Pages

Subscribe:

Wednesday, July 24, 2013

ஜோக்ஸ் - Jokes

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!
----------------------------------------------------------------------------------------------------------
பெரிய விஷயங்களை விட,
சிறிய விஷயங்கள் நம்மை அதிகம் காயபடுத்தும்.
*
*
*
உதரணமாக,
*
*
*
குதிரை மேல உக்காரலாம்,
குண்டூசி மேல உக்கார முடியுமா?

ஹி ..ஹி ...ஹி....
----------------------------------------------------------------------------------------------------------
 
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க ... ப்ளீஸ்!
******************************
********

1.நாலு பேருக்கு நல்லது செஞ்சா தப்பில்லைன்றாங்களே... யார் அந்த நாலு பேர்?
2.செல்போன் யூஸ் பன்றது அதிகமாகிட்டதால அதோட விலைகள் குறைஞ்சதா சொல்றாங்க..அப்புறம் ஏன்யாஅரிசி பருப்பு விலைலாம் குறையலை?

3.எப்பொழுது கூலிங் பீர் கேட்டாலும் சாதா பீர் தருகிறாயே,சாதா பீர் கேட்டால் என்ன தருவாய்?

4.நாராயனசாமியோட 15நாளும், நத்தம் விஸ்வநாதனோட ஜூன் மாசமும் என்னிக்கு வரும்..?

5.நன்றிக்கு நாயை உதாரணம் காட்டும் மனிதனை சுயநலத்துக்கு உதாரணம் சொல்லிக் கொண்டிருக்குமோ நாய்கள்?

6.கடைக்காரனிடம் : "ஆறு ஹால்ஸ் முட்டாய் குடுத்தா, ஒரு கோழி முட்ட குடுப்பியா? அப்றம் என்னா டாஷ்க்கு எனக்கு சில்லறையா தர மாட்டேங்கர..?

7.காந்தி ஜெயந்தி, கிருஷ்ணர்ஜெயந்தி, ஹனுமன் ஜெயந்தி, மஹாவீர் ஜெயந்தி ... இந்த ஜெயந்தி உண்மையா யாரோட ஆளு ?

8.கடவுளை கும்பிட கோவிலுக்கு சென்றேன்.. வாசலில் பிச்சைக்காரன் என்னை கும்பிட்டான்.. நான் கடவுளா ?

9.சோத்துல மயிரு இருந்தா உறவு நெலைக்குமாம். சோறே மயிராட்டம் இருந்தா..?

யாரோ எங்கயோ எழுதியது .................நான் இல்ல.
----------------------------------------------------------------------------------------------------------
 
பெண்கள் மட்டும் சளைச்சவங்களா ???
*********************************
திருமணமான புதியதில்
==================


1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.

2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்

3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.

4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.

5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.

6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.

7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.

8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.

9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
===================


1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில் வந்து சொல்லிட்டு போனா என்ன?

2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??

3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?

4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.

5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.

6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.

7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!

8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?

9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=================

1. காதில் வாங்குவதே இல்லை.

2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்

3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.

4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.

5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.

6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.

7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட போது.

8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?

9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.
 
----------------------------------------------------------------------------------------------------------
மனைவி- சிகரெட் பிடிக்காதிங்க ரொம்ப நாத்தம் அடிக்குது

கணவன் சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டான்

மனைவி-பாக்கு போடாதிங்க

கணவன் பாக்கு போடுவதை நிறுத்தினான்

மனைவி-நீங்க வண்டிய ரொம்ப வேகமா ஓட்டுறிங்க, வேணாம் மெதுவாவே ஓட்டுங்க

கணவன் வண்டியை மெதுவா ஓட்டுவதை வழக்கமாகினான்

மனைவி- உங்க தலை முடி சீராக இல்லை, சீராக்குங்கள்

கணவன் தலை முடியை சீராக்கினான்

சில மாதங்களுக்கு பின்பு
.
.
.
.
.
.
.
.
மனைவி- நீங்க முன்ன மாதிரி இல்ல ரொம்பவே மாறிட்டிங்க

கணவன்………………………………………. ரொம்ப கஷ்டமப்பா :
 
----------------------------------------------------------------------------------------------------------
வக்கீல்:​வேணும்னுதா​னேஉன்ம​னைவி​யை கிணற்றி​​லே தள்ளி​னே?
குற்றவாளி:இல்ல....​வேணாம்னு
----------------------------------------------------------------------------------------------------------
பொண்டாட்டிக்கு பட்டுப்பொடவை வாங்கிக்கொடுத்தீங்களாமே?
காஞ்சி பட்டா ? ஆரணி பட்டா ?

அசிங்கப்பட்டு,அவமானப்பட்டு, கடன்பட்டு வாங்கினேன்
----------------------------------------------------------------------------------------------------------
"ஐ டோன்ட் நோ" ன்னா என்னடா அர்த்தம்!'

"எனக்கு தெரியாது!"

