உடைகள்
முன்பு ஒருநாள், அழகும் அவலட்சணமும் ஒரு கடற்கரையில் சந்தித்துகொண்டன.
'நாம் சேர்ந்து குளிப்போமா?' என்று அழகு கேட்க, அவலட்சணம் ஒப்புக்கொண்டது. இரண்டும், உடைகளை களைத்துவிட்டு கடலில் ஆனந்தமாக நீந்திக்குளித்தன.
சிறுது நேரம் கழித்து, குளித்தது போதும் என்று அவலட்சணம் கரையேறியது. அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்துகொண்டு தா வழியே சென்றுவிட்டது.
பின்னர், குளித்துத் திரும்பிய அழகு, தா உடைகளைக் காணாமல் தவித்துப்போனது. ஆடையில்லாமல் தெருவில் செல்வதற்கு அதற்குக் கூச்சமாக இருந்தது. ஆகவே, வேறுவழியில்லாமல், அவலட்சனத்தின் உடைகளை அணிந்துக் கொண்டு சென்றது.
அன்றுமுதல் இன்றுவரை, உலகத்தார் பலரும், ஆடைகளைவைத்து, அழகையும் அவலட்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளைப் பார்த்து முகம் சுளித்து, அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர், அழகின் ஆடைகளில் மயங்கி, அவலட்சணத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments