மகா மந்திர உச்சாடனம் செய்தல்
இந்த முறை உங்கள் உடலை ஒரு சக்தியாக உணர வைக்கின்றது.

இந்த முறை உங்கள் உடலை ஒரு சக்தியாக உணர வைக்கின்றது.
இந்த இரண்டாவது பகுதியில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து கைகளில் சின் (chin) முத்திரையை உருவாக்கி உங்கள் முட்டிப் பகுதியில் வைக்க வேண்டும்.
இந்நிலையில் உங்களால் எவ்வளவு நீளமாக முடியுமோ அவ்வளவு நீளமாக, எவ்வளவு ஆழமாக முடியுமோ அவ்வளவு ஆழமாக, செய்ய வேண்டும்.
தொடர்ச்சியாக உங்களின் மனம் பேசிக்கொண்டே இருகின்றது. வெளியே நாம் யாரோடும் பேசாமல் இருந்தாலும், உங்களுக்குள் எதாவது எதாவது ஒரு செயல் ஓடிகொண்டே இருக்கும்.
பொதுவாக மக்களுக்கு எந்த வித என்ன ஓட்டமும் இல்லாமல் அமர்ந்திருபதற்கு கஷ்டமான செயலாக இருக்கும். நீங்கள் தியானம் என்ற செயலில் இறங்கும் பொது, மனம் எதிர்ப்பு தெரிவிப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இந்த நேரத்தில்தான் நிறைய மக்கள் தியானத்தை நிறுத்திவிடுகிறார்கள். அவர்கள் உற்சாகம் இழந்து தியானமெல்லாம் நமக்கு சரிவராது என்று நினைத்து விடுகிறார்கள்.
ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு இந்த அனுபவம் தான் முதலில் கிடைக்கும். நீங்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடந்து அமிர்தத்தை எடுப்பதாகப் புராணத்தில் ஒரு கதை உள்ளது. அனால் கடலைக் கடந்த பிறகு முதலில் கொடிய விஷம் தோன்றியது அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்ககூடியதாக இருந்தது. அதற்கடுத்து நிறைய பொருட்கள் வெளிவந்த பிறகே முடிவில் அமிர்தம் வந்தது. இந்தக்கதை தியானத்தின் ஒரு முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments