Pages

Subscribe:
Showing posts with label Lyrics. Show all posts
Showing posts with label Lyrics. Show all posts

Wednesday, July 25, 2012

கனவு

கனவுகளை கண் திறந்து
பார்க்கிறேன்
கனவுலக இருட்டில்.!

தப்பி செல்ல பார்க்கிறேன்
தவிப்பதை யார் உணர்வார்?

கண் திறந்தும் மூடவில்லை - கனவு
என்னை விட்டு போக மறுக்கிறது.
அவள் வந்து போன நிமிடம் முதல்.

 


கற்பனை

நாளை
என் வானில்
நிலவும் நீ தான்.

கையில் - என்
பிடிவாத
பிடிப்பும் நீ தான்.!

என் தோலில்
குடியேறும்
பொன்மாலை நீ தான்.!

இரவினில்
கனவினை தொலைத்திடும்
தொல்லை நீ தானடி.!

கண்ணில்
உடைந்திடும் கண்ணீர்.
கொஞ்சிடும் கன்னம் நீ தானடி.!

என் தோட்டத்தில் 
இல்லாதது 
உன் வாசத்தில் 
நான் கண்டேனடி..

என் இரவெல்லாம் 
காணாத நிழல் ஒன்று 
கண்டேனடி - என்னோடு நீ.!

Search This Blog