Pages

Subscribe:
Showing posts with label Health Tips. Show all posts
Showing posts with label Health Tips. Show all posts

Friday, August 3, 2018

முகத்திற்கு கொய்யா இலையின் பயன்கள்

                                                                                       Please Subscribe : V2 CHANNEL

முகத்தில் சுருக்கம் வருவது இன்று பெரும்பாலோர்க்கு உள்ள பிரச்சினையே. உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் குறைவால் இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பாக இது இளமையை விரைவிலேயே இழக்க செய்துவிடும். இதற்கு சிறந்த தீர்வு கொய்யா இலையே. இதில் அதிகம் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளதால் முக சுருக்கத்தை போக்கி "என்றும் பதினாறு" போல தோற்றத்தை தரும். இந்த இலைகளை காயவைத்து பொடி செய்து நீருடன் கலந்து பேஸ்ட் போல முகத்தில் தடவினால் சுருக்கங்கள் மறையும்.

பலருக்கு இறந்த செல்கள் முகத்திலேயே தங்கி விடுகின்றன. இதனால் அவர்களுக்கு கரும்புள்ளிகள் வருகிறது. இது முக அழகையே முற்றிலுமாக கெடுத்து விடும். இதனை அகற்ற கொய்யா இலையை அரைத்து, அதனுடன் 1 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசவும். பின் 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவி விடவும். இந்த அழகு குறிப்பு உங்கள் காதலியின் முகத்தை கண்டிப்பாக தேவதை போல மாற்றும்.

உங்களின் காதலியின் சருமம் என்றுமே புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமென்றால் நம்ம கொய்யா இலை அதற்கு உதவும். கொய்யா இலையை அரைத்து கற்றாழை சாற்றுடன் சேர்த்து முகத்தில் பூசினால், முகம் எப்போதும் புத்துணர்வுடன் இருக்கும். அத்துடன் முகத்தில் புதிய செல்களை உற்பத்தி செய்து இளமையான முகத்தை தரும்.

சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்கள், முகம் மற்றும் தோல்களையும் பாதிக்க செய்யும். சுற்றுசூழல் சீர்கேட்டால் இதன் பாதிப்பு இன்றைய காலகட்டத்தில் அதிகம் உள்ளது. இதனை சரி செய்ய கொய்யா இலையை வெயிலில் உலர வைத்து, பொடி செய்து பின் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து முகத்தில் ஃபேஸ் பேக் போல போடவும். 20 நிமிடம் கழித்து இதனை காட்டன் துணியால் துடைத்து விடவும். இது நல்ல பலனை தரும்.

உங்கள் காதலியின் முகம் மிகவும் வெண்மையாக இருக்க இந்த அழகு குறிப்பை பயன்படுத்துங்கள். கொய்யா இலையை அரைத்து அதனுடன் சிறுது ரோஸ் நீரை ஊற்றி கலக்கவும். பின் சிறிதளவு மஞ்சளையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் மினுமினுப்பான தேவதை போன்ற சருமம் பெறலாம்.

Image by FlamingText.com

Monday, September 15, 2014

எலுமிச்சை சாறு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ளஉணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள்,சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. Stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.


Image by FlamingText.com

Monday, June 4, 2012

நெல்லிக்காய் மருத்துவம்

இளமை குன்றாதிருக்க தேனில் நெல்லிக்கனியை ஊற வைத்துக் காலை, மாலை தினமும் உண்டுவந்தால் பலன் கிடைக்கும். 

காய்ந்த நெல்லிக்காயைப் பொடியாக்கித் தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டித் தேய்த்து வந்தால் வெள்ளை முடி கூட கருமையாகிவிடும். முடி உதிர்வதும் இருக்காது.

நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று சாப்பிட்டால், மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும்.

நெல்லிக்காய், நெல்லிப்பழம் இவற்றை தினமும் சுவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுடன் அழகு பெறும்.

நெல்லிக்காயை உண்டால் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி நீங்கும்.

நெல்லி மரத்தின் பாகங்களை காயகல்ப முறைப்படி சாப்பிட்டு வந்தால், பெருவயிறு, இரத்தசோகை, மூலம், பெண்களுக்கு உண்டாகும் அதிக ரத்தப்போக்கு ஆகியவை நீங்கும்.

நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தை நன்கு அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் சீதத்துடன் கூடிய கழிச்சல் தீரும்.

நெல்லிவற்றலை தண்ணீ­ர் சேர்த்து நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லி வற்றலை ஒன்றிரண்டால் இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி, அதில் சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்த்து சாப்பிட்டால் உடல்சூடு, வாந்தி ஆகியவை நீங்கும்.

நெல்லிவற்றலுடன் வில்வஇலை, சீரகம், சுக்கு, பொரி ஆகியவற்றை ஒன்றாக இடித்து வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் பித்த வாந்தி நிற்கும்.

நெல்லிக்காயை துவையலாக சாப்பிட்டால் வாந்தி மற்றும் சுவையின்மை நீங்கி, சுவை உண்டாகச் செய்யும்.

