்கங்கள் மாறும்.  மார்பகங்களில் பூசி வந்தால் மார்பகச் சுருக்கங்கள் நீங்கும்.

அழகான பாதங்களுக்கு

பெண்கள் அழகான முகத்தை விரும்புவது போல் அழகான பாதங்களையும் விரும்புவர்.
எலுமிச்சை சாறு     - 20 மிலி
ஆலிவ் எண்ணெய்    - 2 ஸ்பூன்
பால்            - 50 மிலி
ஏலக்காய்        - 1 கிராம்
பாதங்களில் பூசி வந்தால் பாதங்கள் மென்மையடைந்து, அழகு பெறும்.

அழகான உதடுகளுக்

பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்.
வெண்ணெய்யுடன் ஆரஞ்சு சாறு கலந்து உதட்டில் பூசி வந்தால்  வெடிப்புகள் மாறி உதடு மென்மையாகும்.



Image by FlamingText.com

Friday, July 20, 2012

Only for 18+ வயது வந்தவர்களுக்கு மட்டும்

உற்சாகப் பெருங்காயம்
சாம்பாரோ, ரசமோ பெருங்காயம் இன்றி சமையல் இல்லை. வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம் என்கின்றனர் நிபுணர்கள். சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள் உங்களின் சிக்கலை தீர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள்.  

Monday, June 4, 2012

நெல்லிக்காய் மருத்துவம்

இளமை குன்றாதிருக்க தேனில் நெல்லிக்கனியை ஊற வைத்துக் காலை, மாலை தினமும் உண்டுவந்தால் பலன் கிடைக்கும். 

காய்ந்த நெல்லிக்காயைப் பொடியாக்கித் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டித் தேய்த்து வந்தால் வெள்ளை முடி கூட கருமையாகிவிடும். முடி உதிர்வதும் இருக்காது.

நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும்
நீங்கும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.


    Image by FlamingText.com

    உருளைக் கிழங்கு பவுடர்


    தோல் சீவிய உருளைக் கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி காய்ந்த உடன் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து தினமும் முகத்தில் பூசி வர முகத்தில் உள்ள கருமை, திட்டுக்கள், புள்ளிகள் மறையும் முகம் பளிங்குபோல மாற்றிவிடும்.

    Image by FlamingText.com

    Thursday, May 24, 2012

    முகத்திற்கு அழகு - Facial

    ஆண்களுக்கான சில டிப்ஸ்:

    தக்காளி சாறுடன் தயிரை கலந்து முகத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவாகும்.
    _______________________________________________________________________________
    முகத்தில் சுருக்கம் மற்றும் புள்ளிகள் இருந்தால், புளித்த தயிரில் கடலை மாவு கலந்து பேஷியல் பண்ணவும்.
    _______________________________________________________________________________
    பச்சை உருளைக் கிழங்கு சாறு எடுத்து, முகத்தில் பூசி வந்தால் முகத்தில் ஜொலி ஜொலிப்பு கூடும்.
    _______________________________________________________________________________
    பப்பாளிப்  பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி  30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.
    _______________________________________________________________________________
    இஞ்சி சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டுவர முகப்பொலிவு பெறும்.
    _______________________________________________________________________________
    எலுமிச்சை சாறு பிழிந்த ஆவியை முகத்தில் பிடித்துவர முகம் பளபளப்பாக மாறும்.
    _______________________________________________________________________________
    முருங்கை வேர், துளசி வேர், அரைத்து பாலில் கலந்து பூசி குளித்துவர முகம் சிவப்பு நிறமாக மாறும்.
    _______________________________________________________________________________
    வாழைப் பழத்தோலின் உட்பகுதியால் முகத்தை நன்கு தேய்த்து பின்  முகம் கழுவினால் முகம் மென்மையாக மாறும்.
    _______________________________________________________________________________
    வாழைப்பழத்தை நன்கு குழைத்து அதில் முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
    _______________________________________________________________________________
    கடலை மாவு, பாலாடை,எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் 15 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
    _______________________________________________________________________________
    வயதால் முகத்திலும் உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக் கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும்.
    _______________________________________________________________________________
    சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல்சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.
    _______________________________________________________________________________
    கோதுமை மாவில் தயிர் சேர்த்து க்ளென்ஸராக பயன்படுத்தலாம்.
    _______________________________________________________________________________
    பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.
    _______________________________________________________________________________
    * உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.
    _______________________________________________________________________________



    Image by FlamingText.com

    Wednesday, May 23, 2012

    வெந்தயம் சாப்பிடுங்க - Weight Loss

    எடை குறையணுமா? வெந்தயம் சாப்பிடுங்க
    கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

    வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

    Wednesday, May 16, 2012

    முருங்கைகீரை சூப் - drumstick

    முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

    முருங்கைகீரை - 2 கப்
    வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
    கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
    உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

    முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

    Weight Loss Tips - உடல் பருமன் குறைய

     சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
    ------------------------------------------------------------------------------------------------------------
    பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
    ------------------------------------------------------------------------------------------------------------
    சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.
    ------------------------------------------------------------------------------------------------------------
    இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.
    ------------------------------------------------------------------------------------------------------------
    மஞ்சள்
    இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
    ------------------------------------------------------------------------------------------------------------
    கொத்தமல்லி
    உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.
    ------------------------------------------------------------------------------------------------------------
    கறிவேப்பிலை
    உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
    ------------------------------------------------------------------------------------------------------------
    வெள்ளைப்பூண்டு
    கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    ------------------------------------------------------------------------------------------------------------
    கடுகு எண்ணெய்
    சமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.
    ------------------------------------------------------------------------------------------------------------
    முட்டைக்கோஸ்
    உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.
    ------------------------------------------------------------------------------------------------------------
    பாசிப்பருப்பு
    பாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.
    ------------------------------------------------------------------------------------------------------------
    தேன்
    உடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.
    ------------------------------------------------------------------------------------------------------------
    மோர்
    உடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.
    ------------------------------------------------------------------------------------------------------------
    பட்டை, கிராம்பு
    கறி சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை கொழுப்புச்சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை உடம்பில் தங்கவிடாமல் செய்து, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துகிறது.

    Image by FlamingText.com

    Face Beauty Tips

    அழகு முகம் கிடைக்கணுமா? இரண்டு ஸ்பூன் கொண்டைக் கடலை,
    2 ஸ்பூன் பச்சரிசியை இரவில் ஊற வைத்து காலையில் அதை
    அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.
    நல்ல கலர் கிடைக்கும்.
    ------------------------------------------------------------------------------
    அகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீரை ஊற்றி அதில் ஒரு
    டீஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் நீராவி பிடித்து
    வாருங்களேன். முகத்திலுள்ள அழுக்குகள் மற்றும் பருக்கள் மறைந்து
    முகத்தின் தேஜஸ் கூடி விடும்.
    ----------------------------------------------------------------------------------------------------------------
    புளித்த தயிரில் கடலை மாவு கலந்து தினமும் தேய்த்து 10 நிமிடங்கள்
    ஊறிக் குளியுங்கள். உங்கள் தோல் ஆரோக்கியமாக இருக்கும்.

    Image by FlamingText.com

    Monday, May 7, 2012

    சளியை கரைக்க - கொள்ளு

    கொள்ளு சூப் தயாரிக்கும் முறை

    கொள்ளு - 2 தேக்கரண்டி
    மிளகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    பெருங்காயம் - அரை தேக்கரண்டி
    பூண்டு - அரை தேக்கரண்டி
    தக்காளி - 1
    கொத்தமல்லித்தழை - சிறிது
    கருவேப்பிலை - சிறிது

    இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து

    Friday, May 4, 2012

    நாம் வெற்றிலை போடுவது ஏன்?

    தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.  

    அழகு Tips

    உதடு கருப்பாக உள்ளவர்கள் பீட்ரூட் சாறு எடுத்து தடவி வந்தால் நாளடைவில் சரியாகிவிடும்.

    கால் பாதங்களுக்கு பாதம் எண்ணெயை தடவி வந்தால் நாளடைவில் பாதம் வழவழப்பாக இருக்கும்.

    கை, கால் முட்டிகள் கருப்பாக இருந்தால் அதற்கு ஆலிவ் ஆயில், பன்னீர் கலந்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

    தலைமுடிக்கு முட்டையில் வெள்ளைகரு, மருதாணி கலந்து பூசிக் கொண்டால் தலைமுடி பளபளப்பாகவும், உதிராமலும், நீண்டும் வளரும்.

    தலைமுடியில் இளம்நரையிருந்தால் அதற்கு மருதாணி, செம்பருத்தி இலை இரண்டையும் அரைத்து பூசி ஊறிய பின் சீயக்காய் போட்டு கழுவினால் சரியாகிவிடும்.

    குழந்தை பெற்ற பெண்கள், மூன்று மாதங்கள் கழித்து, கொள்ளு சாம்பார், கொள்ளு ரசம் அல்லது கொள்ளு ஜுஸ் சாப்பிட்டு வந்தால் கருப்பையில் தங்கியிருக்கும் அழுக்கு நீங்கும். பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் குண்டாகும் வாய்ப்பு குறைந்து ஸ்லிம்மாக இருக்கலாம்.

    Image by FlamingText.com

    Search This Blog