"அட! உனக்கு தெரியாதா?"
----------------------------------------------------------------------------------------------------------
 ஆறு முழுவதும்

போகுதாம் தண்ணி

பாத்ரூமுல

குளிக்குதாம் பன்னி.
----------------------------------------------------------------------------------------------------------
கள்ளக்காதலர்கள் நடுவில் சந்தேகம் வருவதை போன்ற காமெடி வேறெதுவும் இருக்க முடியாது :))
----------------------------------------------------------------------------------------------------------

உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?
அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.
----------------------------------------------------------------------------------------------------------
உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?
ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.
----------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: கட்டபொம்மனை எங்க தூக்குல போட்டாங்க??
பையன்: கழுத்துல சார்!
----------------------------------------------------------------------------------------------------------
ஜோ : நேத்து நான் டிரெய்ன்ல TTR-ஐ ஏமாத்திட்டேன் தெரியுமா?
நண்பர் : எப்படி ?
ஜோ : டிக்கெட் வாங்கினேன், ஆனா நான் பிரயாணமே செய்யலயே!
----------------------------------------------------------------------------------------------------------
வேலைக்காரிக்கும் ரோஸிக்கும் ஒரு நாள் சண்டை வந்துவிட்டது. வேலைக்காரியை வீட்டைவிட்டு அனுப்புவதென்று முடிவானது. வேலைக்காரிக்கு சரியான கோபம். போவதற்கு முன் நல்லா நாலுவார்த்தை ரோஸியைக் கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று முடிவு செய்தாள். ''வீட்டைப் பாத்துக்கிறதுலயும் சமைக்கிறதுலயும் நான் உன்னைவிட பெட்டர்னு உன் புருஷன் என்கிட்ட சொல்லியிருக்கான்.'' ரோஸி கண்டு கொள்ளவில்லை. ''செக்ஸிலயும் உன்னைவிட நான்தான் பெட்டர்னு தெரியுமா உனக்கு?'' ரோஸி அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள், ''இதையும் என் புருஷன்தான் சொல்லியிருப்பான்.'' வேலைக்காரி சொன்னாள், ''இல்லை, தோட்டக்காரன் சொன்னான்.''
----------------------------------------------------------------------------------------------------------
ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக கேப்டனிடம் இருந்து அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பதறியடித்து பயத்தோடு அவரவர் கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “என்னாங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.

“நான் சாகப் போறதில்லே... நம்ம பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி

பக்கத்து சீட்காரருக்கு ஒன்றுமே புரியவில்லை. “எப்படி? என்னா சொல்றீங்க நீங்க?” என்றார்.

“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.
----------------------------------------------------------------------------------------------------------
மனைவி:-_உங்களுக்கு_ராணின்னு_ஏற்கனவே_ஒரு_மனைவி இருக்கான்னு_கல்யாணத்துக்கு_முன்பே_ஏன்_என்கிட்டே_சொல்லலை..
கணவன்:-சொன்னேனே..._மறந்துட்டியா...
மனைவி:- எப்போ_சொன்னீங்க...நீங்க_சொல்லவே_இல்லை..
கணவன்:- உன்னை_ராணி_மாதிரி_வச்சி_காப்பாத்துவேன்னு_நான் சொல்லலை..
மனைவி:-????????
 
----------------------------------------------------------------------------------------------------------
'எங்க ஆத்தா ஆடு வளர்த்தா... கோழி வளர்த்தா...
ஆனா நாய் வளர்க்கலை...!''

''ஏன்...?''

''அதை அடிச்சுத் தின்ன முடியாதே...?'' 
----------------------------------------------------------------------------------------------------------
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா....?
ஒரு ஆண் கடுமையா உழைச்சா...... பொண்டாட்டியைக் கண்டுக்க
மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.
பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா…. அவளையே சுத்தி சுத்தி வரான்.
வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..
அது போகட்டும்.. ஒரு பொண்ணைப்
பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா, அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.
கண்டுக்காம போனா அழகை ரசிக்கத்தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.
எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..
திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..
பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத்
தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.
சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான்
ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா
"என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல
ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம்
பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..
ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க
வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.
சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த
ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு..
எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?"
ன்னு பூசல்….. இந்த
கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம்
அப்படின்னு சொல்லுவாங்க…. இது தப்பு பெண்கள்
நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம்
தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க....

----------------------------------------------------------------------------------------------------------
நபர் - 1 : நேத்து ராத்திரி என் வீட்டுக்கு ஒரு திருடன் வந்து திருடுறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தான்.

நபர் - 2: ஐயய்யோ! அப்புறம்…?

நபர் - 1 : எல்லா விளக்கையும் போட்டு நானும் அவன் கூடச் சேர்ந்து பணத்தைத் தேடினேன்.

நபர் - 2 : என்னது!

நபர் - 1 : ஆனாலும், கடைசி வரைக்கும் என் வீட்டுக்காரி பணத்தை எங்கே வெச்சிருக்கான்னு எங்களாலே கண்டுபிடிக்கவே முடியலை.

----------------------------------------------------------------------------------------------------------
ராஜீ(girl) : ஹலோ

ரவி(boy) : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?

ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?

ரவி : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..

ராஜீ : அடி வாங்கப் போற.

ரவி : எங்க.. அடி பாக்கலாம்..

ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?

ரவி : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்

ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..

ரவி : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..

ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??

ரவி : நீ தான் சொல்லனும்..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..

ராஜீ : என்ன சொல்றது??

ரவி : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?

ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.

ரவி : ம்ம்.. அப்புறம்..

ராஜீ : வேறென்ன??

ரவி : நீ தான் சொல்லணும்.

ராஜீ : தூக்கம் வரலயா?

ரவி : ஏன் உனக்கு வருதா?

ராஜீ : இல்லப்பா..

ரவி : பின்ன?

ராஜீ : சும்மா தான் கேட்டேன்..

ரவி : ம்ம்.. அப்புறம்??

ராஜீ : வேறென்ன??

ரவி : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??

ராஜீ : எப்பவும் போல தான்..

ரவி : ம்ம்..

ராஜீ : அப்புறம்??

ரவி : சொல்லு..

ராஜீ : என்ன சொல்லனும்?

ரவி : ஏதாவது சொல்லு..
.
.
அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர்.

----------------------------------------------------------------------------------------------------------

Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog