Pages

Subscribe:

Wednesday, September 17, 2014

சம்சாரம்

சம்சார பாரம் என்ற சொல்லில் பொருள்:
ஆண்கள் நிரம்பிய கூட்டத்தில் பேச்சாளர் ஒருத்தர் கேட்டாரு, "இங்கு தன மனைவியுடன் சொர்க்கம் போக விரும்புவர்கள் கை தூக்குங்கள்".
ஒருவனை தவிர அனைவரும் கை தூக்கினாங்க, பேச்சாளர் கேட்டார், ஏனய்யா, உனக்கு மட்டும் மனைவியுடன் சொர்க்கம் போக ஆசையில்லையா?"
"என் மனைவி மட்டும் சொர்க்கம் போனால் போதும்."
ஏன் அப்படி சொல்கிறீர்கள்?
என் மனைவி சொர்க்கம் போய்  விட்டால், பூலோகமே எனக்கு சொர்க்கம் போல தான் இருக்கு,.


Image by FlamingText.com

Monday, September 15, 2014

எலுமிச்சை சாறு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...

எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது...

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...

எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது...

3. உடல் எடையைக் குறைக்கிறது...

எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ளஉணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பதுநிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள்,சுருக்கங்களைக்குறைக்கிறது.

7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது...

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. Stress ஐ குறைக்கிறது.

இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை.

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.


Image by FlamingText.com

சமையலில் செய்யக்கூடாதவ....செய்ய வேண்டியவை

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.



Image by FlamingText.com

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா

வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிய சில விசித்திரமான வழிகள்!!!

உதாரணமாக, திருமண மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி அதனை வயிற்றிற்கு நேராக வைக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் இருப்பது ஆண் என்றும், அதுவே முன்னும் பின்னும் ஆடினால், அது பெண் என்றும் அக்காலத்தில் எல்லாம் கணித்தார்கள். இதுப்போன்று நிறைய வழிகள் உள்ளன. அந்த வழிகள் பற்றி உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுத்துள்ளவற்றை படித்து தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.

* கர்ப்பிணிகளுக்கு வயிறு சிறியதாக இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை ஆண். ஆனால் வயிறு பெரியதாக இருந்தால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம்.

* இல்லாவிட்டால், தெற்கு திசையை நோக்கி நிற்கும் போது, வயிறானது கீழே இறங்கி காணப்பட்டால், ஆண் குழந்தை என்றும், அதுவே வயிறு பெரியதாக காணப்பட்டால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தமாம்.

* இந்த முறையின் படி பலருக்கு உண்மை நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், இதயத்தின் துடிப்பு நிமிடத்திற்கு 140+ ஆக இருந்தால், பெண் குழந்தை என்றும், 140- ஆக இருந்தால் ஆண் என்றும் அர்த்தம். ஆகவே இதயத் துடிப்பை கண்க்கிட்டு வயிற்றில் வளர்வது ஆணா, பெண்ணா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

* கர்ப்பிணிகளுக்கு புளிப்பு மற்றும் உப்புள்ள உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிட ஏங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே இனிப்பு சாப்பிட விரும்பினால், பெண் குழந்தை வளர்கிறது என்று அர்த்தம். இதுவும் அக்காலத்தில் கணிக்கும் வழிமுறைகளில் ஒன்று.

* சருமமானது பொலிவிழந்து, சோர்ந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை. ஆனால் கர்ப்பிணிகள் நன்கு அழகாக, பொலிவோடு காணப்பட்டால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை.

* பொதுவாக கர்ப்பிணிகள் சிலருக்கு காலையில் சோர்வு அதிகம் இருக்கும். ஒருவேளை அப்படி எதுவுமே இல்லாவிட்டால், அவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது என்று அர்த்தமாம்.

* வயிற்றில் பெண் குழந்தை இருந்தால், கர்ப்பிணிகள் சோர்வாகவும், வலிமையின்றியும் இருப்பார்கள். ஏனெனில் வயிற்றில் வளரும் பெண் குழந்தையானது, தாயிடமிருந்து, அழகு மற்றும் வலிமையை எடுத்துக் கொண்டு வளர்கிறதாம். மேற்கூறியவற்றை முயற்சி செய்து பாருங்கள். இவை நகைச்சுவையாக இருந்தாலும், பலருக்கு சாத்தியமாக உள்ளது.


Image by FlamingText.com

ஜோக்ஸ் -3

அவள்: ஏரோப்ளேன்ல 50 செங்கல் இருக்கு; ஒண்ணு கீழே விழுந்தா மிச்சம்?

இவன்: 49

அவள்: ஓகே. யானைய ஃப்ரிட்ஜ் உள்ள எப்டி வெப்பே?

இவன்: பழைய ஜோக்; கதவ திறந்து.

அவள்: அப்ப மானை?

இவன்: யானைய எடுத்துட்டு வெப்பேன்.

அவள்: காட்டுல சிங்க ராஜா விருந்து வெச்சார். ஒரு
மிருகம் மட்டும் போகல, எது?

இவன்: மான். அது ஃப்ரிட்ஜுக்குள்ளதான் இருக்கு.
அவள்: பாட்டி முதலைகள் இருக்கற ஆற்றை எப்டி
ஈஸியா கடந்தாள்?

இவன்: முதலைகள்தான் சிங்க ராஜா விருந்துக்கு போய்டுச்சே.

அவள்: ஆனாலும் அவள் ஆற்றை கடக்கைய்ல செத்துப்போனாள்.ஏன்?

இவன்: ஏன், தெரியலையே…
அவள்: அந்த செங்கல் அவ தலையில விழுந்துடுத்து.


Image by FlamingText.com

ஜோக்ஸ் -2

மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்!

கணவன் : ஏன்? என்னாச்சு..?

மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்!

கணவன் : சரி...!

மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி!

கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே!

மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)

(வாசலிலிருந்து வந்த மகன்...)
மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா!

அப்பா : ஏண்டா..?

மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!!

அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே.,அய்யய்யோ ...இப்ப நான் என்ன செய்வேன்..!எங்க போவேன்..!செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே.....இத கேட்க நாதியில்லையா....

Image by FlamingText.com

நம்பினால் நம்புங்கள்.

நம்பினால் நம்புங்கள்.

எவரெஸ்ட் உச்சியை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எட்டியிருகின்றனர். ஆழ்கடல் தரையைத் தொட்டவர்களோ இருவர் மட்டுமே.

மனித காதுகள் 130 டெசிபல் அளவு வரையிலுள்ள ஒளியை வலியின்றி கேட்கும்.

விண்ணில் சுட்டும் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள்களில் 40% இங்கிலாந்தை சேர்ந்தவை.

10% மக்களுக்கு கொசுக்களைக் கவர்ந்திழுக்கும் திறன் உள்ளது. அவர்களது வியர்வை வாசனையை 30 மீட்டர் தொலைவிலிருந்தும் கூட, கொசுக்களால் அறிய முடியும்.
1920 களிலேயே "கிறிஸ்டல் செட் ரேடியோ" தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மொபைல் போன்  உருவாக்குவது பற்றி விவாதிக்கபட்டிருன்தது.

சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற இனிப்பு கலந்த உணவுகளில் மனத்திண்மையை அதிகரிக்கும் தன்மை உள்ளது.

சுத்தமான நீரை, அது உறைவதற்கு முன், மைனஸ் 48டிகிரி செல்சியல் வரை குளிர்விக்க முடியும்.





Image by FlamingText.com

Thursday, March 20, 2014

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?

1. அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3. பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4. அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.

# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.


Image by FlamingText.com

ரோபோ

தொழிலதிபர் ஒருவர் ஒரு ரோபோ வாங்கினார். இந்த ரோபோ யாரு பொய் சொன்னாலும் பளாரென கன்னத்தில் அறையும்.

ஒரு நாள் இரவு தொழிலதிபரின் மகன் வீட்டுக்கு லேட்டா வந்தான்.

தொழிலதிபர் ;- ஏண்டா லேட்டு ?

மகன் ;- என் ஃப்ரெண்ட்ஸ் கூட படிச்சிட்டு வந்தேன் அதான்பா லேட்டு.

ரோபோ அவனை பளார்னு அறைந்தது. டேய். ஒழுங்கா உண்மைய சொல்லுடா இல்லைனா ரோபோட்ட இன்னும் அடி வாங்குவே.

மகன் ;- மன்னித்துவிடுங்கபா ஃப்ரெண்ட்ஸ் கூட படத்துக்கு போய்ட்டு வந்தேன்.

தொழிலதிபர் ;- டேய் நீயெல்லாம் உருப்புடுவேமாட்டேடா. உன் வயசுல நான் எப்புடி நல்லா படிச்சேன் தெரியுமா?
ரோபோ பளார்னு தொழிலதிபரை அறைந்தது.

இதையெல்லாம் பார்த்து புன்னகைத்தபடியே தொழிலதிபரின் மனைவி , என்னதான் இருந்தாலும் இவன் உங்களுக்கு பொறந்த பையன் அப்புடி தானேங்க இருப்பான்.

இந்த முறை ரோபோ பளாரென தொழிலதிபரின் மனைவியை அறைந்தது.

Image by FlamingText.com

குறட்டைத் தொல்லை

அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு குறட்டைத் தொல்லை என்பது தவிர்க்க முடியாத 'போனஸ்’ தொல்லை.குறட்டைத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாக்கப்படுப்பதைத் தவிர்த்து, ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் குறட்டையின் அளவு குறையும். காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்வதும் குறட்டைப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி. அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவோருக்கு எளிதில், குறட்டைத் தொல்லையும் வரும் வாய்ப்பு உள்ளது.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும்.
===============================
நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.

ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.

இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர்.காதுமூக்கு தொண்டை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரவிராமலிங்கம். அவர் கூறியதாவது:-

காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை  ஏற்படுகிறது.

முழு தூக்கம் இருக்காது:

யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது.

உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:

சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல்  ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

ஆபத்தான நோய்:

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டையை குறைக்க:

யோகாவில் உள்ள மூச்சுப் பயிற்சியும் மிகச் சிறந்தது. தினமும் 45 நிமிடம் யோகா, மூச்சுப் பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி போன்ற பழக்கங்களை, சிறு வயது முதலே கடைபிடிக்க வேண்டும். இதனால் இளவயது பருமனைக் குறைக்கலாம். திடீர் மரணத்தையும் தவிர்க்கலாம்.

Image by FlamingText.com

உண்மைக்கதை

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!

கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..

(மறுநாள் இரவு)

கணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண?

மனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு???

கணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…

மனைவி: ம்ம்… எப்படி டா!!!

கணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…

நல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…

மனைவி: நரகமா???

கணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது…. இப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி?????

(வெட்கத்தில் இன்னும்சில தேன்துளிகளை சிந்தியது, வண்ணத்து பூச்ச!

Image by FlamingText.com

கடலை டிப்ஸ்

ஆண்: (புதிதாக ஒரு பெண்ணிடம்) ஹலோ... எப்புடி இருக்கீங்க.. ஒரே ஒரு ரிப்ளை குடுங்க..

பெண் : நான் மத்த பொண்ணுங்க மாதிரி கெடயாது.. எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்...

ஆண் : வாவ்... சேம் பிஞ்ச்...நானும் உங்கள மாதிரி தான்,,, எந்த ஆம்பிளை கூடவும் பேச மாட்டேன்..

பெண் : ஹா ஹா... என் நம்பர் உங்களுக்கு எப்படி கெடச்சது ??

ஆண் : ஏர்டெல்லுக்கு போன் பண்ணி, இருக்குறதுலே அழகான ஒரு பொண்ணு நம்பர் குடுங்கன்னு கேட்டேன்... உங்க நம்பர் தான் குடுத்தாங்க.,,

பெண் : ஸ்மார்ட்.... ஆனா, இதுக்கு மேல நீங்க கால் பண்ணா நான் எடுக்க மாட்டேன்,, இது தான் கடைசி..

ஆண் : வெரி ஸ்மார்ட்.. நானும் இதுக்கு மேல உங்களுக்கு கால் பண்ண மாட்டேன்.. இது தான் கடைசி. இன்னைக்கு மட்டும் பேசுங்க...

பெண் : ஏன் இதுக்கு பிறகு கால் பண்ண மாட்டீங்க ??

ஆண் : எனக்கு சக்கர வியாதி.. ஸ்வீட் சாப்பிட கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு.. உங்க குரல் வேற நெம்ப ஸ்வீட்டா இருக்கு.. அதான்.

பெண் : ஹா ஹா.. யூ ஆர் நாட்டி..

ஆண் : நோ.. நோ.. ஐம் பிட்டி..

Image by FlamingText.com

Search This Blog