முத்து
ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது - 'ஐயோ, என்னால் வலி தாங்கமுடியவில்லையே.'
'ஏன்? என்னாச்சு?' என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.
எனக்குள் எதோ ஒரு கனமான உருண்டை பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி.
இதைக் கேட்டதும், இரண்டாவது சிப்பிக்குப் பயங்கர சந்தோஷம். பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆஹா! கடவுளுக்கு நன்றி, எனக்கு அப்படி எந்த வலியையும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்!'
இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது - உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம், வலியை தாங்க விரும்பாத நீ, எப்போதும் எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்கவேண்டியது தான். ஆனால், இப்போது உன் நண்பனைச் சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அவனுக்குப் பெருமை தேடித்தரும்.
*********


0 comments:
Post a Comment
Dear Visitor If you like my post please post your Comments