Pages

Subscribe:

Thursday, May 24, 2012

முகத்திற்கு அழகு - Facial

ஆண்களுக்கான சில டிப்ஸ்:

தக்காளி சாறுடன் தயிரை கலந்து முகத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவாகும்.
_______________________________________________________________________________
முகத்தில் சுருக்கம் மற்றும் புள்ளிகள் இருந்தால், புளித்த தயிரில் கடலை மாவு கலந்து பேஷியல் பண்ணவும்.
_______________________________________________________________________________
பச்சை உருளைக் கிழங்கு சாறு எடுத்து, முகத்தில் பூசி வந்தால் முகத்தில் ஜொலி ஜொலிப்பு கூடும்.
_______________________________________________________________________________
பப்பாளிப்  பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி  30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.
_______________________________________________________________________________
இஞ்சி சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டுவர முகப்பொலிவு பெறும்.
_______________________________________________________________________________
எலுமிச்சை சாறு பிழிந்த ஆவியை முகத்தில் பிடித்துவர முகம் பளபளப்பாக மாறும்.
_______________________________________________________________________________
முருங்கை வேர், துளசி வேர், அரைத்து பாலில் கலந்து பூசி குளித்துவர முகம் சிவப்பு நிறமாக மாறும்.
_______________________________________________________________________________
வாழைப் பழத்தோலின் உட்பகுதியால் முகத்தை நன்கு தேய்த்து பின்  முகம் கழுவினால் முகம் மென்மையாக மாறும்.
_______________________________________________________________________________
வாழைப்பழத்தை நன்கு குழைத்து அதில் முட்டையின் மஞ்சள் கருவைக் கலந்து வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
_______________________________________________________________________________
கடலை மாவு, பாலாடை,எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் 15 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
_______________________________________________________________________________
வயதால் முகத்திலும் உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக் கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும்.
_______________________________________________________________________________
சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல்சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.
_______________________________________________________________________________
கோதுமை மாவில் தயிர் சேர்த்து க்ளென்ஸராக பயன்படுத்தலாம்.
_______________________________________________________________________________
பீட்ரூட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீ­ரால் கழுவுங்கள். முகம் பொலிவு பெறும்.
_______________________________________________________________________________
* உடம்பு பளபளப்பும், புதுப்பொலிவும் பெற தினமும் காலையில் தண்ணீ­ரில் தேன் கலந்து குடியுங்கள்.
_______________________________________________________________________________



Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog