Pages

Subscribe:
Showing posts with label Free Time. Show all posts
Showing posts with label Free Time. Show all posts

Monday, September 15, 2014

ஜோக்ஸ் -3

அவள்: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்?

இவன்: 49

அவள்: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே?

இவன்: பழைய ஜோக்; கதவ திறந்து.

அவள்: அப்ப மானை?

இவன்: யானைய எடுத்துட்டு வெப்பேன்.

அவள்: காட்டுல சிங்க ராஜா விருந்து வெச்சார். ஒரு
மிருகம் மட்டும் போகல, எது?

இவன்: மான். அது ஃப்ரிட்ஜுக்குள்ளதான் இருக்கு.
அவள்: பாட்டி முதலைகள் இருக்கற ஆற்றை எப்டி
ஈஸியா கடந்தாள்?

இவன்: முதலைகள்தான் சிங்க ராஜா விருந்துக்கு போய்டுச்சே.

அவள்: ஆனாலும் அவள் ஆற்றை கடக்கைய்ல செத்துப்போனாள்.ஏன்?

இவன்: ஏன், தெரியலையே…
அவள்: அந்த செங்கல் அவ தலையில விழுந்துடுத்து.


Image by FlamingText.com

ஜோக்ஸ் -2

மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!

கணவன் : ஏன்? என்னாச்சு..?

மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!

கணவன் : சரி...!

மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!

கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே!

மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)

(வாசலிலிருந்து வந்த மகன்...)
மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா!

அப்பா : ஏண்டா..?

மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!!

அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே.,அய்யய்யோ ...இப்ப நான் என்ன செய்வேன்..!எங்க போவேன்..!செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே.....இத கேட்க நாதியில்லையா....

Image by FlamingText.com

Thursday, March 20, 2014

உண்மைக்கதை

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்ச!

Image by FlamingText.com

கடலை டிப்ஸ்

ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..

பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...

ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..

பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??

ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்... உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,

பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..

ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...

பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??

ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.

பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..

ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..

Image by FlamingText.com

Wednesday, July 24, 2013

ஜோக்ஸ் - Jokes

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!
----------------------------------------------------------------------------------------------------------
பெரிய விஷயங்களை விட,
சிறிய விஷயங்கள் நம்மை அதிகம் காயபடுத்தும்.
*
*
*
உதரணமாக,
*
*
*
குதிரை மேல உக்காரலாம்,
குண்டூசி மேல உக்கார முடியுமா?

ஹி ..ஹி ...ஹி....
----------------------------------------------------------------------------------------------------------
 
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ... ப்ளீஸ்!
******************************
********

1.நாலு பேருக்கு நல்லது செஞ்சா தப்பில்லைன்றாங்களே... யார் அந்த நாலு பேர்?
2.செல்போன் யூஸ் பன்றது அதிகமாகிட்டதால அதோட விலைகள் குறைஞ்சதா சொல்றாங்க..அப்புறம் ஏன்யாஅரிசி பருப்பு விலைலாம் குறையலை?

3.எப்பொழுது கூலிங் பீர் கேட்டாலும் சாதா பீர் தருகிறாயே,சாதா பீர் கேட்டால் என்ன தருவாய்?

4.நாராயனசாமியோட 15நாளும், நத்தம் விஸ்வநாதனோட ஜூன் மாசமும் என்னிக்கு வரும்..?

5.நன்றிக்கு நாயை உதாரணம் காட்டும் மனிதனை சுயநலத்துக்கு உதாரணம் சொல்லிக் கொண்டிருக்குமோ நாய்கள்?

6.கடைக்காரனிடம் : "ஆறு ஹால்ஸ் முட்டாய் குடுத்தா, ஒரு கோழி முட்ட குடுப்பியா? அப்றம் என்னா டாஷ்க்கு எனக்கு சில்லறையா தர மாட்டேங்கர..?

7.காந்தி ஜெயந்தி, கிருஷ்ணர்ஜெயந்தி, ஹனுமன் ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி ... இந்த ஜெயந்தி உண்மையா யாரோட ஆளு ?

8.கடவுளை கும்பிட கோவிலுக்கு சென்றேன்.. வாசலில் பிச்சைக்காரன் என்னை கும்பிட்டான்.. நான் கடவுளா ?

9.சோத்துல மயிரு இருந்தா உறவு நெலைக்குமாம். சோறே மயிராட்டம் இருந்தா..?

யாரோ எங்கயோ எழுதியது .................நான் இல்ல.
----------------------------------------------------------------------------------------------------------
 
பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???
*********************************
திருமணமான புதியதில்
==================


1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
===================


1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=================

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
 
----------------------------------------------------------------------------------------------------------
மனைவி- சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது

கணவன் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டான்

மனைவி-பாக்கு போடாதிங்க

கணவன் பாக்கு போடுவதை நிறுத்தினான்

மனைவி-நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க, வேணாம் மெதுவாவே ஓட்டுங்க

கணவன் வண்டியை மெதுவா ஓட்டுவதை வழக்கமாகினான்

மனைவி- உங்க தலை முடி சீராக இல்லை, சீராக்குங்கள்

கணவன் தலை முடியை சீராக்கினான்

சில மாதங்களுக்கு பின்பு
.
.
.
.
.
.
.
.
மனைவி- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறிட்டிங்க

கணவன்………………………………………. ரொம்ப கஷ்டமப்பா :
 
----------------------------------------------------------------------------------------------------------
வக்கீல்:​வேணும்னுதா​னேஉன்ம​னைவி​யை கிணற்றி​​லே தள்ளி​னே?
குற்றவாளி:இல்ல....​வேணாம்னு
----------------------------------------------------------------------------------------------------------
பொண்டாட்டிக்கு பட்டுப்பொடவை வாங்கிக்கொடுத்தீங்களாமே?
காஞ்சி பட்டா ? ஆரணி பட்டா ?

அசிங்கப்பட்டு,அவமானப்பட்டு, கடன்பட்டு வாங்கினேன்
----------------------------------------------------------------------------------------------------------
"ஐ டோன்ட் நோ" ன்னா என்னடா அர்த்தம்!'

"எனக்கு தெரியாது!"

"அட! உனக்கு தெரியாதா?"
----------------------------------------------------------------------------------------------------------
 ஆறு முழுவதும்

போகுதாம் தண்ணி

பாத்ரூமுல

குளிக்குதாம் பன்னி.
----------------------------------------------------------------------------------------------------------
கள்ளக்காதலர்கள் நடுவில் சந்தேகம் வருவதை போன்ற காமெடி வேறெதுவும் இருக்க முடியாது :))
----------------------------------------------------------------------------------------------------------

உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?
அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.
----------------------------------------------------------------------------------------------------------
உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?
ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.
----------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: கட்டபொம்மனை எங்க தூக்குல போட்டாங்க??
பையன்: கழுத்துல சார்!
----------------------------------------------------------------------------------------------------------
ஜோ : நேத்து நான் டிரெய்ன்ல TTR-ஐ ஏமாத்திட்டேன் தெரியுமா?
நண்பர் : எப்படி ?
ஜோ : டிக்கெட் வாங்கினேன், ஆனா நான் பிரயாணமே செய்யலயே!
----------------------------------------------------------------------------------------------------------
வேலைக்காரிக்கும் ரோஸிக்கும் ஒரு நாள் சண்டை வந்துவிட்டது. வேலைக்காரியை வீட்டைவிட்டு அனுப்புவதென்று முடிவானது. வேலைக்காரிக்கு சரியான கோபம். போவதற்கு முன் நல்லா நாலுவார்த்தை ரோஸியைக் கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று முடிவு செய்தாள். ''வீட்டைப் பாத்துக்கிறதுலயும் சமைக்கிறதுலயும் நான் உன்னைவிட பெட்டர்னு உன் புருஷன் என்கிட்ட சொல்லியிருக்கான்.'' ரோஸி கண்டு கொள்ளவில்லை. ''செக்ஸிலயும் உன்னைவிட நான்தான் பெட்டர்னு தெரியுமா உனக்கு?'' ரோஸி அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள், ''இதையும் என் புருஷன்தான் சொல்லியிருப்பான்.'' வேலைக்காரி சொன்னாள், ''இல்லை, தோட்டக்காரன் சொன்னான்.''
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.

“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி

பக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.

“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.
----------------------------------------------------------------------------------------------------------
மனைவி:-_உங்களுக்கு_ராணின்னு_ஏற்கனவே_ஒரு_மனைவி இருக்கான்னு_கல்யாணத்துக்கு_முன்பே_ஏன்_என்கிட்டே_சொல்லலை..
கணவன்:-சொன்னேனே..._மறந்துட்டியா...
மனைவி:- எப்போ_சொன்னீங்க...நீங்க_சொல்லவே_இல்லை..
கணவன்:- உன்னை_ராணி_மாதிரி_வச்சி_காப்பாத்துவேன்னு_நான் சொல்லலை..
மனைவி:-????????
 
----------------------------------------------------------------------------------------------------------
'எங்க ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா...
ஆனா நாய் வளர்க்கலை...!''

''ஏன்...?''

''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?'' 
----------------------------------------------------------------------------------------------------------
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா....?
ஒரு ஆண் கடுமையா உழைச்சா...... பொண்டாட்டியைக் கண்டுக்க
மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.
பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா…. அவளையே சுத்தி சுத்தி வரான்.
வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..
அது போகட்டும்.. ஒரு பொண்ணைப்
பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா, அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.
கண்டுக்காம போனா அழகை ரசிக்கத்தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.
எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..
திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..
பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத்
தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.
சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான்
ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா
"என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல
ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம்
பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..
ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க
வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.
சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த
ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு..
எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?"
ன்னு பூசல்….. இந்த
கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம்
அப்படின்னு சொல்லுவாங்க…. இது தப்பு பெண்கள்
நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம்
தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க....

----------------------------------------------------------------------------------------------------------
நபர் - 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு ஒரு திருடன் வந்து திருடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான்.

நபர் - 2: ஐயய்யோ! அப்புறம்…?

நபர் - 1 : எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடச் சேர்ந்து பணத்தைத் தேடினேன்.

நபர் - 2 : என்னது!

நபர் - 1 : ஆனாலும், கடைசி வரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை எங்கே வெச்சிருக்கான்னு எங்களாலே கண்டுபிடிக்கவே முடியலை.

----------------------------------------------------------------------------------------------------------
ராஜீ(girl) : ஹலோ

ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ராஜீ : அடி வாங்கப் போற.

ரவி : எங்க.. அடி பாக்கலாம்..

ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??

ரவி : நீ தான் சொல்லனும்..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..

ராஜீ : என்ன சொல்றது??

ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி : ம்ம்.. அப்புறம்..

ராஜீ : வேறென்ன??

ரவி : நீ தான் சொல்லணும்.

ராஜீ : தூக்கம் வரலயா?

ரவி : ஏன் உனக்கு வருதா?

ராஜீ : இல்லப்பா..

ரவி : பின்ன?

ராஜீ : சும்மா தான் கேட்டேன்..

ரவி : ம்ம்.. அப்புறம்??

ராஜீ : வேறென்ன??

ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ராஜீ : எப்பவும் போல தான்..

ரவி : ம்ம்..

ராஜீ : அப்புறம்??

ரவி : சொல்லு..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்.

----------------------------------------------------------------------------------------------------------

Image by FlamingText.com

Monday, June 24, 2013

வாழ்வு , மரணம் புதிர்

ஒருவன் விசித்திரமான சட்டம் கொண்ட வெளி நாட்டில் மரண தண்டனையை எதிர்னோக்குகிறான். அவன் முன், இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டன.- அவற்றில் “வாழ்வு” , “மரணம்” என எழுதப்பட்டிருந்தன. அவன் எடுக்கும் பத்திரமே அவன் விதியை தீர்மானிக்கும். இந்த நேரத்தில் இரு தாள்களிளுமே “மரணம்” என மாற்றப்பட்டிருப்பதை அறிகிறான். இதனைப் பற்றி யாரிடமும் பேச அனுமதி இல்லை, எப்படி அவன் மரணத்திலிருந்து தவிர்ந்திருப்பான்?
.
.
.
.
.
.
.
.

தீர்வு-->
 அவன் ஒரு பத்திரத்தை  விழுங்க ஜெயிலர் தண்டனையை தீர்மானிக்க மீதமுள்ள காகிதத்தினை சரிபார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதில் நிச்சயமாக  “மரணம்” என எழுதப்பட்டிருப்பதால் அவன் எடுத்தது “வாழ்வு”  என முடிவெடுக்கப்பட்டு அவன் விடுதலையானான்.

Image by FlamingText.com

Friday, October 12, 2012

இடைவேளையில் தேனீர் கொஞ்சம்

வகை வகையாய்
உணவு தயாரித்துவிட்டுப்
பழைய சாதம் தின்று
படுத்துக் கொள்கிறாள்
வேலைக்காரி..!




திருமணம் !
தாயார் வீட்டு
தனிச்சிறையிலிருந்து
மாமியார் வீட்டு
மத்திய சிறைக்கு மாற்றபடுவது!


கண் பார்வை ரொம்பக்
குறிஞ்சிப் போச்சி டாக்டர்.!
யாரைப் பார்த்தாலும் முகம்
சரியாத் தெரியல.
  "அப்படின்னாக் கழுத்து
வரைக்கும்தான் சரியாத் தெரியுதா?"




Image by FlamingText.com

Thursday, September 13, 2012

பெண்கள் கணினி போலே


பெண்களை பலர் பல விதமாக வகைப்படுத்தினர். சாமுத்திரிகா இலட்சணம், அத்தினி, சங்கினி, பத்தினி, சித்தினி அது இது என்று சொல்வார்கள். அது  அந்தக் காலம் இது Computer காலம். கணனிப்படி பெண்களை இப்படித்தான் வகைப்படுத்தலாம், இதில் எந்தப் பெண்ணை உங்களுக்குப் பிடிக்கும்?

Hard Disk girls : நிரந்த உறவை விரும்பும் பெண்கள்

RAM girls: உறவைத் தொடர்பு முடிந்தவுடன் மறக்கும் பெண்கள்.

Screen Saver girls: சைட் அடிக்க மட்டும்

Software girls: விசயம் நிறைய இருக்கு ஆனால் புரிந்து கொள்ள முடியாது.

Monitor girls: உங்களைக் கண்காணித்த படியே இருக்கும் பெண்கள்.

Window girls: அடிக்கடி மாறுவதாகச் சொல்வார்கள். ஆனால் அதே பழைய பிரச்சனைதான்

Speaker girls: வளா வளா என்று எந்த நேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண்கள்

Application girls: ஒரு காரியத்திற்கு மட்டும் பயன்படும் பெண்கள்.

Virus girls: உங்கள் மனதைக் கிறங்கடித்து உங்களை நிர்மூலமாக்கும் பெண்கள்.

Anti Virus girls: எந்த நேரமும் பல்லி சொல்ற மாதிரி ஏதாவது சொல்லி மிரட்டும் பெண்கள்

Search Engine girls: உங்கள் பணப்பையைக் காலி செய்யும் பெண்கள்.

Website girls: ஊர் வம்பெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு சொல்லாமல் பிகு பண்ணும் பெண்கள்.

Browser girls: உங்களைப் பற்றி அறிய அதிகம் துருதுருவிக் கேள்விகள் கேட்கும் பெண்கள்.

Internet girls: தேடிப் பிடிப்பது சிரமமான பெண்கள்

Keyboard girls: தொட்டல் சிணுங்கிகள்

Microsoft girls: சிறிய மென்மையான பெண்கள். ஆனால் பெரிய பிரச்சனை

Apple girls: தாங்கள் தனித்துவமானவரகள் என்று பீத்திக் கொள்ளும் பெண்கள்.

Server girls: உங்களைத் தாய் போல் கவனிக்கும் பெண்கள்.

Multimedia girls: வாய், கண், கை போன்றவற்றால் ஒரேயடியாக உரையாடும் பெண்கள்
 



Image by FlamingText.com

Tuesday, July 10, 2012

பெண் மௌனமாக இருக்கிறாள் என்றால்

ஒரு பெண் மௌனமாக இருக்கிறாள் என்றால்...
அவள் எண்ண அலைகளில் பல ஆயிரம் விஷயங்கள் நிழலாடிக்கொண்டிருக்கின்றன என்று பொருள்...

நீ வம்பிழுக்கும்போது, அவள் வாதாடவில்லை எனில்...
அவள் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கின்றாள் என்று பொருள்...

ஒரு பெண் பல கேள்விக்குறியோடு உன்னை பார்க்கிறாள் என்றால்... நீ எதுவரை அவளுடன் நீடித்து இருப்பாய் என்று சிந்திக்கிறாள் என்று பொருள்..

நீ நலமா என்று கேட்கும்போது, ஒரு பெண் சில வினாடிகள் கழித்து "நான் நலமாய் இருக்கிறேன்" என்று பதிலளித்தாளானாள், அவள் நலமாக இல்லை என்று பொருள்...

ஒரு பெண், நீ பேசும்போது கண் இமைக்காமல் உற்றுப்பார்த்துக் கொண்டிருகிறாளானாள், நீ ஏன் அவளிடம் உண்மையை மறைக்க முயற்சிக்கிறாய் என்று வியக்கிறாள் என பொருள்...

ஒரு பெண் உன் தோளில் சாய விரும்புகிறாளானால், நீ காலம் முழுதும் அவளுடன் இணைந்து இருக்க வேண்டும் என விரும்புகிறாள் என்று பொருள்...

ஒரு பெண் உன்னை தினம் தினம் சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறாளானால், அவள் உன்னிடம் மிக நெருக்கமாக, அன்பாக இருக்க விரும்புகிறாள் என்று பொருள்...

ஒரு பெண் உன்னிடம் "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று கூறுகிறாளானால், அதன்  அர்த்தமறிந்தே  அந்த வார்த்தையை உச்சரித்திருக்கிறாள்  என்று பொருள்...

ஒரு பெண் "நான் உங்கள் பிரிவால் துயருறுகிறேன் " I MISS YOU" என்று கூறுகிறாளானால், அவள் அளவிற்கு வேறு எவரும் உங்கள் பிரிவால் வாடவில்லை என்று பொருள்...

வாழ்க்கை ஒரு முறை தான்... இந்த வாழ்க்கையை உங்களுக்கு பிடித்தமான சரியான உறவுடன் இணைத்துக்கொள்ளுங்கள்...
உங்கள் மனம் அறிந்து, அன்பை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு உறவை தேர்ந்தெடுங்கள்...

உண்மையான அன்புடன் உங்கள் உள்ள அழகை ரசிக்கும் ஒரு துணையை தேர்ந்தெடுங்கள்...
தன் தூக்கத்தை மறந்து உங்கள் தூக்கத்தை ரசிக்கும் ஒரு அன்பான துணையை தேர்ந்தெடுங்கள்...

நீங்கள் அன்போடு பார்க்கும்போது, தோள் சாய இடம் கொடுக்கும் ஒரு உறவை தேடுங்கள்...

உங்களை அடைய தவம் செய்திருக்க வேண்டும் என்று உணரும் ஒரு உறவை மணமுடியுங்கள்...

வாழ்க்கை நிச்சயம் இனிமையாக இருக்கும்... :-)



Image by FlamingText.com

Wednesday, May 30, 2012

பராசக்தி வசனம்

நித்தியானந்தா சாமியின் பராசக்தி வசனம்...

நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால், இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்..
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்..
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்..

Monday, December 5, 2011

What Is Love?

I Ask My Girlfriend


What Is Love ? ?
People Talk So Much About
Love But I Don't Really Know
What It Is . . . ? 

Saturday, November 5, 2011

Ringtones



TamilMusix.com – Aadhavan – Ring Tones
TamilMusix.com – Adukalam – Ring Tones
TamilMusix.com – Avan Ivan – Ring Tones
TamilMusix.com – Baana Kadhadi – Ring Tones
TamilMusix.com – Boss Enkira Baskaran – Ring Tones
TamilMusix.com – Eeram – Ring Tones
TamilMusix.com – Endhiran – Ring Tones
TamilMusix.com – Engeyum Kadhal – Ring Tones
TamilMusix.com – Goa – Ring Tones
TamilMusix.com – Jotha Akbhar – Ring Tones
TamilMusix.com – Kacheri Aarambam – Ring Tones
TamilMusix.com – Kadhal Solla Vantheyn – Ring Tones
TamilMusix.com – Kadhal2Kalyanam – Ring Tones
TamilMusix.com – Kettavan – Ring Tones
TamilMusix.com – Ko – Ring Tones
TamilMusix.com – Kutti – Ring Tones
TamilMusix.com – Masilamani – Ring Tones
TamilMusix.com – Naan Mahaan Alla – Ring Tones
TamilMusix.com – Naanayam – Ring Tones
TamilMusix.com – Paiyya – Ring Tones
TamilMusix.com – Pathinaaru – Ring Tones
TamilMusix.com – Plus 2 First Attempt – Ring Tones
TamilMusix.com – Raavanan – Ring Tones
TamilMusix.com – Reni Kunda – Ring Tones
TamilMusix.com – Sarvam – Ring Tones
TamilMusix.com – Sinthanai Sei – Ring Tones
TamilMusix.com – SMS – Ring Tones
TamilMusix.com – Theeratha Vilayattu Pillai – Ring Tones
TamilMusix.com – Thillalankadi – Ring Tones
TamilMusix.com – Vaamanan – Ring Tones
TamilMusix.com – Vaanam – Ring Tones
TamilMusix.com – Vinnai Thaandi Varuvaya – Ring Tones



Friday, May 6, 2011

Puzzles... Enjoy

http://www.gymnasiumforbrain.com/ has been developed with the intention of helping students and professionals to sharpen their mind. For years puzzles, mathematical or otherwise, have been very much part of our lives. It is believed that solving puzzles not only exercises one's brain but also aids lateral thinking. Also, it is a lot of fun. As we solve the puzzles, it would be fascinating to find that there is always more than one way to arrive at a solution.It serves as a guide to people who would like to have fun solving puzzles and exercise their brain. Let us say this is like a gymnasium for our brain. Go ahead and have fun !!!


Wednesday, May 4, 2011

Latest English Hit Songs 2011

Till The World Ends Britney Spears Song Download
Hold It Against Me Britney Spears Song Download
Inside Out Britney Spears Song Download
I Wanna Go Britney Spears Britney Song Download
How I Roll Spears Song Download
Beautiful Britney Spears Song Download
Seal It With A Kiss Britney Spears Song Download
The Big Fat Bass Britney Spears Song Download
Trouble For Me Britney Spears Song Download
Trip To Your Heart Britney Spears Song Download
Gasoline Britney Spears Song Download
Criminal Britney Spears Song Download
He About To Lose Britney Spears Song Download
Selfish Lyrics Britney Spears Song Download

Top 10 Songs in Hollywood

Friday, April 8, 2011

Marriage Invitation Online

A marriage is a beautiful occasion that we want to share with the world. What better way can there be than to do it Online through your own wedding website?. Invity.com is a wedding website platform with many beautiful themes to choose from, so that you can create your own personalized Indian ethnic online wedding invitation for inviting all your guest.

Click Here


Friday, March 18, 2011

Why do we say Cheers?



Because... we have five senses.... Eyes can see, Nose can smell, Tongue can taste, Hand can touch and feel what we hold on ... But Ears.... they need to hear... thats why we say cheers before drinking ! 


Search This Blog