நெல்லி விதையுடன் சுத்தமான ஓமம், பசலைக்கீரை விதையை சமமாக எடுத்துக் கொண்டு பொடியாக்கி, தேன் கலந்து.... சுண்டைக்காய் அளவு உருட்டி காலை, மாலை தண்ணீ­ரில் உட்கொள்ள, பெருநோய் எனப்படுகின்ற குஷ்டநோய் வகைகள் யாவும்
நீங்கும்.

நெல்லிக்காய் தைலத்தை தலைக்கு தடவி வர(அல்லது) தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடி உதிராமல் நன்கு வளரும். இளநரை சிறிது சிறிதாக மறையும்.


    Image by FlamingText.com

    Wednesday, May 16, 2012

    முருங்கைகீரை சூப் - drumstick

    முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

    முருங்கைகீரை - 2 கப்
    வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
    கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
    உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு

    முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

    Monday, May 7, 2012

    சளியை கரைக்க - கொள்ளு

    கொள்ளு சூப் தயாரிக்கும் முறை

    கொள்ளு - 2 தேக்கரண்டி
    மிளகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    பெருங்காயம் - அரை தேக்கரண்டி
    பூண்டு - அரை தேக்கரண்டி
    தக்காளி - 1
    கொத்தமல்லித்தழை - சிறிது
    கருவேப்பிலை - சிறிது

    இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து

    Thursday, March 29, 2012

    வாழைத் தண்டு, வாழைப் பூ (இருமல்,பாம்பு கடி)



    வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

    வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை ஒன்று இரண்டு அல்லது அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும்.

    கோழைக் கட்டையும் இளகச் செய்யும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குக் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.

    அகத்தி கீரை : பொன்னாங்கண்ணி கீரை

    அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.

    இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

    முருங்கையின் சிறப்புகள்


    * முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.

    * முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

    * முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுப்பெறும்.

    * முருங்கை மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்தநீர் சுரப்பினை அதிகரிக்கும்.

    நல்லெண்ணையும் அதன் மருத்துவ குணமும்!!

    *  நல்லெண்ணைய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது.

    எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

    *  நல்லெண்ணைய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

    எலுமிச்சம் சிறப்புகள்

    பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு.

    முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.

    Friday, January 20, 2012

    Cough, Teeth Pain and Fever


    வீ‌ட்டிலேயே இரு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்

    கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

    பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.


    சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.


    குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம். 


    காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
    வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

    Thanks to webdunia

    beetroot's Special

    பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள
     
    பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.


    Friday, December 30, 2011

    வீட்டு மருத்துவம்

    படித்ததில்  நின்றவை..

    தினமும் இரண்டு மிளகு சாப்பிட்டால் இதய நோய் வராது..

    நமது முன்னோர்கள் சாப்பிட்ட அனைத்து உணவிலும் ஒரு மருத்துவகுணம் உண்டு. ஆனால் இன்று சமைக்கபடும் உணவில் சுவை மட்டுமே உள்ளது இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது.

    இன்றைக்கும் ஆயுவேதத்தில் பெரும்பாலும் பயன்படுத்துவது உணவு பொருட்கள் தான்.
    சரி இப்போது கீரை வகைகளை பார்போம்.
    கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்..

    Wednesday, December 28, 2011

    Hair Maintains : Hair loss

    முடி உதிர்வதை குறைக்க
    தேவையானப் பொருள்கள்:

        வெங்காயம்.
        முட்டை.
    செய்முறை:
    நாட்டு வெங்காயத்தை அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து தலைக்கு தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி உதிர்வது குறையும்.

    Weight loss and gain

    உடல் சதையை குறைக்க
    தேவையானப் பொருட்கள்:
    சோம்பு
    செய்முறை:
    சிறிதளவு சோம்பை தண்ணீரில் ஊறவைத்து அதனை வடிக்கட்டி அடிக்கடி பருகினால் தேவையற்ற சதை குறையும்.

    Wednesday, October 12, 2011

    Indian food helps fight cancer

    புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒருநோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்பநிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சத்துநிறைந்த காய்கறிகளும் பழங்களுமே புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன.

    Wednesday, September 28, 2011

    Oats Badam helps to reduce cholesterol

    ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதால் பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர்.

    Types of Wine

    அறிமுகம்:
    ஒயின் அருந்துவது பண்டைய காலத்திலிருந்து வழக்கத்தில் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் ஒயின் குடிப்பது மக்களிடையே மிக சாதாரணமாக உள்ளது.  பெருநகரங்களில் வாழும் பெரும்பாலான பெண்களும் தற்போது ஒயின் அருந்துகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒயின் குடிப்பதால் தோலின் நிறம் கூடும், தோல் மென்மையாக மாறும், மற்றும் உடலுக்கு நல்லது என்று கூறி பல நபர்கள் ஒயின் அருந்துவதை நாம் பார்த்திருப்போம். பொதுவாக 

    Loss Weight without SideEffect

    உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில குறிப்புகள்:

    Wine Helps to Reduce Weight



    அதிக அளவில் மதுபானங்கள் குடிப்பவர்களின் எடை அதிகரிக்கும். ஏனெனில் அவற்றில் சர்க்கரை சத்து அதிக அளவில் இருப்பதால் அது போன்ற நிலை ஏற்படும். இது ஏற்கனவே நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருந்தது. தற்போது புதிதாக ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    Search This Blog