Pages

Subscribe:

Thursday, August 2, 2012

உயிர் மூச்சுவிடும் நேரம்!!

புத்தர் தன சீடர்களிடம், ''ஒரு மனிதனின் ஆயுட்காலம் எவ்வளவு?''என்று கேட்டார்.
ஒரு சீடர் எழுபது என்றார், இன்னொருவர் அறுபது என்றார், மற்றொருவர் ஐம்பது என்றார். அனைத்துமே தவறானது என்று சொன்ன புத்தர் ''ஒரு மூச்சு விடும் நேரம்" என்று புன்னகையுடன் சொன்னார்.
ஆச்சரியப்பட்ட சீடர்கள்,''மூச்சு விடும் நேரம் என்பது கணப் பொழுதுதானே?'' என்றனர்.''
உண்மை. மூச்சு விடும் நேரம் கணப்பொழுது தான்.ஆனால் வாழ்வு என்பது மூச்சு விடுவதில்தான் உள்ளது.ஆகவே ஒவ்வொரு கணமாக வாழ வேண்டும்.அந்தக் கணத்தில் முழுமையாக வாழ வேண்டும்''என்றார் புத்தர்.
பெரும்பாலானவர்கள் கடந்த கால மகிழ்ச்சியிலே மூழ்கியிருக்கிறார்கள். பலர் எதிர் காலத்தைப் பற்றிய பயத்திலும், கவலையிலும் வாழ்கிறார்கள். நிகழ்காலம் மட்டுமே நம் ஆளுகைக்குட்பட்டது. அதை முழுமையாக வாழ வேண்டும் என்று சொன்னார் புத்தர்.

நீதி : அந்த நிமிடத்தில் அற்புதமாக வாழ் என்கிறது ஜென்


Image by FlamingText.com

0 comments:

Post a Comment

Dear Visitor If you like my post please post your Comments

Search This Blog